Posts

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Image
 இந்த மட்டன் குடல் குழம்பு இட்லி மற்றும் தோசைக்கு நல்ல சைடிஸாக இருக்கும். மட்டன் என்றாலே அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகதான் இருக்கும். அதிலும் குடல் குழம்பு என்றால் செல்லவே வேண்டாம். தென் மாவட்டங்களில் சிறப்பான இந்த மட்டன் குடல் குழம்பை சென்னையில் போட்டி குழம்பு எனவும் அழைக்கின்றனர். தேவையான பொருள்கள்: வெங்காயம், தக்காளி, தேங்காய், கசகசா, இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, சோம்பு, மிளகாய்த்தூள் தேவையான அளவு, மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு, கொத்தமல்லி, புதினா என அனைத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அரைத்து வைக்க வேண்டியவை: துருவிய தேங்காயுடன் சோம்பு, பூண்டு மற்றும் கசகசாவை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். செய்முறை: 1. முதலில் ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதனை சுத்தம் செய்யும் போது வெந்நீரில் மஞ்சள் பொடியை போட்டு நன்றாக கழுவி எடுக்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள குடல் வாடை போகும். 2. அதன்பின் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். குக்கரில் கொஞ்சம் எண்ணெய்

கடந்த சில நாட்களாக தொண்டை சளியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க..!

Image
 தொடர் இருமல், தொண்டைப்புண், தொண்டை வீக்கம், தாடை வலி, தலைவலி, தலைபாரம் , மூக்கடைப்பு, அடிக்கடி தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கும். குளிர் அல்லது மழைக்காலம் வந்தாலே சளி, தொண்டை பிரச்சனைகள் வந்துவிடும். அப்படி சளி சேர்ந்துவிட்டாலே குறைந்தது 7 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் அதற்குள் நாம் படும் பாடு சொல்லி மாளாது. குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலம் என்பது நெருக்கடியான பருவநிலை எனலாம். அப்படி, சைனஸின் ஒரு வகைதான் தொண்டையில் சளி கட்டுதல். பெரும்பாலானோர் அவதிப்படுவதும் இந்த பிரச்சனையால்தான். இது வந்துவிட்டாலே குரலில் மாற்றம், தொண்டை வலி , வீக்கம் , எதையும் சாப்பிட முடியாது , கண்ணங்கள் , தாடைகளில் வலி என பல அறிகுறிகள் இருக்கும். இதனால் அன்றாட வேலைகளில் கூட ஈடுபட முடியாது. இவ்வாறு தொண்டையில் சளி கட்ட என்ன காரணம் தெரியுமா..? அதாவது குளிர்காலத்தில் காற்றின் மூலம் பரவும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது சைனஸ் பிரச்சனை உருவாகிறது. இந்த பாக்டீரியாக்கள் சைனஸ் அறைக்குள் சென்று சளி சவ்வுகளை வீங்க வைத்து அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால் மூக

பசி எடுப்பதில் பிரச்சினையா? அப்போது இதுல ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்!

Image
 பொதுவாக குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது பசி ஏற்படாது. குழந்தைகளின் வயிற்றுப்பகுதியில் மிகவும் சூடாக இருக்கும் போது மலச்சிக்கல் அல்லது செரிமாண பிரச்சினை ஏற்படும். இது போன்ற சூழ்நிலைகளில் குழந்தைகளுக்கு உணவளிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். இதன்போது மருத்துவ ஆலோசனைகளை நாடுவதை விட வீட்டில் இருக்கும் சில மூலிகை பதார்த்தங்களை கொண்டு ரசம், துவையல், சூப் போன்றவற்றை செய்துக் கொடுப்பதன் நிரந்தர தீர்வைப் பெற முடியும். அந்த வகையில் பசி ஏற்படாமல் மந்தமாக இருக்கும் போது இஞ்சி ஊறுகாய் செய்துக் கொடுத்தால் நிரந்த தீர்வைப் பெற முடியும். இதன்படி, இஞ்சி ஊறுகாய் தயாரிப்பது எவ்வாறு என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம். தேவையான பொருட்கள் இஞ்சி – கால் கிலோ புளி – எலுமிச்சை பழ அளவு பச்சை மிளகாய் – ஒன்று வெல்லம் – அரை கப் மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை கடுகு – அரை தேக்கரண்டி பெருங்காயம் – ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் – தேவையான அளவு உப்பு – சுவைக்கு ஏற்ப செய்முறை முதலில் புளியை எடுத்து சுமார் 1 மணித்தியாலத்திற்கு முன்னர் குளிர்ந்த நீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இஞ

காலை நேர உடற்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மை கிடைக்கின்றதா?

