நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அமெரிக்கா : கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளம் பெண்ணிற்கு குலுக்கலில் ரூ.7 கோடி பரிசு

 அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக வாரந்தோறும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து 1 மில்லியன் அமெரிக்க டாலரை பரிசாக வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி முதல் வாரத்திற்கான குலுக்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 22 வயது இளம் பெண்ணான Abbigail Bugenske தான் அந்த 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வென்ற அதிர்ஷ்டசாலி. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய். 


அவர் 1 மில்லியன் பரிசு தொகை வென்றுள்ளதை ஒகையோ மாநில ஆளுநர் மைக் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அப்போது அவர் காரில் பயணித்துக் கொண்டிருந்ததாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

“என்னால் இதை நம்ப முடியவில்லை. சற்றும் எதிர்பாராத ஒன்று. அவ்வபோது செய்திகளில் சிலருக்கு அதிர்ஷ்டம் அடித்ததை படித்துள்ளேன். இப்போது நானே அந்த அதிர்ஷ்டசாலி என்பதில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார் Abbigail Bugenske. அவர் மெக்கானிக்கல் பொறியாளராக விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு தான் தனது கல்லூரி படிப்பை நிறைவு செய்துள்ளார் அவர். 


ஒகையோ மாநிலத்தில் அடுத்து வரும் நான்கு வாரங்களுக்கு இதே போல தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குழுக்கள் முறையில் பரிசு வழங்கப்பட உள்ளது. 


ALSO READ : வெங்காயம் மூலம் கருப்பு பூஞ்சை பரவுகிறதா? பீதியை ஏற்படுத்தும் பகீர் தகவல்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!