நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தமிழகத்தின்_ஒவ்வொரு_வீடும்…#கொரோனா_தடுப்பு#மையமாக_ மாற………🇨🇭#இந்த_பதிவு_உங்களுக்கு #வழிகாட்டும்......

🇨🇭#தமிழகத்தின்_ஒவ்வொரு_வீடும்…❗

🇨🇭#கொரோனா_தடுப்பு
#மையமாக_மாற………❗❗

🇨🇭#இந்த_பதிவு_உங்களுக்கு #வழிகாட்டும்❗❗❓❓

தேவையான பொருட்கள்❓

சீரகம் - 1 டி ஸ்பூன்

மிளகு - 10 எண்ணிக்கை

பூண்டு - 5 பல்

பொட்டுக்கடலை - 3 ஸ்பூன்

இஞ்சி - 1 inch

எலுமிச்சை - 1/2 பழம் (தோலுடன் விதை நீங்கியது)

லவங்கப் பட்டை - 1 inch

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

கல் உப்பு - 1 ஸ்பூன்

👉செய்முறை❓

இதில் உள்ள பொருட்களில் எதையுமே இடிக்கவே பொடி செய்யவோ கூடாது. அனைத்து மூல பொருட்களையும் அப்படியே 5 டம்ளர் தண்ணீரில் போட்டு 3 டம்ளராக கொதிக்க வைத்து வடித்து இளம் சூடாக பெரியவர்கள் 1 டம்ளர் அளவும் சிறுவர்கள் 1/2 டம்ளர் அளவும் காலை மாலை என இரண்டு வேளை உணவிற்கு முன் பருகலாம். 3 வேளை பருகினாலும் நலமே.

நமக்கு தெரியாமல் கொரோனா தொற்று இருந்தாலும் இந்த கசாயம் குணமாக்கிவிடும். 

💊தீரும் நோய்கள்

கொரோனா +ve ஐ 7 நாட்களில் நெகட்டிவ் ஆக்கிவிடும் இம்மருந்து.
.

.

🇨🇭#மூலிகைத்_தேனீர்🇨🇭

சுக்கு - 100 கிராம்

அதிமதுரம் - 100 கிராம்

சித்தரத்தை - 30 கிராம்

கடுக்காய் தோல் - 30 கிராம்

மஞ்சள் - 10 கிராம்

திப்பிலி - 5 கிராம்

ஓமம் - 5 கிராம்

கிராம்பு - 5 கிராம்

கற்பூரவள்ளி இலை - 5 எண்ணிக்கை

புதினா இலை - 10 எண்ணிக்கை

மிளகு - 5 கிராம்

நாட்டு சர்க்கரை - 1 தேக்கரண்டி

👉செய்முறை❓

இதில் நாட்டு சர்க்கரையை, கற்பூரவள்ளி இலை புதினா இலை தவிர மீது உள்ள அனைத்து மூலப்பொருட்களையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.

10 கிராம் பொடியை 400 மிலி நீரில் போட்டு 100 மிலி நீர் ஆகும் வரை கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது அதில் கற்பூரவள்ளி இலை புதினா இலை போட்டு, இறக்குவதற்கு முன் நாட்டு சர்க்கரை கலந்து வடித்து இளம்சூடாக பெரியவர்கள் 100 மிலியும் சிறியவர்கள் 50 மிலி என இரண்டு வேளை காலை மாலை உணவிற்கு பின்பு அருந்தலாம்.

💊தீரும் நோய்கள்

கொரோனா அறிகுறிகளை குணமாக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
.

.

🇨🇭#கபசுரக்_குடிநீர் 🇨🇭
---------------------------------

💊கபசுரக் குடிநீர் செய்முறை❓

35 கிராம் குடிநீர் சூரணத்தை 3 லிட்டர் நீரில் போட்டு சிறுதீயில் காய்ச்சி பன்னிரண்டிலொன்றாய்க் குறுக்கி வடிகட்டி குடிநீர் எடுக்கவும்.

250ml கபசுரக் குடிநீர் கிடைக்கும்.

👉அளவு : 

சிறியவர்கள் 30 மி.லி. 

பெரியவர்கள் 60 மி.லி. வீதம் தினமும் இரண்டு அல்லது மூன்று வேளைகள் குடிக்கலாம்.

