Posts

Showing posts from May, 2021

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

டீன் ஏஜ் பெண்கள் விரும்பும் ‘ப்ளாங்க்' உடற்பயிற்சி

Image
டீன் ஏஜ் பெண்களின் விருப்பமான உடற்பயிற்சிகளில், ‘ப்ளாங்க்’ வகைக்கு மிக முக்கிய இடம் உண்டு. அதிலும் ‘ப்ரோன் ப்ளாங்க்’ உடற்பயிற்சியை, வீட்டில் இருந்தபடியே செய்து, உடல் ஆரோக்கியத்தை பேணலாம். அது என்ன ப்ரோன் ப்ளாங்க் என்கிறீர்களா...? இது `ப்ளாங்க்' வகைப் பயிற்சியின் நீட்சிதான். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கான `ஸ்பைடர்மேன் ப்ளாங்க்' இதனோடு தொடர்புடையதுதான்.உடல் எடையைக் கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கும், கலோரிகளை குறைக்க விரும்புபவர்களுக்கும் இது உதவும். இந்தப் பயிற்சியை உடற்பயிற்சிக்கு முன் வார்ம்-அப் பயிற்சியாகவோ, அன்றாடப் பயிற்சிகளில் ஒன்றாகவோ தினமும் செய்யலாம். இடுப்புக்கு மேலிருக்கும் பகுதிகளுக்கும், வயிற்றுப் பகுதிக்கும் இந்தப் பயிற்சி வலு சேர்க்கும். முக்கியமாக இதயச் செயல்பாடும், ரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவும். இதை எப்படிச் செய்வது? தரையில் குப்புறப்படுத்துக்கொண்டு, முழங்கையை மடித்து ஊன்றி, கால் விரல் களையும் ஊன்றி, உடலை மேல்நோக்கி உயர்த்தவும். தரையில் இருந்து உடல் பகுதி முழுவதும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். அடுத்ததாக, வலது பக்க கை மூட்டுக்கு அர

புயலை கணிக்கும் ‘புதிய’ வானிலை அறிவிப்பாளர்கள்

Image
வானிலை ஆராய்ச்சி கணிப்புகள் இல்லாத காலத்திலே சுற்றி இருக்கும் இயற்கையின் மாறுதலை வைத்துத்தான் மழை, புயல் வருவதை நம் முன்னோர்கள் யூகித்திருக்கிறார்கள். இயற்கையின் மாற்றங்களை பறவைகளும் இதர உயிரினங் களும்கூட உணர்த்துகின்றன. புயல், வெள்ளம், பூகம்பத்தை அவைகள் எப்படி உணர்த்தும் தெரியுமா? பறவைகள் பறக்கும் உயரத்தைவைத்து காலநிலையை கணிக்கலாம். உயரமாக அவை பறந்துகொண்டிருந்தால், பருவநிலை இயல்பாக இருக்கிறது என்று அர்த்தம். பறவைகள் தாழ்வாக பறந்தாலோ அல்லது பறக்கவே இல்லை என்றாலோ மழையோ அல்லது புயலோ வரப்போகிறது என்று அர்த்தம். சிட்டுக் குருவிகள் மண்ணில் விளையாடினால் மழை வரப்போகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். சேவல் வழக்கத்துக்கு மாறாக அதிகாலை தவிர்த்து வேறு நேரத்தில் தொடர்ந்து கூவுவது மழை வரப்போவதின் அறிகுறி. மைனா, தண்ணீரில் புரண்டு விளையாடினால் மழை நிச்சயம் உண்டு. இரவில்தான் எப்போதும் ஆந்தைகள் அலறும். வழக்கத்திற்கு மாறாக பகலில் வித்தியாசமாக அலறினால் அந்தப் பகுதியில் புயல், சூறாவளி போன்ற ஏதாவது ஒன்று ஏற்படப்போகிறது என்று உணர்ந்துகொள்ளலாம். வவ்வால்கள் அதிக உயரத்தில் வெகு நேரம் பறந்துக் கொண்டிரு

மிளகு.. அழகு..!

