நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகுக்கு ஒளி கொடுத்த விஞ்ஞானி

புகழ் பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ஆவார். தாமஸ் ஆல்வா எடிசன் சிறுவயதில் ரெயில் நிலையத்தில் செய்தித்தாள்களை விற்று வந்தார்.
பல விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பல ஆயிரம் புதிய கண்டுபிடிப்புகளை நமக்கு தந்து உள்ளனர். அவர்களில் சர் ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார். ரைட் சகோதரர்களும் அவ்வாய்ப்பையே மேற்கொண்டனர். அந்த வகையில் தாமஸ் ஆல்வா எடிசனும், புவிஈர்ப்பு விசைப்பற்றி ஆய்வை மேற்கொண்டார்.

இவர் ஒரு புகழ் பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ஆவார். தாமஸ் ஆல்வா எடிசன் சிறுவயதில் ரெயில் நிலையத்தில் செய்தித்தாள்களை விற்று வந்தார். ஒரு நாள் செய்தித்தாள்களை விற்கும் போது தந்தி எந்திரங்களில் எவ்வாறு விவரங்களை பயன்படுத்துவது என்று அறிந்தார். அந்த வருடத்திலேயே மின்சார சம்பந்தப்பட்டவற்றை அறியத் தொடங்கினார்.

1876-ம் ஆண்டு மேன்டே பார்க், நியூ ஜெர்சி மற்றும் உலகம் முழுக்க இதற்காகச் சென்றார். அன்று முதல் “விசார்ட் ஆப் மேன்டே பார்க்” என்ற பட்டப்பெயரை பெற்றார். அதற்கு பின் 1878-ம் ஆண்டு போனா கிராப்பையும் ரெக்கார்ட் பிளேயரையும் கண்டுபிடித்தார்.

1879-ம் ஆண்டு இவர் கண்டுபிடித்த மின்சார பல்புதான் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த கண்டுபிடிப்பினால் அவர் மேலும் அதிக கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தார். இன்று இந்த மின்சார பல்ப் இல்லாத நாடுகளே இருக்க முடியாது. மின்சார பல்ப் இல்லாத தெருக்களோ, சாலைகளோ இருக்க முடியாது. எடிசன் மட்டும் இந்த மின்சார பல்பை கண்டுபிடிக்கவில்லை என்றால் இன்றும் உலகம் இருளாகத்தான் இருந்து இருக்கும். எனவே இருளை அகற்றி வெளிச்சத்தை கண்டுபிடித்த பெருமை எடிசனையே சாரும்.

எடிசன் 100-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார். இவரின் அறிவாற்றல் வியக்கத்தக்க ஒன்றாகும். இவரின் கண்டுபிடிப்புகள் இன்றைய நாகரிக உலகில் ஒரு அங்கமாக விளங்குவது அவரின் அறிவாற்றலுக்கு கிடைத்த மிக பெரிய விருதாகும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!