Image
 உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைப்பாடுகளுக்குப் பல வகையான உடற்பயிற்சிகள் உள்ளன. சில உடற்பயிற்சிகள் ஆரோக்கியமான உடல் நலத்துக்கும், சில உடற்பயிற்சிகள் நோயைக் குணப்படுத்தவும் உதவும் ஒரு நாளைக்குக் குறைந்தது 10 முதல் 50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.  அதிலும் காலைநேரத்தில் உடற்பயிற்சி செய்வது பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க. * காலைநேர உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி ஆகியவற்றால் மூளையில் உள்ள மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களான செரோடோனின், நோர்பினேப்ரைன், எண்டார்பின், டோபமைன் ஆகியவை அதிகரிக்கின்றன. இதனால், நாள் முழுவதும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. * 10 நிமிட 'வார்ம் அப்' பயிற்சி செய்தால் மூலமாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறையும். இதய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகும். எனவே, ஒரு நாளைக்குக் குறைந்தது 10 முதல் 50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபடலாம். * உடற்பயிற்சி செய்வதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரி

அடிக்கடி சிக்கன் சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! சுவையோடு ஆரோக்கியம்...

Image
 சிக்கன் சூப் ருசிப்பது என்றால் பலருக்கும் அலாதி பிரியம் இருக்கும்..! சிக்கன் சூப் நினைவாற்றலை அதிகரிப்பதோடு உடலுக்கும் உற்சாகம் தரும் என்று கூறியுள்ளது ஒரு ஆய்வு முடிவு. காய்ச்சல் மழைகாலத்தில் பலரும் சளி, காய்ச்சலால் அவதிப்படுவர், அந்த சமயத்தில் சிக்கன் சூப் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். விரைவாக சளியை அகற்றும், உடல் வலியை போக்கவும் உதவி புரியும் மிளகு கொஞ்சம் தூக்கலாக சேர்த்து மூக்கு மற்றும் கண்களில் நீர் வழிய பருகும் சிக்கன் சூப் மூக்கடைப்பை நீக்கி சுவாசத்தை சீராக்கிவிடும். புரத சத்து புரத சத்து நிறைந்த சிக்கன் சூப் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை அளித்து சோர்வை நீக்கும். சிக்கன் சூப், உருளைக்கிழங்கு மசியல், பாலாடைக்கட்டியுடன் மக்ரோனி போன்றவை நலமளிக்கும் உணவுகள். தனிமையால் ஏற்படும் வெறுப்பை, விரக்தியை அவை போக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த உணவுகள் ஒருவேளை ரத்த நாளங்களுக்கு நன்மை பயப்பதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், சலிப்பான உணர்வுகளைத் தணிய வைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.  

இந்த இலையை கொதிக்க வைத்து குடிச்சு பாருங்க!! உடலுக்கு பல அற்புத நன்மைகள் தருமாம்....

Image
 நாம் அன்றாடம் பயன்படுத்தும் எலுமிச்சையில் பல அற்புத நன்மைகள் ஒளிந்துள்ளது. எலுமிச்சை மட்டுமல்ல, அதன் இலைகளும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதனை கொதிக்க வைத்து அதன் நீரை உட்கொள்வது உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகின்றது. ஏனெனில் இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி1 , ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அந்தவகையில் தற்போது அதனை எப்படி பயன்படுத்தலாம்? அதன் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.  எப்படி தயாரிப்பது?  முதலில் தண்ணீரை சூடாக்கி அதில் எலுமிச்சை இலைகளை கொதிக்க வைக்கவும். இலைகளை நன்கு வேகவைக்கும்போது, ​​​​அவற்றின் நிறம் அழகற்றதாக மாறும், பின்னர் இந்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். இப்போது இந்த தண்ணீரில் சிறிது தேன் கலந்து குடிக்கவும். நன்மை  * எலுமிச்சை இலைகளின் சாறு சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைக்கிறது. * உங்களுக்கு அடிக்கடி தலைவலி பிரச்சனை இருந்தால், எலுமிச்சை இலை தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். இந்த நீர் ஒற்றைத் தலைவலிக்கும் நிவாரணம் அளிக்கும். * எலுமிச்சை இலைகளின் நீர் மன அழு

உங்கள் உதடு ரொம்ப வறண்டு போகுதா? இதனை தடுக்க அட்டகாசமான சில டிப்ஸ் இதோ உங்களுக்காக!!!