Image
கருப்பு மிளகு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது. இருமல், சளி, செரிமானம், இரைப்பை, குடல் பிரச்சினைகளை போக்க உதவும். உயர் ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு உடல் நலப்பிரச்சினைகளுக்கும் நிவாரணியாக விளங்குகிறது. பொடுகு மற்றும் முடி உதிர்தல் என்பது ஒவ்வொரு பருவகாலத்திலும் பின் தொடரும் பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கருப்பு மிளகையும் பயன்படுத்தலாம். சிலருக்கு இளம் வயதிலேயே வெள்ளை நிற முடி எட்டிப்பார்க்கும். சாம்பல் நிறத்திலும் காட்சியளிக்கும். கருப்பு மிளகுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு மசாஜ் செய்துவிடலாம். கருப்பு மிளகில் செம்பு நிறைந்திருப்பதால் கூந்தல் முடி முன்கூட்டியே வெள்ளை நிறமாக மாறுவதை தடுக்கும். தயிர் தலைமுடியை ஈரப்பதமாக்கும். மேலும் வைட்டமின் சி குறைபாட்டை போக்கும். ஒரு கப் தயிருடன் 2 டீஸ்பூன் கருப்பு மிளகு தூள் கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை உச்சந்தலையில் அழுத்தி தடவவும். பிறகு கூந்தல் முழுவதும் தடவி மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்து கூந்தலை கழுவிவிடலாம். பொடுகு தொல்லையில் இருந்

வலிப்பு_நோய்………🇨🇭#தலைவலிக்கு_அடுத்தபடியாக……🇨🇭 #அதிகம்_பேரைப்பாதிப்பது #இது_தான்…👉 வலிப்பு நோய்யும் அதற்க்கான வீட்டு வைத்தியமும்…

Image
🇨🇭# வலிப்பு_நோய்……… 🇨🇭#தலைவலிக்கு_அடுத்தபடியாக…… 🇨🇭 #அதிகம்_பேரைப்பாதிப்பது  #இது_தான்… 👉 வலிப்பு நோய்யும் அதற்க்கான  வீட்டு வைத்தியமும்… 💢 வலிப்பின் வகைகள்...❓ மூளையில் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறதோ, அதற்கேற்ப வலிப்பின் தன்மை வேறுபடும்.  ♦மூளையின் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் பாதிப்பால் வருவது  பகுதி வலிப்பு (Partial seizure). நாம் அவ்வப்போதுக் காண்கிற பொதுவான வலிப்புகள் உடல் முழுவதும் பரவியிருக்கும். இந்த வகைக்கு முழுவீச்சு வலிப்பு (Generalised seizure) என்று பெயர். இவை தவிர இன்னும் பல துணை வகைகளும் உள்ளன.  ⭕ நரம்பு மண்டலத்தில் இரு வகை உள்ளது.                                      👉 1.மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குபவை (Cerebro-spinal system of nerves) பேசுதல், நடத்தல், செயல் புரிதல்.                                                                                 👉2.தாமாகவே இயங்குபவை (Autonomic system of nerves) இதயம் துடித்தல், நுரையீரல் விரிந்து சுருங்குதல்,குடல்கள் இயக்கம்.                                                                                   

புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு அபாயம் அதிகம் மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் தகவல்

Image
புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று அபாயம் 40 முதல் 50 சதவீதம் அதிகமாக உள்ளதாக மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் கூறினார். புதுடெல்லி,  உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி நேற்று நடைபெற்ற நிகழ்வுக்கு மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் தலைமை வகித்தார். அவரது தலைமையில், புகையிலைப் பொருட்களை எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். அப்போது பேசிய ஹர்ஷவர்தன், ‘புகையிலை பயன்பாட்டால் இந்தியாவில் தினமும் 3 ஆயிரத்து 50 பேர் வீதம் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் இறக்கின்றனர். இதனால் பெரும் சமூக, பொருளாதார சுமையும் ஏற்படுகிறது. புகையிலையால் ஏற்படும் உயிரிழப்புகள், வியாதிகளுடன், நாட்டின் பொருளாதார மேம்பாட்டிலும் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று அபாயம் 40 முதல் 50 சதவீதம் அதிகமாக உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, இந்தியாவில் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் வியாதிகள், மரணங்களால் உண்டாகும் பொருளாதார சுமை, ரூ.1.77 லட்சம் கோடி அளவுக்கு மிக அதிகமாக உள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதம் ஆகும். அதேநேரம், மத்திய, மாநில அரசுக

கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் லேகியத்துக்கு ஆந்திர அரசு அனுமதி

Image
கொரோனாவை குண்ப்படுத்தும் கத்தரிக்காய் லேகியத்துக்கு அனுமதி அளித்துள்ளது ஆனால் கத்தரிக்காய் கண் சொட்டு மருந்துக்கு தடைவிதித்து உள்ளது. நெல்லூர்,  ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணப்பட்டிணம் முத்துக்கூறு கிராமத்தை சேர்ந்தவர் போனஜி ஆனந்தய்யா என்பவர் பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்கி, வைத்தியம் பார்த்து வருகிறார். சமீபத்தில் இவர் கொரோனா நோயாளிகளுக்காக மருந்து தயாரித்தார். இது நல்ல பலன் தந்ததால் அவரிடம் மருந்து வாங்க பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கிருஷ்ணப்பட்டிணத்தில் குவிய தொடங்கினர். இது கண்ணில் போடக்கூடிய சொட்டு மருந்தாகும். இந்த சொட்டு மருந்து தேன், வால் மிளகுடன், ஒரு குறிப்பிட்ட வகையான கத்தரிக்காயின் கூழ் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு உள்ளது. நெல்லூரில் தற்போது ஆனந்தய்யா தயாரித்த மருந்துகள் பாக்கெட் ஒன்றுக்கு ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்து உண்மையில் கொரோனா தொற்றை குணப்படுத்துகிறதா என்

வாட்ஸ்அப் உரையாடல்களை அரசு கவனிக்கிறதா? பதற்றத்தை ஏற்படுத்தும் வைரல் தகவல்

Image
வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் அனுப்பும் தகவல்களை மத்திய அரசு கவனிப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் நிலை டிக் மூலம் தெரிவிக்கப்படுகிறது. தற்போது வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் மற்றவர்களுக்கு சென்றதும் இரண்டு டிக்குகள் காணப்படும். அதனை அவர்கள் படித்துவிட்டால் இரு டிக்குகளும் புளூ நிறத்திற்கு மாறிவிடும். இந்த நிலையில், வாட்ஸ்அப் டிக் முறையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறும் தகவல் வாட்ஸ்அப் செயலியில் வலம்வருகிறது. அதன்படி, அனுப்பிய குறுந்தகவல்களுக்கு இரண்டு புளூ டிக் மற்றும் ஒரு ரெட் டிக் வந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது. மேலும் மூன்று ரெட் டிக் வந்தால் அரசு சட்டப்படி வழக்கு தொடரும் என கூறப்படுகிறது. இந்தியாவில் சமூக வலைதளம் மற்றும் ஓடிடி தளங்களில் பதிவிடப்படும் தகவல்களில் அதிகாரிகள் சர்ச்சைக்குரியது என சுட்டிக்காட்டும் பதிவுகளை நீக்குவது, சர்ச்சைக்குள்ளாகும் தகவலை முதலில் பதிவிட்டது யார் என்ற விவரங்களை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாட்

கணவரின் செல்போனை நோண்டிய மனைவிக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Image
கணவரின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்து அதில் என்ன வி‌ஷயங்கள் இருக்கிறது என்று நோண்டி பார்த்த மனைவிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. துபாய்: ஐக்கிய அரபு நாட்டில் தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கணவரின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்து அதில் என்ன வி‌ஷயங்கள் இருக்கின்றன என்று மனைவி நோண்டி பார்த்தார். அப்போது அதில் பல தகவல்கள் இருந்தன. அவற்றை தனது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் அனுப்பி வைத்தார். இது சம்பந்தமாக கணவர் தனி மனித உரிமை மீறல் சட்டத்தின் அடிப்படையில் மனைவி மீது வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிபதி அவரது மனைவிக்கு ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். Also read :  வேகமாக சென்ற போது பிரேக் ஃபெயிலியரான டிரக்.! சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவர்.. என்ன செய்தார்.?