குடிநீர் ஆயுட்காலம் - 2.30 மணி நேரம்

தீரும் நோய்கள்

கிருமி மற்றும் வைரசால் ஏற்படும் அனைத்து நுரையீரல் தொற்று நோய்கள் (கபசுரம்)
.

.

🇨🇭#நிலவேம்புக்_குடிநீர்🇨🇭
---------------------------------------

👉செய்முறை❓

நிலவேம்பு முதலான சரக்குகளை குப்பை நீக்கி சுத்தம் செய்தபிறகு கல்வத்திலிட்டு ஒன்றிரண்டாக இடித்து எடுத்துக்கொள்ளவும். 90 கிராம் அளவுள்ள சூரணத்திற்கு 2 லிட்டர் சுத்தமான நீர் விட்டு 15 நிமிடங்கள் ஊறவிட்டு பிறகு அடுப்பேற்றி குறைந்த நெருப்பில் கொதிக்கவிடவும். நான்கில் ஒரு பங்காக அதாவது 1/2 லிட்டர் அளவிற்கு குடிநீர் வற்றியவுடன் நன்கு வடிகட்டி சேகரிக்கவும்.

அளவு

காலை உணவிற்கு முன்பு சிறியவர்களுக்கு 30 மிலி அளவும், பெரியவர்களுக்கு 60 மிலி அளவும் குடிக்க வேண்டும்.

👉குடிநீரின் ஆயுட்காலம்

ஒரு சாமம், அதாவது இரண்டரை மணி நேரம் ஆகும்.

நிலவேம்பு குடிநீர் சூரணம் நாட்டு மருந்து கடைகளில் பெற்றும் பயன்படுத்தலாம்.

யாரெல்லாம் நிலவேம்பு மற்றும் கபசுரக்குடிநீர் குடிக்க கூடாது !

ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்

டைபாய்டு சுரம் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள்

முதல் மூன்று மாத கர்ப்பிணிகள்.

வயிற்றில் புண் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம் (உணவிற்கு பின் குடிக்கலாம்)

நாட்பட்ட நோய் உள்ளவர்கள் சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் குடிக்கலாம்.
.

.
🇨🇭 #Ph_சமானி 🇨🇭

👉வேப்பம் பட்டை பொடி - 50 கிராம்

சீந்தில் தண்டு பொடி - 50 கிராம்

செய்முறை 

இரண்டையும் உலர்த்தி தனித்தனியே இடித்து பொடி செய்து கலந்தால் ph சமானி பொடி தயார்

பயன்படுத்தும் முறை❓

1/2 தேக்கரண்டி பொடி எடுத்து 3 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து 2 டம்ளர் வந்ததும் அதில் சிறிது நாட்டுச் சர்க்கரை கலந்து பெரியவர்கள் 100 மிலி சிறுவர்கள் 30 மிலி இரண்டு வேளை சாப்பிடும் முன் எடுக்கலாம்.

👉தீரும் நோய்கள்

உடலில் ph அளவு சமன் பெற்று கெட்ட வைரஸ்கள் கிருமிகள் வெளியேறும்.
.

.

🇨🇭 #அஸ்வகந்தி_சூரணம் 🇨🇭

💊பயன்படுத்தும் முறை❓

பெரியவர்கள் 1 டிஸ்பூன் சிறுவர்கள் 1/4 டிஸ்பூன் நெய், தேன் அல்லது பாலில் கலந்து காலை மற்றும் மாலை உணவிற்கு பின்பு எடுக்கலாம்.

தீரும் நோய்கள்

இரத்த சோகை நீங்கும், உடல் பலம் பெரும், கெட்ட நீர் வெளியேறும், தாது பலம் பெரும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

💊#தாளீசாதி_சூரணம் 💊

👉பயன்படுத்தும் முறை❓

1 முதல் 3 கிராம் அளவு தேன், நெய் அல்லது வெந்நீரில் கலந்து எடுக்கலாம். பெரியவர்கள் 3 கிராம், சிறியவர்கள் 1 கிராம் காலை மாலை இரண்டு வேளை சாப்பிட்ட பின் எடுக்கலாம்.

தீரும் நோய்கள் 

இருமல், இழைப்பு, ஜலதோஷம், சுரம், நெச்சு சளி.
.
.

