நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி செய்தால் உடலில் தீரும் பிரச்சனைகள்

தினசரி சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தாலே போதும் இதயத்திற்கான இரத்த ஓட்டம் சீராக பாய்ந்து இதய நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் காலையில் எழுந்ததும் நடைபயிற்சி என்று வெளியில் சென்று சுத்தமான காற்றை சுவாசிப்பார்கள். இதனால் உடல் பாகங்களுக்கும் ஒழுங்கான ஆக்ஸிஜன் கிடைத்து உடல் ஆரோக்கியமாக இயங்கி வந்தது. இப்போது அவையெல்லாம் வெகுவாக குறைந்து வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி செய்யக் கூட இயலாமல் சோம்பேறியாகி இருக்கிறோம்.

இதன் விளைவாகத்தான் இதய நோய்களும் அதிகரித்துவருகிறது. குறைந்தது நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உடற்பயிற்சியாவது நாம் செய்ய முற்பட வேண்டும். அதிலும் ஏரோபிக் உடற்பயிற்சி இதய சீரமைப்பிற்கு சிறந்ததாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதை தினசரி சில நிமிடங்கள் செய்தாலே போதும் இதயத்திற்கான இரத்த ஓட்டம் சீராக பாய்ந்து இதய நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இதன் எண்ணற்ற நன்மைகளைப் பற்றி கீழே காணலாம்.

ஏரோபிக் உடற்பயிற்சி அல்லது ஆக்ஸிஜன் ஏற்ற உடற்பயிற்சி உங்கள் இதய செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூற்றுப்படி வாரத்திற்கு 5 முதல் 7 நாட்கள் குறைந்தது 30 நிமிடங்களாவது இதயத்திற்கான உடற்பயிற்சியை மேற்கொள்ள பரிந்துரைக்கின்றனர்.

அதே நேரத்தில் இந்த ஏரோ பிக் உடற்பயிற்சி செய்வதற்கு முன் வார்ம் அப் போன்ற தசைகளை நீட்டிக்கும் உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும் என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள்.

இது ஒரு இதய சீரமைப்பு உடற்பயிற்சி ஆகும்.' ஏரோபிக்' என்ற வார்த்தைக்கு ஆக்ஸிஜன் என்று பொருள். அதாவது காற்றில் உள்ள சுவாசிக்கும் ஆக்ஸிஜனை எடுத்து அதைத் தசைகளுக்கு செலுத்தி தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க எரிபொருளாக செயல்படுகிறது.

இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கிறது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது, கெட்ட கொழுப்புகளை நீக்கி நல்ல எச். டி. எல் கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்கிறது. நீரிழிவின் அளவை கட்டுப்படுத்துகிறது.

இதைத் தொடர்ந்து உரிய முறையில் செய்வதன் மூலம் உங்கள் உடல் எடையையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். அதிகப்படியான உடல் எடையைக் குறைக்கலாம். உடல் உறுப்புகளின் செயல்பாட்டைச் சீராக்குவதிலும் இந்த பயிற்சி முக்கியத்துவமாகிறது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!