2022 ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 27-ல் நடைபெறும் என அறிவிப்பு

Image
அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் : திரைத்துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகவும், திரைக்கலைஞர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கவுரவமாகவும் ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளை வழங்கும் விழாவானது, அமெரிக்காவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 2 மாதங்கள் தாமதமாக ஏப்ரல் 25-ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிலையில், 2022-ம் ஆண்டு நடைபெற இருக்கும் 94-வது ஆஸ்கர் விருது விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட விழாவானது, ஒரு மாதம் தாமதமாக மார்ச் 27-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் விழா நடக்கும் என்றும் ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது. Also read :  218 கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்டிய ட்விட்டருக்கு போட்டி சமூக வலைதளமான கூ

மன அழுத்தத்தை முற்றிலும் குறைக்க சில எளிய வழிமுறைகள்...

Image
டென்ஷன் கோபத்திற்கு அடிப்படையாக அமைந்துவிடுகின்றது. அதனால் மற்றவர்களின் மனத்தில் இறுக்கமும் அழுத்தமும் ஏற்பட்டு உடலும் பாதிக்கப்படும். டென்ஷனைக் குறைப்பது நல்லது. ஏனெனில் அதிக டென்ஷன் எனும் மன அழுத்தம் உடையவர்களுக்கே மாரடைப்பும். இருதய நோயும் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மன அழுத்தமாக அல்லது டென்ஷனாக இருப்பதாக உணர்ந்தால் ஓரிடத்தில் அமைதியாக உட்கார்ந்து கொண்டு தியானம் செய்யத் தெரிந்தால் தியானம் செய்யுங்கள். இல்லையெனில் ஒன்று இரண்டு மூன்று என நூறு வரை எண்ணுங்கள். இதனால் மனச் சிந்தனை வேறு பக்கம் செலுத்தப்பட்டு மன அழுத்தம் குறையும். அடிக்கடி மன அழுத்தம் அடைபவர்கள் தியானத்தைப் பழகிக் கொண்டு தினசரி தியானம் செய்தல் அவசியம் நாம் இருக்கும் இடத்திலோ நாம் பயணம் செய்யும் பொழுதோ தியானம் செய்யலாம். மன அழுத்தம் உடையவர்கள் தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். தியானம் செய்ய விருப்பமில்லாதவர்கள் அவர்கள் மத கடவுளை நினைத்து வழிபட்டு உட்கார்ந்திருக்கலாம். முன் நெற்றியில் இரு புருவங்களுக்கும் இடையே ஒரு ஒளி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு அதன் மீது கவனம் செலுத்தியவாறு உட்கா

கொரோனா காலத்துக்கேற்ற பட்ஜெட் டிப்ஸ்

Image
கொரோனா கால நெருக்கடிகள், நமது பொருளாதார லட்சியத்தில் எந்த வகையிலும் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு செயல்படும் போது எத்தகைய நெருக்கடியையும் நம்மால் சமாளித்து மீண்டு வர முடியும். கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க போடப்பட்ட பொது முடக்கத்தால் பலரின் பொருளாதாரமும் முடக்கப்பட்டது. சென்ற வருட தாக்குதலில் இருந்து இப்போது தான் மீண்டு எழ ஆரம்பித்தோம். அதற்குள் இரண்டாம் அலை நம்மை தாக்கிவிட்டது. இதிலிருந்து பொருளாதாரரீதியாக பாதுகாப்பாக இருப்பது முக்கியம். இந்த குறுகிய கால நெருக்கடி, நீண்டகால நிதி நெருக்கடியாக மாறுவதை தடுக்க ஒரு சில வழிகளை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலான நேரம் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் நம்மை மீறி ஆன்லைனில் தேவையற்ற பொருட்களை வாங்க முயற்சிப்போம். இதை தடுக்க ஒவ்வொருநாளும் சுயகட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். ஆசைகளையும் தேவைகளையும் பிரித்தறிய வேண்டும். ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று தோன்றும் போது குறைந்தது மூன்று நாட்கள் அந்த ஆர்வத்தை தள்ளிப்போட வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அதன் பிறகும் அது நமக்கு தேவையென்று தோன்றினால் மட்ட