🇨🇭#திரிகடுகு_தேனீர் 🇨🇭

👉தேவையான பொருட்கள்❓

1. சுக்கு - சிறு துண்டு

2. மிளகு - 1/2 தேக்கரண்டி

3. திப்பிலி - 2 எண்ணிக்கை

4. செம்பருத்தி - 3 பூவின் இதழ்

5. புதினா - 1 கைப்பிடி

செய்முறை❓

இவை அனைத்தையும் 250 மிலி நீரில் கொதிக்க வைத்து 100 மிலி ஆன பிறகு வடித்து பெரியவர்கள் 100 மிலி சிறியவர்கள் 50 மிலி காலை மாலை உணவிற்கு முன் பருகலாம்.

தீரும் நோய்கள்

மூச்சுத்திணறல், வீசிங்.
.

.
🇨🇭#ஆடாதொடை_மணப்பாகு🇨🇭

👉பயன்படுத்தும் முறை❓

சிறுவர்கள் - 5 ml

பெரியவர்கள் - 10 ml

வெந்நீரில் கலந்து காலை மாலை இரண்டு வேலை உணவிற்கு முன் குடிக்கலாம்.

👉தீரும் நோய்கள்❓

நாட்பட்ட நெஞ்சு சளி, இருமல், தொண்டை வலி, வீசிங், ஆஸ்துமா போன்ற பல்வேறு நுரையீரல் பிரச்சனைகளை இது குணப்படுத்தும்.
.

.

🇨🇭#இருமல்_மூலிகை_கசாயம் 🇨🇭

தூதுவளை - 1 தேக்கரண்டி

முசுமுசுக்கை - 1 தேக்கரண்டி

சுக்கு - சிறிதளவு

மிளகு - 1/2 டி ஸ்பூன்

திப்பிலி - 3 எண்ணிக்கை

👉செய்முறை❓

இவை அனைத்தையும் 250 மிலி நீரில் கொதிக்க வைத்து 100 மிலி ஆனதும் வடித்து காலை மாலை உணவிற்கு முன் பெரியவர்கள் 100 மிலி சிறுவர்கள் 50 மிலி எடுக்கலாம்.

தீரும் நோய்கள்❓

மூச்சுத்திணரல், ஆஸ்துமா நீங்கும்.

*🇨🇭#புற_மருத்துவங்கள்🇨🇭*
.
.
👉நல்லெண்ணெய் கொப்பளித்தல் 

இரண்டு தேக்கரண்டி சுத்தமான மரச்செக்கு நல்லெண்ணெயை வாயில் விட்டு 15 நிமிடங்கள் கொப்பளித்து நீர்த்ததும் துப்பிவிட வேண்டும்.

பயன்கள்

வாய் மற்றும் தொண்டை பகுதியில் உள்ள கெட்ட கிருமிகள் வைரஸ்கள் அழியும், உடல் நஞ்சுகள் வெளியேறும், சளி வெளியேறும்.

💊#பல்_துலக்குதல் 💊
-------------------------------------

வேப்பங்குச்சியை மென்று அந்த சாறில் பல் துலக்கினால் வாயில் உள்ள கிருமி வைரஸ்கள் அழியும், அல்லது மூலிகை பற்பொடியில் பல் துலக்கலாம்.

💊#வாய்_கொப்பளித்தல் 💊
---------------------------------------------------

வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு போட்டு தொண்டை நனையும் படி வாய் கொப்பளித்தால் தொண்டையில் வைரஸ் தங்கி இருந்தால் வெளியேறும் அல்லது வேப்பிலை தண்ணீரில் கொதிக்க வைத்து வெதுவதுப்பான உடல் அந்த நீரில் வாய் கொப்பளிக்கலாம்.

💊#கிருமி_நாசினி_தைலம் 💊
--------------------------------------------------

👉தேவையான பொருள்❓

புதினா உப்பு - 50 கிராம்

ஒம உப்பு - 10 கிராம்

பச்சை கற்பூரம் - 10 கிராம்

பூங் கற்பூரம் - 5 கிராம்

சோடா உப்பு - 5 கிராம்

👉செய்முறை

அனைத்தையும் கண்ணாடி பாட்டலில் ஒன்றாக கலந்து வைத்தால் கிருமி நாசினி தைலம் தயார்.

