நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகின்_மிக_கொடிய_விஷம் #பயம்……

#உலகின்_மிக_கொடிய_விஷம் 
#பயம்……
🇨🇭#பயத்தை_உடலுக்கு_எதிரியாவும் #மாற்றலாம்…❗

#பயத்தை_நண்பனாகவும்
#மாற்றலாம்…❗

" பயம் ".உலகின் மிக சிறந்த உயிர்காக்கும் மருந்து " தைரியம் ". எண்ணம் போல் வாழ்க்கை.
 
👉#தீதும்_நன்றும்_பிறர்_தர_வாரா👈

➡இதன் பொருள்……

▶[ நமது செயல்களின் எதிர் விளைவுகள் அல்லது பின் விளைவுகளே நமக்கு நிகழும் தீயவையும், நன்மைகளும் ஆகும். ]◀

பயமே நம்மை சுற்றிலும் ஓவ்வொரு கோணத்தில் சிந்தனை செய்ய வைக்கிறது 
இந்த 

பயமே வாழ்வின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தன்னுள் வைத்து கொண்டு இருக்கிறது....

கடந்த கால எதிர்கால பயத்தாலும் நிகழ்கால வாழ்க்கையை வாழாமல் தவிக்கிறோம்...

பயம் ஒருகாளும் எதிரி அல்ல அவையை எதிரியாக நினைத்து கொண்டால் உடலே எதிர்நிலையில் இயங்கி உடல் தன்னை இழக்கும் சூழ்நிலையில் தள்ளபடுகிறது அதுதான் இங்கே மரணங்களாக நிலவுகிறது...

ஒரு உண்மையை சொல்லனும்னா பயம் அப்படிங்கர ஓன்னு உடம்புக்கு தன்னோட தற்காப்பு மாதிரி❗

கண்ணு பக்கத்தில விரல கொண்டு போன இயற்கையாவே கண் சிமிட்டுவோம்.. 

உடலில் குளிர் அதிகரிக்கும் போது உடல் முடிகள் சிலிர்த்து ரோமங்கள் தோலை பாதுகாக்கும்……   

இந்த மாதிரி உடலுல ஓவ்வொரு பாகத்துக்கும் ஒரு சங்கிலி தொடர்பு போல உண்டு...

ஆன இந்த பயத்த உருவாக்குவது வெளியேற்றுவது கூடிய பாகம் முதலில் மனம் மூளை இவை இரண்டுமே ஆணிவேர் போல..

முதலில் உடலில் இருந்து மூளைக்கு தகவல் போகும் போது மனம் பயத்தை ஏற்படுத்தி தற்காத்துக் கொள்வதற்கான வேலையை செய்கிறது...

கோமாவில் மூளை செயலழிந்து இருக்குரவங்க எந்த தற்காப்பும் உடல் செய்யாது..

பயம்னா கூட என்னனு தெரியாது ஆன உடல் இயங்குகிறது...

கொஞ்ச நாளைக்கு நம்ம மூளையை கழட்டி வைச்ச மாதிரி இருந்தா போதும்...

எந்த பயமும் இல்லை ஏனா இந்த மூளைதான் பயத்துக்கு காரணம்...

👉பயமே உடலின் எதிரி...

எந்த நோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது. இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.

உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.

இயற்கையோடு மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமாகிவிடுகிறது.

ஒருநாள் வாழும் ஈசல் கூட தனது வாழ்வை மகிழ்ச்சியோடு வாழ்கின்றன...

மனிதன் மட்டுமே இறப்பை கண்டும் வாழ்வை கண்டும் பயந்து வாழ்கிறான்...

நேரத்தை மறந்து விடுங்கள்❗
இயற்கையை தேர்ந்து எடுங்கள்❗
ஒவ்வொரு மணி துளியும் இறப்பை வென்று பிறந்திடுங்கள்...

பயம் என்னும் உணர்ச்சி நல்ல ஆரோக்கியமாக உள்ள ஒருவரை கூட மரணத்தை நோக்கித் தள்ளும்

👉#பயமே❗
#மனிதனை_கொல்லுகிறது....


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!