பெண்களுக்கு ஏற்படும் வறண்ட கண் பாதிப்பு

Image
வறண்ட கண்கள் பாதிப்புகள் யாருக்கும் எந்த வயதிலும் வரும். என்றாலும் ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு அதிகம் ஏற்படும். * கண் எரிச்சல், * கண்ணில் உறுத்துதல், * கண் இமைகள் கனத்து இருத்தல்,  * கண்களில் சோர்வு, * கண் சிவத்தல், * கண் வலி, * அடிக்கடி பார்வை மங்கியது போல் இருத்தல், * கண்ணில் லென்ஸ் போடுபவர்களுக்கு போட முடியாமல் வலி எடுத்தல் ஆகியவைகளை இதனால் ஏற்படும் பாதிப்பாக கூறுவர். இந்த பாதிப்புகள் யாருக்கும் எந்த வயதிலும் வரும். என்றாலும் ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு அதிகம் ஏற்படும். கண்ணில் நீர் வரும் முறையில் ஏற்படும் மாறுபாடு இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகின்றது. மேலும் காற்று, புகை, வறண்ட காற்று போன்ற பல காரணங்கள் வறண்ட கண் பாதிப்பிற்கு காரணம் ஆகின்றன. ஆனால் வயது கூடும் பொழுது இப்பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகளும் கூடுகின்றது. மேலும், * லென்ஸ் அணிபவர்கள், * ஹார்மோன் மாறுபாடு- குறிப்பாக பெண்களின் கர்ப்ப காலம், மாதவிடாய் காலம் போன்றவை, * சர்க்கரை நோய், * தைராய்டு குறைபாடு, * வைட்டமின் ஏ சத்து குறைபாடு, * சில வகை மருந்துகள், * முறையாக கண் சிமிட்டாமல் கம்ப்யூட்டர், புத்தகம் ப

மணப்பெண்களை மகிழ்விக்கும் தங்க இழை ‘மாஸ்க்’

Image
தற்போது மணப்பெண்கள் அணியும் முக கவசங்களில் தங்க நூல் இணைப்பு கொண்டவை. அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது. லட்சங்களில் பணத்தை செலவிட்டு ஆர்ப்பாட்டமாக நடந்த மணவிழாக்களுக்கு கொரோனா முடிவுகட்டியதால், காலத்திற்கு ஏற்றபடி ‘கலர்புல்லாக’ திருமணங்களை நடத்த அனைவரும் தயாராகிவிட்டார்கள். ஆடம்பர விருந்து, கொண்டாட் டங்களை தவிர்த்து குறைந்த அளவு விருந்தினர்களோடு திருமணங்களை நடத்துகிறார்கள். அதே நேரத்தில் மணப்பெண்கள் இப்போதும் அழகிலும், அலங்காரத்திலும் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அவர்கள் அணியும் முக கவசமும் தங்களுக்கு கூடுதல் அழகு தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பொதுவாக மணப்பெண் அலங்காரத்தில் முக அழகு முதலிடம் பிடிக்கும். தங்கள் முகத்திற்கு பொருத்தமான மூக்குத்தி அணிந்துகொள்வார்கள். உதடுகளுக்கு லிப்ஸ்டிக் பூசி கூடுதலாக மெருகேற்றிக்கொள்வார்கள். ஆனால் இப்போது அவர்கள் அணியும் மாஸ்க் வாயையும், மூக்கையும் மூடி, அந்த அழகை மறைத்துவிடுகிறது. ஆனாலும் தங்கள் முகத்த

சுகாதாரமே ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை

Image
சுகாதாரம் அல்லது சுத்தம் என்பது நலம் மற்றும் நலமான வாழ்வு கருதி ஒரு சமூகத்தால் பேணப்படும் பழக்க வழக்கங்களாகும். ஆரம்ப கால மக்கள் இயற்கையோடு தொடர்பு கொண்டு வாழ்ந்ததால் அவர்களின் வாழ்வில் சுகாதாரம் என்பது உயிரினும் மேலாகக் கருதப்பட்டது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுகாதாரமே பிரதானம். எப்போதும் நாம் சுத்தமாக இருந்தால் ஒரு நோயும் நம்மை தீண்டாது. ஆரோக்கியம் என்பது மனிதனின் கருவறை தொடக்கம் முதல் கல்லறை வரை பயணிக்கிறது. இடையில் தொய்வு ஏற்பட்டால் நோய் எனும் அரக்கன் நம்மை தொற்றிக்கொண்டு இறங்க மறுக்கும். நலமான வாழ்வின் மூலமே ஒருவனின் வாழ்வு சிறக்க முடியும். அவ்வாறான நல வாழ்விற்கு வழியமைப்பதே சுகாதாரம் ஆகும். சுகாதாரம் அல்லது சுத்தம் என்பது நலம் மற்றும் நலமான வாழ்வு கருதி ஒரு சமூகத்தால் பேணப்படும் பழக்க வழக்கங்களாகும். ஆரம்ப கால மக்கள் இயற்கையோடு தொடர்பு கொண்டு வாழ்ந்ததால் அவர்களின் வாழ்வில் சுகாதாரம் என்பது உயிரினும் மேலாகக் கருதப்பட்டது.ஆனால் இன்றைய நவீன காலகட்டக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது அதிகரித்து வரும் மக்கள்தொகை, வளங்களின் குறைபாடு, பொருளாதார நெருக்கடிகள் என்பவற்றின் விளைவால்

