நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Angelina Jolie: நூற்றுக் கணக்கான தேனீக்களை உடலில் மொய்க்க விட்ட ஏஞ்சலினா ஜோலி!

18 நிமிடங்கள் வரை ஏஞ்சலினாவின் உடலில் தேனீக்கள் மொய்க்க போட்டோ ஷூட் நடத்த வேண்டியிருந்தது.
தேனீக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தனது உடலில் தேனீக்களை மொய்க்க விட்டு புது வித ஃபோட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி.

பிரபலங்கள் குறிப்பாக நடிகைகள் வழக்கமாக, பல்வேறு உடைகள் மற்றும் தீம்களில் போட்டோஷூட் செய்து அதன் முடிவுகளை தங்கள் ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துக் கொள்கிறார்கள். இருப்பினும், ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகை ஏஞ்சலினா ஜோலி, 18 நிமிடங்கள் நூற்றுக்கணக்கான தேனீக்களை தனது உடலில் விட்டு ஒரு புதுமையான போட்டோஷூட்டை செய்திருக்கிறார். பூமியின் செயல்பாட்டில் மிக முக்கியமான உயிரினங்களில் தேனீக்களும் ஒன்று என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கையாளப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் வெள்ளை நிற கேப்ரியலா ஹியர்ஸ்ட் ஆடையை அணிந்து கொண்டிருக்கும் ஏஞ்சலினா நேராக கேமராவை நோக்கியபடி போஸ் கொடுக்கிறார். பூக்களை மொய்ப்பதை போல, ஏஞ்சலினாவின் தோள்பட்டை, மார்பு மற்றும் முகத்தில் தேனீக்கள் மொய்க்கின்றன.

18 நிமிடங்கள் வரை ஏஞ்சலினாவின் உடலில் தேனீக்கள் மொய்க்க போட்டோ ஷூட் நடத்த வேண்டியிருந்தது. இந்த பெருந்தொற்று நேரத்தில் இது மிகவும் சவாலான காரியமாக இருந்தது. இருந்தாலும் பாதுகாப்புடன் செய்து முடித்துள்ளோம். 40 ஆண்டுகளுக்கு முன்னர் ரிச்சர்ட் அவெடன் எடுத்த ‘பீ கீப்பர் போர்ட்ரைட்’ படத்தை முன்மாதிரியாக வைத்து அதே முறையை பின்பற்றி இந்த படத்தை எடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார் இதன் புகைப்படக்கலைஞர் டான் விண்டர்ஸ்.

இந்த படப்பிடிப்பின் போது ஏஞ்சலினா தவிர மற்ற அனைவரும், பாதுகாப்பு உடைகளை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!