Image
 பொதுவாக குளிர்காலம் வந்துவிட்டாலே உதடுகள் மிகவும் வறண்டு போய் பிளவுபட ஆரம்பித்து விடும். சில நேரங்களில் உதடுகள் சிவந்து போய் வலி கூட ஏற்படும். என்ன தான் உதட்டிற்காக நிறைய அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும் இதனை எளிதில் சரி செய்வது கடினம் தான். இதற்கு ஒரு வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே வறண்ட உதடுகளை சரி செய்ய முடியும். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.   * சர்க்கரையை எடுத்து, அதில் தேன் சேர்த்து கலந்து அதை உதடுகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரால் உதடுகளை மென்மையாக தேய்த்துக் கழுவி வரலாம்.  * உங்கள் வீட்டில் ஸ்ட்ராபெர்ரி அல்லது கிவி இருந்தால், அதை மசித்துக் அதில் சில துளிகள் வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து கலந்து பின்பு அதில் சிறிது காபித் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த கலவையை இரவு தூங்கும் முன் உதடுகளில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.  * 1 டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 5-6 துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து அதை உதட

ஆற்று மீன் VS கடல் மீன் ! எதில் ஊட்டச்சத்து அதிகம்? அவசியம் தெரிஞ்சிகோங்க.......

Image
 பொதுவாக மீன் உணவு உணவு அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தாக கருதப்படுகின்றது.   மீனில் புரதச் சத்து மிகவும் அதிகம், மற்றும் கொழுப்பு மிகவும் குறைவு. இதனால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஓர் உணவாக மீன் உள்ளது.  அதிலும் கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன்கள் போன்றவை வளர்வது வெவ்வேறு சூழலில் உள்ள நீர் நிலைகளில்தான் என்றாலும் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகின்றது.  இருப்பினும் இதில் இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னென்ன என்று இங்கே தெரிந்து கொள்வோம்.   ஆற்று மீன் ஆற்று மீன், ஏரி மீன்கள் எல்லாம் ஆறு, குளம், ஏரிகளில் உள்ள புழு, பூச்சிகளை உணவாக உட்கொண்டு வளரும்.  ஆற்று மீன்களில் இந்தக் கொழுப்பு அமிலம் காணப்படுவதில்லை. குறிப்பாகக் கடல் மீன்களில் பெரிய மீன்களைவிடச் சிறிய மீன்களில்தான் இந்த ஒமேகா-3 நிறைந்துள்ளது.   உதாரணமாக மத்தி, காணங்கெளுத்தி, சங்கரா போன்ற மீன்களில் ஒமேகா-3 அதிகம் உள்ளது. இந்த ஒமேகா-3 உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் மிகவும் சிறந்தது. இது உடலில் ரத்தம் உறையாமல் பார்த்துக்கொள்கிறது.  இதயம், மூளை போன்றவற்றின் ஆரோக்கியத்துக

படர் தாமரை ஏற்படுவதற்கான காரணங்கள்...

Image
 வட்ட வட்டமாகத் தலையில் சொட்டை விழுந்திருக்கும். அரிப்பு ஏற்படுவதும் இயல்பு. இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிப்போருக்கு தோலில் தோன்றும் நோய்களுள் 'பங்கஸ்' என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம். மக்கள் தொகை பெருக்கம், பொது சுகாதாரக் குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற காரணங்களால் காளான் நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது. தோலில் ஏற்படுகிற காளான் நோய்களில் முதலிடம் பெறுவது தேமல் நோய். 'மலேசேசியாபர்பர்' எனும் கிருமியால் இந்த பாதிப்பு உண்டாகிறது. இது குழந்தைகள் முதல் முதியோர்வரை எவரையும் தாக்கலாம் என்றாலும், நடைமுறையில் இளம் வயதினரையே அதிக அளவில் பாதிக்கிறது. மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை, கால் போன்ற இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக, திட்டுத்திட்டாகப் படைகள் போன்று காணப்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. தேமல் படையை சுற்றி ஓர் எல்லைக்கோடு காணப்படுவதும். அரிப்பு ஏற்படுவதும் இயல்பு. வியர்வை அதிகம் சுரப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும

அடிக்கடி கோபப்பட்டால் முகத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கும்...