218 கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்டிய ட்விட்டருக்கு போட்டி சமூக வலைதளமான கூ

Image
ட்விட்டருக்கு போட்டியான சமூக வலைதளமான கூ 218 கோடி ரூபாய் முதலீட்டத்தைத் திரட்டியுள்ளது. ட்விட்டர் சமூக வலைதளதத்துக்குப் போட்டியான கூ 218 கோடி ரூபாய் மூதலீட்டை ஈர்த்துள்ளது. ஏற்கெனவே முதலீடு செய்த முதலீட்டாளர்களுடன் இணைந்து டைகர் குளோபல் நிறுவனம் இந்த முதலீட்டைத் திரட்டியுள்ளது. ஏற்கெனவே, அக்செல் பார்ட்னர்ஸ், கலாரி கேப்பிட்டல், ப்ளூம் வென்ட்சர்ஸ், ட்ரீம் இன்குபேட்டர் ஆகிய நிறுவனங்கள் முதலீட்டாளர்களாக இருக்கின்றனர் என்று கூ நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்கள், ஓடிடி ஆகிய டிஜிட்டல் தளங்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. அதன்படி சர்ச்சைக்குரிய பதிவுகளை 36 மணி நேரங்களுக்குள் நீக்கிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அவதூறு செய்தியை முதலில் பரப்பும் நபரை கண்டறிந்து, அவரை பற்றிய தகவல்களை நீதிமன்றங்கள் மற்றும் அரசுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இவ்விதிகளை பின்பற்ற மூன்று மாத அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது. அந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில், புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும்

முருங்கை இலையில் இருக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா..? இதை படித்தால் வாரம் ஒரு முறையாவது சாப்பிடுவீங்க..!

Image
முருங்கையிலை கால்சியம் , புரோட்டீன் , பீடா கரோடின், இரும்பு சத்து, விட்டமின் சி இப்படி பல வகையான நன்மைகளைக் கொண்டிருக்கிறது. முருங்கையிலை கால்சியம் , புரோட்டீன் , பீடா கரோடின், இரும்பு சத்து, விட்டமின் சி இப்படி பல வகையான நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இவற்றால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரியுமா? நோய் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது :  உடலில் நோய் அழற்சியை உண்டாக்கும் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே எதிர்த்துப் போராடி சரி செய்யும். இதனால் புற்றுநோய், கீல்வாதம், முடக்கு வாதம் மற்றும் பல நோய்களுக்கு காரணமான அழற்சி நோய்களிலிருந்து தப்பிக்கலாம். ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது : நோய் தொற்று பாதிப்புகளிலிருந்து உடலை பாதுகாப்பதில் முருங்கையிலை முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஆய்வில் 1.5 ஸ்பூன் அளவுக்கு முருங்கை இலை பவுடரை தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதை கண்டறிந்துள்ளனர். அதோடு நீரிழிவு நோய், இதய பாதிப்பு , அல்சைமர் போன்ற பிரச்னைகளும் இருக்காது என்கின்றனர். இரத்த சர்க்கரை அளவை சீராக்கும் : 

50 வயதும்.. ஆனந்தமான வாழ்வும்..

