நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

விண்வெளிக்கு கடல் வாழ் உயிரினங்களை அனுப்பும் நாசா!

 5 ஆயிரம் நீர் கரடிகள் மற்றும் நீரில் ஒளிரும் தன்மை கொண்ட 128 சிறிய வகை மீன்களை விண்வெளியில் இருக்கும் ஆய்வு மையத்துக்கு ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் அனுப்புகிறது நாசா.


ஜூன் 3 ஆம் தேதி நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் 22 ஆவது செயற்கைக்கோளை விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்ப நாசா திட்டமிட்டு இருக்கிறது. இதில் விண்வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆராய்ச்சி மையத்துக்கு கடல் வாழ் உயிரினங்களான 5 ஆயிரம் நீர் கரடிகள் மற்றும் ஒளிரும் தன்மை கொண்ட 128 சிறிய வகையிலான மீன்களை நாசா ராக்கெட் மூலம் அனுப்புகிறது.


மேலும் இந்த ராக்கெட்டில் சில சோலார் பேனல்களையும் அனுப்புகிறது. இந்தக் நீர் கரடியும், சிறிய வகை மீன்களும் நாசா தங்களுடைய ஆராய்ச்சின் ஒரு பகுதிக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



ALSO READ :

அமெரிக்கா : கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளம் பெண்ணிற்கு குலுக்கலில் ரூ.7 கோடி பரிசு

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!