பலன்கள்

இந்த தைமாலில் உள்ள மோனேடெர்பீன்ஸ் Hsv 1 வைரஸ்களின் வைரான்களை நேரடியாக தாக்கி அழிக்கிறது என்ற தரவுகள் இருக்கிறது - Wen - Lin Lai et al. 2012

இதில் உள்ள மென்தாலானது in vitro cell line பரிசோதனையில் சூடோரேபிஸ் வைரஸ் மற்றும் Hsv - 1 வைரஸ்கள் பரவுவதை பெருமளவில் கட்டுப்படுத்தியதாக கூறி உள்ளார் - Primo et al.

சுவாசப்பாதை தொற்றை அழிக்கும், நெஞ்சு சளியை உடனே வெளியேற்றும், நுரையீரல் இயக்கத்தை சீர் செய்யும், நுரையீரல் தொற்றை அழிக்கிறது. சுவாசப்பாதையை விரிவடையச்செய்கிறது. மூச்சுத்திணரலை சரி செய்கிறது.

👉இந்த ஒரு தைலத்தை பல இடங்களில் பயன்படுத்தலாம்❗

1. முககவசத்தில் 5 சொட்டு தேய்த்து பயன்படுத்தலாம்

2. கை குட்டையில் 5 சொட்டு விட்டு பயன்படுத்தலாம்

3. பின் வரும் மூலிகை பொட்டலத்தில் 5 சொட்டு விட்டால் இயற்கை இன்ஹேலராக பயன்படுத்தலாம்

4. 100 மிலி வெந்நீரில் 3 சொட்டு விட்டு உள்ளே குடித்தால் தீராத சளியும் உடனே கரைந்து வெளியேறும் (குறிப்பு : 3 சொட்டுகளுக்கு மேல் விடக்கூடாது)

5. வெளியில் செல்லும் போது ஆடையில் தடவி விட்டு வெளியே செல்லலாம். இது நல்ல வாசனையாக இருக்கும், வாசனை திரவியமாக பயன்படுத்தலாம்.

*சிறப்பு :* இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த பொருளில் சிலவற்றை அக்காலத்தில் துளசி நீருடன் கலந்து வைணவ கோவில்களில் தீர்தமாக கொடுத்து வந்துள்ளார்கள் நம் முன்னோர்கள். 

💊 #வேது_பிடித்தல் 💊
------------------------------------

👉தேவையான பொருட்கள்❓

நொச்சி - 1 கைப்பிடி

கற்பூரவள்ளி - 1 கைப்பிடி

துளசி - 1 கைப்பிடி

மஞ்சள் தூள் - 1 டி ஸ்பூன்

கிருமி நாசினி தைலம் - 3 சொட்டு

பயன்படுத்தும் முறை❓

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கி, அதில் மேல் குறிப்பிட்ட பொருட்களை அனைத்தையும் போட்டு, போர்வை போட்டு மூடி 15 நிமிடங்கள் ஆவி பிடிக்க வேண்டும். தொடர்ந்து முடியாவிட்டால் விட்டு விட்டு பிடிக்கலாம்.

பலன்கள் 

நெஞ்சு சளி குணமாகும், வீசிங், ஆஸ்துமா, நுரையீரல் தொற்றுகளை அழிக்கிறது, சுவாசப்பாதையை தொற்றை அழிக்கிறது. சுவாசப்பாதை விரிவடைந்து மூச்சுத்திணறலை குணமாக்குகிறது. 

💊#நுகர்தல்_மூலிகை_பொட்டலம் 💊 #இயற்கை_இன்ஹேலர் 
---------------------------------------------------------------

👉தேவையான பொருட்கள் ❓

ஓமம் - 10 கிராம்

பச்சை கற்பூரம் - 10 கிராம்

👉பயன்படுத்தும் முறை❓

இரண்டையும் அப்படியே ஒரு துணியில் போட்டு முடுச்சாக கட்டி அதில் 5 சொட்டு கிருமிநாசினி தைலத்தை விட்டு, 5 முதல் 10 நிமிடங்கள் நுகர வேண்டும். ஒரு நாட்களுக்கு ஒரு முறை கிருமிநாசினி தைலத்தை 5 சொட்டு அந்த முடுச்சில் விட்டு பயன்படுத்தவும், மூன்று நாட்களுக்கு ஒரு முறை முடிச்சில் உள்ளதை மாற்ற வேண்டும்.

வெளியில் எங்கு சென்றாலும், இந்த முடுச்சை எடுத்து செல்ல வேண்டும்.