Image
 முகப்பருக்களை கிள்ளாதீர்கள். தூசு மற்றும் மாசு மூலம் சருமப் பொலிவு குறையும். இயல்பான அழகை மேம்படுத்திக்காட்டுவதே மேக்கப். உங்கள் சரும நிறம், முகவடிவம் போன்றவற்றுக்கு தகுந்தவாறு மேக்கப் செய்துகொள்வது, உங்களுடைய தோற்றத்தை சிறப்பாகக் காட்டும்.   தூசு மற்றும் மாசு மூலம் சருமப் பொலிவு குறையும். எனவே அவற்றை முடிந்தவரை தவிர்க்கவும். வாரத்துக்கு ஒரு முறை வீட்டிலேயே கடலை மாவு, சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ரோஜா பன்னீர் கலந்து முகத்தில் பூசி மென்மையாக தேய்த்துக் கழுவவும். இதன்மூலம் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும்.   குறிப்பிட்ட இடைவெளியில் சிறந்த அழகுக்கலை நிபுணர் மூலம் பேசியல் செய்துகொண்டால் முகப்பொலிவை பாதுகாக்கலாம்.   தொடர்ந்து ஏ.சி அறையில் இருப்பவர்கள் சரும பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்த சூழலில் சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய் தன்மை குறைந்து வறட்சி அடையும். எனவே சருமத்தில் அவ்வப்போது மாய்ஸ்சுரைசர் பூசிக்கொள்வது நல்லது. போதுமான தண்ணீர் குடிப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.   முகப்பருக்களை கிள்ளாதீர்கள். இதனால் அவை நிரந்தரமான வடுக்களாக மாறிவ

உடலுக்கு ஆரோக்கியமான நொய் அரிசி உப்புமா......

Image
  ரவை உப்புமாவா என்று முகம் சுளிப்பவர்கள் கூட இந்த உப்புமாவை விரும்பி சாப்பிடுவார்கள். சத்துக்கள் நிறைந்த இந்த உப்புமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். அரிசி நொய் தயாரிக்க:  பச்சரிசி – 1 கிலோ  துவரம்பருப்பு- கால் கிலோ  மிளகு, சீரகம்- தலா 10 கிராம்  பெருங்காயம் கட்டி- சிறிய கோலி அளவு. செய்முறை:  பச்சரிசியைச் சுத்தம் செய்து நன்றாக கழுவி ஈரம் போக வெயிலில் காயவைக்கவும். துவரம் பருப்பையும் சுத்தம் செய்து கழுவி காய வைக்கவும்.  நன்றாகக் காய்ந்ததும் இரண்டையும் கலந்து மிளகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து மிஷினில் நொய்யாக உடைத்து வைத்துக் கொள்ளவும். ஆறு மாதங்கள் வரை இந்த அரிசி நொய் கெடாமல் இருக்கும். தேவையான பொருள்கள்:  நொய் அரிசி - 1 கப்,  தாளிக்க:  கடுகு- 1 டீஸ்பூன்,  உ.பருப்பு, க.பருப்பு – 1 தேக்கரண்டி,  வெந்தயம், சீரகம்- தலா 3 டீஸ்பூன்  வரமிளகாய் -2  பெருங்காயம், நல்லெண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு. செய்முறை:  வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு சேர்த்து பொரிந்ததும், உ.பருப்பு, க.பருப்பு, சீரகம், வரமிளகாய், வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் ஒருகப் அரிசி நொய்க்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து

1300 கலோரிகளை எரிக்கும் 10 நிமிட ஸ்கிப்பிங் பயிற்சி.......

Image
 உடல் வலிமையை அதிகரிக்கும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரையும். ஸ்கிப்பிங் பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடைகுறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங். உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக்கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற கோளாறுகள் நீங்குகின்றன. 10 நிமிட ஸ்கிப்பிங் பயிற்சி, எட்டு நிமிடங்களில் ஒரு மைல் தூரம் ஓடியதற்குச் சமம். ஒரு மணி நேரத்தில் 1300 கலோரிகள் வரை எரிக்கலாம். உடல் வலிமை அதிகரிக்கும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரையும். கூன் விழாமல் தடுக்கலாம்.  உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன்,இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது. கை, கால், தொடைப்பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. தொடர்ச்சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது குறைவதுடன் முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன.  இரத்த ஓட்டம் சீராகிறது. ஆரோக்கிய

நோய் எதிர்ப்பு சக்தியை சூப்பராக வேலை செய்ய வைக்கும் சூப்! 10 நிடங்களில் செய்யலாம்...