Image
முதுமை, வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. ஆனால் முதுமை பருவத்தை நோய் நொடியின்றி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக எதிர்கொள்வதற்கு சில நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது. 50 வயதை கடந்ததுமே சில பழக்கவழக்கங்களை பின்பற்ற தொடங்கினாலே முதுமை காலத்தை ஆனந்தமயமாக கழிப்பதற்கு அடித்தளமிட்டுவிடலாம். 1. சுறுசுறுப்பு: உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம். அது கவலை, மனச்சோர்வை குறைக்க உதவும். உடல் சம நிலையையும், மன நிலையையும் மேம்படுத்துவதற்கு சில பயிற்சிகள் கைகொடுக்கும். இதுநாள் வரை உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருந்தாலும் கூட 50 வயதை கடந்த பிறகு உடற்பயிற்சியை நாட வேண்டியது அவசியம். அது ரத்த அழுத்தம், இதய நோய்கள், புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும். தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு 30 நிமிடங்கள் ஒதுக்கினாலே போதுமானது. பயிற்சியின்போது தசை வலிமையை அதிகரிப்பதற்கும் கவனம் செலுத்த வேண்டும். 2. இணைந்திருங்கள்: முதுமை காலகட்டத்தை நெருங்கிவிட்டாலே சிலர் தனிமையை விரும்ப தொடங்கிவிடுவார்கள். அது குடும்பத்தினரிடம் இருந்து விலகுவதற்கு தாமே அடித்தளமிட

உலக சுற்றுச்சூழல் தினம்

Image
மனிதர்களான நம் முடைய தவறான நடவடிக்கையால், காற்று மாசுபடுதல், நிலத்தடி நீர் வற்றிப்போவது என்று பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்பில் சிக்கி இருக்கிறோம். உலக சுற்றுச்சூழல் தினம், கடந்த 50 ஆண்டுகளாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த பூமியின் இயற்கை அழிவைப் பற்றிய விழிப்புணர்வு கடந்த சில ஆண்டுகளாகத்தான் மனிதர்களால் பெருமளவில் உணரப்பட்டு வருகிறது. மனிதர்களான நம் முடைய தவறான நடவடிக்கையால், காற்று மாசுபடுதல், நிலத்தடி நீர் வற்றிப்போவது என்று பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்பில் சிக்கி இருக்கிறோம். மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதால், மரங்கள் குறைந்து மழைவளம் குறைகின்றன. முன்பெல்லாம் பருவமழை பொய்க்காமல் பெய்து வந்தது. ஆனால் இப்போதெல்லாம் பருவ மழையை நம்பி எந்த காரியத்தையும் செய்ய முடியாது. பருவநிலை மாற்றத்தின் காரணமாகவும், கடல் பகுதியில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாகவும் ஏற்படும் புயலால்தான் மழை பெய்து வருகிறது. புவிக்கோளையும், அதன் இயற்கையையும் காப்பாற்ற, சுற்றுச்சூழல் செயல்பாடு பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியமானது. உலக அளவில் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற

வேகமாக சென்ற போது பிரேக் ஃபெயிலியரான டிரக்.! சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவர்.. என்ன செய்தார்.?

Image
பிரேக்குகள் செயலிழந்த பின்னரும் சுமார் 3 கி.மீ தொலைவு டிரக்கை ஓட்டி சென்றுள்ள டிரைவர் ஒருவர், யார் மீதும் வண்டியை மோதி விபத்து ஏற்படுத்தி விடாமல் பத்திரமாக நிறுத்தி உள்ளார். சமீப நாட்களாக இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் பெரிய டிரக் ஒன்று சுமார் 3 கி.மீ தூரம் ரிவர்ஸிலேயே ஓட்டி செல்லப்படும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. முதலில் டிரக் டிரைவர் ஆபத்தான முறையில் வேண்டுமென்றே வாகனத்தை ரிவர்ஸில் ஒட்டி செல்வதாக பலரும் கருதினர். ஆனால் இதன் பின்னணியில் பெரும் விபத்தை தடுக்க அந்த டிரக் டிரைவரின் விவேகமான நடவடிக்கை உதவியுள்ளது என்ற தகவல் பலரையும் நெகிழ செய்துள்ளது. சாலையில் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று பிரேக் ஃபெயிலியர் ஆகிவிட்டாலே வாகனத்தை ஓட்டி கொண்டிருப்பவர் பதற்றமின்றி பைக்கை நிறுத்துவது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஆனால் பிரேக்குகள் செயலிழந்த பின்னரும் சுமார் 3 கி.மீ தொலைவு டிரக்கை ஓட்டி சென்றுள்ள டிரைவர் ஒருவர், யார் மீதும் வண்டியை மோதி விபத்து ஏற்படுத்தி விடாமல் பத்திரமாக நிறுத்தி உள்ளார். அதுவும் சாதுர்யமாக ரிவர்ஸ் கியரிலேயே டிரக்கை சுமார் 3 கி.மீ தூரம் இயக்கி வ

மக்கள் வரி பணத்தைப் பயன்படுத்தி குடும்பத்தின் காலை உணவுக்கு மாதந்தோறும் ரூ.26,000 செலவு செய்யும் பின்லாந்து பிரதமர்!