பலன்கள் 

வீசிங் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது இயற்கை இன்ஹேலராக பயன்படுகிறது, இதை நுகரும் போது மூச்சுத்திணரல் வீசிங்கிற்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது. நுகரும் போது சுவாசப்பாதையில் உள்ள கிருமி வைரஸ்கள் அழிக்கப்படுகிறது. சுவாசப்பாதை விரிவடைகிறது. 
.

.

💊#கைகழுவ_கிருமி_நாசினி 
#திரவம்💊
------------------------------------------------------

👉தேவையான பொருட்கள்❓

வேப்பிலை - 1 கைப்பிடி

மஞ்சள் தூள் - 1 டி ஸ்பூன்

கல் உப்பு - 1 டி ஸ்பூன்

மா இலை - 1 கைப்பிடி

கிருமி நாசினி தைலம் - 10 சொட்டு 

செய்முறை 

தைலத்தை தவிர அனைத்தையும் அரைத்து 500 மிலி நீரில் கலந்து கிருமி நாசினி தைலத்தை விட்டால் தயார்.

பலன்கள்

கை கால்கள் முகத்தை கழுவலாம், குளிக்கும் நீரில் சிறிதளவு கலந்து குளிக்கலாம். கிருமி வைரஸ்களை அழிக்கிறது. 
.
.

💊#கையில்_கட்ட_காப்புக்_கயிறு💊
--------------------------------------------------------

👉தேவையான பொருட்கள்❓

மஞ்சள் தூள் - சிறிதளவு

நூல் - 1

வசம்பு - 1 துண்டு

செய்முறை 

மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து நூலில் தடவி. அந்த நூலில் ஒரு வசம்பு கட்டி, இதை கை மணிக்கட்டு, முழங்கைக்கு மேல் அல்லது கழுத்தில் கட்டி வெளியே செல்லலாம்.

பலன்கள் 

தொற்றுக்கள் நெருங்காமல் காக்கிறது.
.

.
💊#சூரிய_குளியல் 💊
------------------------------------

உடல் முழுவதும்

சூரியன் உதயம் ஆகும் போதும் வரும் வெயிலிலும்

சூரியன் மறையும் போதும் வரும் வெயிலிலும்

காலை மாலை உடலில் வெயில் படும் படி ஒரு மணி நேரம் இருக்க வேண்டும்.

பலன்கள் 

தோலில் உள்ள தொற்றுக்களை அழிக்கிறது, தோல் நோய்களை குணப்படுத்துகிறது, தைராய்டு குணமாகிறது, எலும்புகளை பலப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

💊#மூலிகை_சாப்பிராணி_தூபம் 💊
------------------------------------------------------------

👉தேவையான பொருட்கள் ❓

1. பால் சாப்பிராணி - 100 கிராம்

2. செஞ்சந்தனம் - 10 கிராம்

3. சந்தனத்தூள் - 10 கிராம்

4. அதிமதுரம் - 10 கிராம்

5. கடுகுரோகிணி - 10 கிராம்

6. ஜடாமஞ்சிரி - 10 கிராம்

7.கருங்குங்கிலியம் - 10 கிராம்

8. பூண்டுத்தோல் - 10 கிராம்

9. தேவாரம் - 10 கிராம்

10. கோஷ்டம் - 10 கிராம்

11. வசம்பு - 10 கிராம்

செய்முறை 

பால் சாம்பிராணியை தவிர அனைத்து பொருட்களையும் தனித்தனியே இடித்து பொடியாக்கி ஒன்றாக் கலந்து வைக்கவும், பின்பு அதில் பால் சாம்பிராணி கலந்து வைக்கவும்.

பயன்படுத்தும் முறை 

கரி அல்லது தேங்காய் தொட்டியை எரித்து தணலை சாம்பிராணி தூபத்தில் போட்டு சாம்பிராணி போடுவது போல் வீடு முழுக்க இந்த மூலிகை சாம்பிராணி புகையைக் காட்ட வேண்டும்.

பலன்கள்

காற்றை தூய்மைப் படுத்துகிறது, காற்றில் உள்ள கெட்ட கிருமிகள் வைரஸ்களை அழிக்கிறது. வீட்டில் உள்ள கொசு பூச்சிகளை விரட்டுகிறது.

வாரம் ஒரு நாள் மட்டும் இதை போடலாம். மற்ற நாட்களில் தினந்தோறும் தூய பால் சாப்பிராணி மட்டும் போடலாம்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!