Image
 பொதுவாக வீடுகளில் வாரத்திற்கு ஒரு முறை சரி கஞ்சி மற்றும் சூப் வகைகள் செய்து வீட்டிலுள்ளவர்களுக்கு கொடுப்பது நல்லது. இது அதிக ஊட்டச்சத்துக்களையும் நோய் நிலைமைகளுக்கான நிவாரணத்தை தருகிறது இதன்படி, அவையனைத்தையும் ஒரே தரக்கூடிய கீரை வகைகளுள் வல்லரையும் ஒன்று. இதனை உணவில் சேர்ப்பதன் மூலம் பல நோய் நிலைமைகள் சரி செய்யப்படுகிறது. உதாரணமாக உடவிலுள்ள தேவையற்ற கட்டிகள், வயிற்றுப் புண்கள், செரிமாண பிரச்சினைகள் மற்றும் சளி பிரச்சினை போன்றவைகளை குறிப்பிடலாம். ஏனெனில் வல்லாரையில் அதிகமான இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் போன்றவைகள் உள்ளடங்கியிருப்பதால் இரத்தத்தை சுத்தப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. அந்த வகையில் வல்லாரைக் கொண்டு நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சூப்பரான சூப் எவ்வாறு செய்வது குறித்துதெரிந்துக் கொள்வோம். தேவையான பொருட்கள் வல்லாரை கீரை - 1 கப் பாசிப்பருப்பு - 1 டீஸ்பூன் பூண்டு - 4 சின்னவெங்காயம் - 10 மிளகு - சிறிது சீரகம் - சிறிது வெண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு பட்டை - 1 லவங்கம் - 1 10 நிமிடங்களில் செய்வது எப்படி

பத்தே நிமிடத்தில் காலிஃப்ளவர் சுக்கா! சைவ பிரியர்களே இனி சுடச் சுட ருசிக்கலாம்...

Image
 பொதுவாக காய்கறி வகைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த காயாக காலிஃப்ளவர் பார்க்கப்படுகிறது. இதனைக் கொண்டு பொரியல், கறி, பக்கோடா மற்றும் சிப்ஸ் வகைகளை சமைக்கலாம். இந்த பதிவில் காலிஃப்ளவரை வைத்து மட்டன் சுக்காவிற்கு இணையான சுவையில் காலிஃப்ளவர் சுக்கா எவ்வாறு செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம். தேவையான பொருட்கள் காலிஃப்ளவர் – 1 தக்காளி – 3 வெங்காயம் – 2 இஞ்சி பூண்டு விழுது – 2தேக்கரண்டி மிளகாய் தூள் – 1தேக்கரண்டி தனியா தூள் – 2தேக்கரண்டி சீரகத்தூள் – 1 தேக்கரண்டி மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி கரம்மசாலா தூள் – அரை தேக்கரண்டி கொத்தமல்லி, புதினா – சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவையான அளவு தாளிப்புக்கு தேவையானப் பொருட்கள் பட்டை – 1 கிராம்பு – 2 ஏலக்காய் – 1 பிரியாணி இலை – 1 பெருஞ்சீரகம் – 1 தேக்க்கரண்டி கறிவேப்பிலை – கைப்பிடி தயாரிப்பு முறை முதலில் காலிஃப்ளவரில் தேவையற்றப் பொருட்களை அகற்றிவிட்டு அதில் உப்பு மஞ்சள் சேர்த்து 10 - 15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இவ்வாறு செய்வதால் காலிஃப்ளவரிலுள்ள கண்ணுக்கு தெரியாத புழுக்கள் அழிவடைகிறது, இதன் பின்னர் சுக்காவிற்கு தேவையான பொருட்களை தயார் செய்ய வேண

எடையை மின்னல் வேகத்தில் குறைக்கும் ஆட்டு ரத்த பொரியல்! வெறும் பத்தே நிமிடத்தில் செய்து ருசிக்கலாம்.....

