நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளின் செயல்திறனை ஆராய மருத்துவ கவுன்சில் முடிவு

கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளின் செயல்திறனை ஆராய மருத்துவ கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதற்கான முதல் சோதனை அடுத்த வாரம் தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனாவுக்கு எதிரான போரில் ஆஸ்ட்ராஜெனகாவின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை இந்த இரண்டு தடுப்பூசிகளையும் சேர்த்து 20 கோடிக்கு மேற்பட்ட டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் இந்த தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதல் முறையாக அவற்றின் செயல்திறனை ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) முடிவு செய்துள்ளது.

இதன்படி, இந்த இரு தடுப்பூசிகளில் ஒன்றை ஒரு டோஸ் அல்லது இரண்டு டோஸ் போட்டுக்கொண்ட 45 வயதுக்கு மேற்பட்ட சுமார் 4 ஆயிரம் பேர் ஆய்வு செய்யப்படுவார்கள். இந்த சோதனை அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது என சென்னையில் உள்ள ஐ.சி.எம்.ஆர்.ன் தேசிய தொற்றுநோயியல் நிறுவன மூத்த விஞ்ஞானி தருண் பட்நாகர் தெரிவித்துள்ளார்.
💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!