நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடலுக்கு ஆரோக்கியமான நொய் அரிசி உப்புமா......

 ரவை உப்புமாவா என்று முகம் சுளிப்பவர்கள் கூட இந்த உப்புமாவை விரும்பி சாப்பிடுவார்கள்.

சத்துக்கள் நிறைந்த இந்த உப்புமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


அரிசி நொய் தயாரிக்க: 

பச்சரிசி – 1 கிலோ 

துவரம்பருப்பு- கால் கிலோ 

மிளகு, சீரகம்- தலா 10 கிராம்

 பெருங்காயம் கட்டி- சிறிய கோலி அளவு.

செய்முறை: 

பச்சரிசியைச் சுத்தம் செய்து நன்றாக கழுவி ஈரம் போக வெயிலில் காயவைக்கவும். துவரம் பருப்பையும் சுத்தம் செய்து கழுவி காய வைக்கவும்.

 நன்றாகக் காய்ந்ததும் இரண்டையும் கலந்து மிளகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து மிஷினில் நொய்யாக உடைத்து வைத்துக் கொள்ளவும். ஆறு மாதங்கள் வரை இந்த அரிசி நொய் கெடாமல் இருக்கும்.

தேவையான பொருள்கள்: 

நொய் அரிசி - 1 கப், 

தாளிக்க: 

கடுகு- 1 டீஸ்பூன், 

உ.பருப்பு, க.பருப்பு – 1 தேக்கரண்டி, 

வெந்தயம், சீரகம்- தலா 3 டீஸ்பூன் 

வரமிளகாய் -2 

பெருங்காயம், நல்லெண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.

செய்முறை: 

வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு சேர்த்து பொரிந்ததும், உ.பருப்பு, க.பருப்பு, சீரகம், வரமிளகாய், வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் ஒருகப் அரிசி நொய்க்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். 

தண்ணீர் கொதித்ததும் நொய் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு இருபது நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். 

இப்போது சூப்பரான நொய் அரிசி உப்புமா ரெடி.










Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!