Image
 ஆட்டு ரத்தப் பொரியல் பலருக்கு பிடித்த அசைவ உணவு. அசைவ உணவுகளை சாப்பிட்டால் பொதுவாக எடை அதிகரிக்கும். ஆனால் ஆட்டு ரத்தப் பொரியல் எடையை குறைக்க உதவி புரிகின்றது. ஆட்டு ரத்தத்தில் பி வைட்டமின் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. கூடுதலாக, இதில் புரோட்டீன்கள் அதிகமாகவும், மாட்டிறைச்சியை விட நிறைவுற்ற கொழுப்பு குறைவாக இருப்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் அருமையானது. ரத்தப் பொரியலை இந்த வாரம் வீட்டில் செய்து சாப்பிடுங்கள். அதுவும் கிராமத்து ஸ்டைலில் ரத்த பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் ஆட்டு ரத்தம் – 1 கப்  பூண்டு - 1 பல் (தட்டியது) சின்ன வெங்காயம் - 15  பச்சை மிளகாய் - 3   மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்  மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்   சீரகப் பொடி - 1 டீஸ்பூன்   கறிவேப்பிலை - சிறிது  உப்பு - சுவைக்கேற்ப துருவிய தேங்காய் - 1 கப்  எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்  கடுகு - 1/2 டீஸ்பூன்   உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்   சீரகம் - 1/2 டீஸ்பூன் செய்முறை பாத்திரம் ஒன்றில் முதலில் ஆட்டு இரத்தத்தை கையால் நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்னர் ஒர

இழந்த சிகப்பழகை 30 நிமிடங்களில் பெற வேண்டுமா? புதிய ப்ளீச்சிங் முறை.....

Image
 பொதுவாக பெண்களுக்கு முக அழகு என்பது முக்கியமான ஒன்று. இதனை 16 தொடக்கம் 35 வரையிலான வயதில் இருக்கும் பெண்கள் அக்கறை காட்டுவார்கள். மேலும் முக அழகை பேணுவதற்கு தொழிநுட்ப சாதனங்கள் மற்றும் தொழிநுட்பத்தினால் இரசாயன பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் கிரீம்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து இது போன்ற இரசாயன கவலைகளாலும், முறையாக முகத்தை பராமரிக்காததாலும் முகம் பொலிவிழந்து கருமையடைகின்றன. இதனை அழகுப்படுத்தும் நிலையங்களில் சிகிச்சைப் பெறுவதை விட வீட்டிலுள்ள சமைக்கும் பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் மாஸ்க்களை உபயோகிப்பதால் நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்வதோடு முகத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் பெற்றுக் கொள்ள முடிகிறது. அந்த வகையில் கருமையை போக்கும் பேஸ் மாஸ்க் எவ்வாறு தயாரிப்பது குறித்து தெரிந்துக் கொள்வோம். தேவையான பொருட்கள் புளி - தேவையானளவு எலுமிச்சம் பழச்சாறு - 1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 மேசைக்கரண்டி அரிசி மாவு - 1,1/2 மேசைக்கரண்டி தேன்- 1/4 மேசைக்கரண்டி தயாரிப்பு முறை முதலில் சிறிய பவுலில் வெந்நிர் 1 கப் அளவு ஊற்றி, அதில் நன்றாக புளியை கரைத்துக் கொள்ளவும். பின்னர் எலுமிச்

இரவு டின்னருக்கு சப்பாத்தியுடன் இந்த வெண்டைக்காய் மசாலாவை செய்து பாருங்க.. சுவை அப்படி இருக்கும்.!

Image
 இரவு டின்னருக்கு என்ன சமைப்பது என்று குழப்பமாக இருக்கா.? கவலைய விடுங்க இந்த வெண்டைக்காய் மசாலாவை சாப்பாத்தியுடன் செய்து சாப்பிட்டு பாருங்க.. ஈஸியான ரெசிபி இதோ.. இரவு டின்னருக்கு பெரும்பாலானோர் வீட்டில் சப்பாத்தி செய்வது வழக்கம். ஆனால் சப்பாத்தியுடன் என்ன சைடிஷ் செய்வது என்பது குழப்பமாகவே இருக்கும். இந்த  வெண்டைக்காய் மசாலாவை செய்து பாருங்கள்.  சுவையில் இதுவரை செய்த மற்ற சப்பாத்தி சைடிஷை எல்லாம் மிஞ்சிவிடும். தேவையான பொருட்கள் : பிஞ்சு வெண்டைக்காய் - 1/2 கிலோ முந்திரி பேஸ்ட் - 1 கப் ( முந்திரியை வேகவைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும் ) அரைத்த தேங்காய் - 1 கப் பெரிய வெங்காயம் - 1 ( சிறியதாக நறுக்கியது) தக்காளி பேஸ்ட் - 2 கப் (தக்காளியை வேகவைத்து தோலுரித்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1  டேபிள் ஸ்பூன் பட்டை - 1 துண்டு மல்லித்தூள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் வெண்ணெய் - 1/4 கப் எண்ணெய் - 1/2 கப் உப்பு - தேவையான அளவு செய்முறை :  வெண்டைக்காயை சாய்வாக வைத்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கடா