Image
ஆட்சியில் உள்ள உலகின் இளம் பிரதமர் என்ற பெருமையும் சன்னா மரின்-க்கு உண்டு. மக்கள் வரி பணத்தை குடும்பத்தினரின் காலை உணவுக்காக செலவு செய்து வருவதாக பின்லாந்து பிரதமர் மீது ஒரு குற்றசாட்டு தற்போது எழுந்துள்ளது. பின்லாந்து நாட்டின் பெண் பிரதமரான சன்னா மரின் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான கேசரந்தாவில் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தின் காலை உணவுகளுக்காக மாதத்திற்கு சுமார் 300 யூரோக்களை (அதாவது 365 அமரிக்க டாலர்கள்) திரும்பக் கோருவதாக கடந்த செவ்வாயன்று (மே.25) டப்லாய்டு இல்தலேஹெட்டி செய்தித்தாளுக்கு தகவல் கிடைத்த பிறகு, பிரதமர் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில் வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்தி பிரதமரின் காலை உணவுக்கு சட்டவிரோதமாக மானியம் வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரிப்பதாக பின்லாந்து காவல்துறை கடந்த வெள்ளிக்கிழமை (மே.28) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்நாட்டில் பூதாகரமாக வெடித்த இந்த சம்பவத்தால், எதிர்க்கட்சி தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த சம்பவம் பிரதமரின் முகத்தில் முட்டை வீசியதற்கு சமம் என்றும், 35 வயதான அரசாங்கத் தல

இலங்கையின் இளவரசி’- சீனாவின் அறிவிப்பால் புதிய சர்ச்சை!

Image
இலங்கையின் புராணக் கதைகளில்படி, 15 வது நூற்றாண்டை சேர்ந்த சிங்கள இளவரசன் ஒருவன் சீன பெண்ணை திருமணம் செய்துகொண்டு சீனாவிலேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த இளவரசனின் வம்சாவளியைச் சேர்ந்தவர் தான் இந்த இளவரசி என்று சீனா தரப்பில் கூறப்படுகிறது. இலங்கையைச் சேர்ந்த இளவரசி ஒருவர் சீனாவில் இருப்பதாக வெளியான தகவல் சிங்களர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்துவரும் சீனா, கொழும்பு துறைமுகத்தை ஒட்டி, 10, 228 கோடி ரூபாய் மதிப்பில் நகரம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த துறைமுக நகரத்தின் கட்டுப்பாட்டை முழுமையாக சீனாவே வைத்திருக்கும் என்பதால், இங்கு சீனா, ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சுயாட்சி பிரதேசத்துக்கு இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீனா முயற்சிப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், சீனாவின் சாலை திட்டங்கள் தொடர்பான செய்தி,

Golden Visa என்றால் என்ன? அது யாருக்கு கிடைக்கும்? பயன்கள் என்ன?

Image
ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரையில், அங்குள்ள அரசாங்கம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்குகிறது.  புதுடெல்லி:  பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் அரசு கோல்டன் விசாவை (Golden Visa) வழங்கியுள்ளது. கோல்டன் விசா என்றால் என்ன? சில குறிப்பிட்ட நபர்களுக்கு நீண்ட கால குடியுரிமையை வழங்குவதுதான் கோல்டன் விசா எனப்படும்.  ஐக்கிய அரபு அமீரகத்தைப் (UAE) பொறுத்தவரையில், அங்குள்ள அரசாங்கம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்குகிறது.  ஐக்கிய அரபு அமீரகம் 2019 ஆம் ஆண்டில் கோல்டன் விசாவை அமல்படுத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா (Visa) இருக்கும் வெளிநாட்டவ

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!