சளிக்கு சூப்பர் மருந்து.. பாலிவுட் நடிகைகள் விரும்பும் கேரள கஞ்சி! செய்முறைக்கு சிம்பிள் டிப்ஸ்!

Image
  தண்ணீர் காய்கறிகள், பழங்கள் என்று கூறுவதைப் போலவே இந்த கஞ்சியில் 80 – 90% தண்ணீர்தான் இருக்கிறது. எனவே இது உடலில் நீர்ச்சத்தை தக்க வைப்பதற்கு பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. பொதுவாகவே சைவ உணவுகள் என்று வரும் பொழுது அவை அனைத்துமே ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவாக காணப்படும். பலவிதமான காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், பழங்கள் என்று அனைத்து சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவாக காணப்படும். தலசேரி கேர்ல் என்று பிரபலமாக அறியப்படும் மரீனா பாலகிருஷ்ணன் என்ற பெண் சமீபத்தில் கேரள சைவ உணவைப் பற்றி பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்தப் பெண் பாலிவுட் நடிகைகளுக்கு, தனக்கு மிகவும் விருப்பமான, ஊட்டச்சத்து நிறைந்த, உடலுக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் கஞ்சியை அனுப்பியிருக்கிறார்! கஞ்சியா? கஞ்சியில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கஞ்சி என்பது சாதம் வடித்த கஞ்சி, சத்து மாவு, ராகி, ஆகியவற்றில் செய்யப்படும் ஒரு உணவாகும். ஆனால், கேரளாவை பொறுத்தவரை இது ஒரு முழு வெஜிடேரியன் மீல் என்று கூறப்படுகிறது. பாலிவுட

பிரசாதம்தான் முக்கியம்... இந்திய கோயில்களின் 5 வித்தியாசமான பிரசாதங்கள் இதோ!

Image
  பெருமாள் கோவில் புளியோதரையும், அனுமார் கோவில் மிளகு வடையும் வீட்டில் சாப்பிட்டால் அவ்வளவு ருசிக்காது. கோவிலில் கொடுப்பதே தனி சுவை தான்.  பக்தியால் கோயிலுக்கு செல்லும் மக்களின் மத்தியில் என்னை போன்ற சிலர் பிரசாதம் சாப்பிடவே கோவிலுக்கு செல்வர். பெருமாள் கோவில் புளியோதரையும், அனுமார் கோவில் மிளகு வடையும் வீட்டில் சாப்பிட்டால் அவ்வளவு ருசிக்காது. கோவிலில் கொடுப்பதே தனி சுவை தான். பாய்ஸ் பட செந்தில் கண்முன் வந்துபோனாலும் தப்பில்லை. அப்படி வித்தியாசமாக தனித்துவமான கோயில் பிரசாதங்களை பாப்போம். பூரி ஜெகநாதர் கோவிலை அன்ன க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். நாட்டின் மிகப்பெரிய அன்னதான கூடம் அங்கு தான் உள்ளது. எந்நேரம் போனாலும் சாப்பாடு உண்டு என்பது அங்கு உண்மை என்று புரியும். அந்த கோவிலில் வழங்கும் காஜா இனிப்பின் தித்திப்பு நாக்கை விட்டு போகவே நாலு நாள் ஆகும். கடலை மாவு, நெய், சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி பருப்பு எல்லாம் போட்டு நம்ம ஊர் லாலா ஸ்வீட் கடைகளில் செய்தால்கூட அப்படி ஒரு தனித்துவ சுவை வராது. லட்டு என்றாலே அது திருப்பதி லட்டுதான். அதன் சுவையும் மணமும் அந்த குபேரனையே கடனாளி ஆக்கிவிடும்

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!