நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்தியாவிற்குக் கைகொடுக்க பல மில்லியன் வெள்ளி நிதி திரட்டிய சிங்கப்பூர் குழுக்கள்

கொவிட்-19 இரண்­டா­வது அலையை எதிர்த்­துப் போராடி வரும் இந்­தி­யா­விற்­காக, சிங்­கப்­பூரில் உள்ள பல அமைப்­பு­கள் பண­மா­க­வும் பொரு­ளா­க­வும் பல மில்­லி­யன் வெள்ளி மதிப்­பி­லான உதவி­யைத் திரட்டி இருக்­கின்­றன.
இந்­திய மேலாண்மை நிறு­வனங்­க­ளின் முன்­னாள் மாண­வர் சங்­கம் (பிஐ­ஐ­எம்ஏ), இம்­மா­தம் 1ஆம் தேதி தொடங்கிய #BreatheLifeIntoIndia எனும் நிதித்­தி­ரட்டு நடவடிக்கை மூலம் இதுவரை $5.4 மில்­லி­ய­னைத் திரட்டி இருக்­கிறது.

அம்­மு­யற்சி மூலம் கிடைத்த $2.4 மில்­லி­யன் ரொக்­கம், 2,500 ஆக்­சி­ஜன் செறி­வூட்­டி­கள் வாங்கு­வதற்­காக சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தி­டம் வழங்கப்­ப­ட­ உள்­ளது. எஞ்­சிய $3 மில்­லி­ய­னும் பொரு­ளு­த­வி­யாக வந்­துள்­ளது.

இந்­திய மேலாண்மை நிறு­வனங்­க­ளின் முன்­னாள் மாண­வர்­கள் பலர் $1.6 மில்­லி­ய­னைப் பண­மாக நன்­கொடை வழங்­கி­னர். அச்­சங்­கம் அணு­கிய பெரு­நி­று­வ­னங்­கள் மூலம் எஞ்­சிய $800,000 நிதி திரட்­டப்­பட்­டது.

விநி­யோ­கிப்­பா­ளர்­களை அடை­யா­ளம் கண்டு மருத்­து­வப் பொருள்­களை வாங்­கு­தல், பேரம் பேசி விலை­யைக் குறைத்­தல், ஆக்­சி­ஜன் உரு­ளை­கள், செறி­வூட்­டி­களை வாங்க பல்­வேறு நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து செயல்­ப­டு­தல் எனப் பல வழி­க­ளி­லும் அச்சங்­கம் உத­விக்­க­ரம் நீட்­டி­யது.

“சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கம் இந்­தி­யா­விற்கு மருத்­து­வச் சாத­னங்­களை விநி­யோ­கிப்­பதை முடுக்­கி­விட இந்த ஒத்­து­ழைப்பு உதவி வரு­கிறது. நிதி திரட்­டி­ய­தோடு நில்­லாது, சிங்­கப்­பூர் ஐஐ­எம் முன்­னாள் மாண­வர்­கள் குழு மதிப்பு­மிக்க பல வழி­க­ளி­லும் கைகொடுத்து வரு­கிறது. இந்த ஒத்­து­ழைப்­பிற்­காக நாங்­கள் நன்­றிக்­க­டன் பட்­டுள்­ளோம்,” என்­றார் சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தின் தலைமை நிர்­வா­கி­யும் தலை­மைச் செய­லா­ள­ரு­மான திரு பெஞ்­ச­மின் வில்­லி­யம்.

‘பிஐ­ஐ­எம்ஏ’ மூலம் கிடைத்த ஆக்­சி­ஜன் செறி­வூட்­டி­க­ளைக் பய­னா­ளி­க­ளுக்­குக் கிடைக்­கச் செய்­யும் நட­வ­டிக்­கை­களை சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கம், இந்­திய செஞ்­சி­லு­வைச் சங்­கத்­து­டன் இணைந்து மேற்­கொண்டு வரு­கிறது.

நம்­ப­க­மான விநி­யோ­கிப்­பா­ளர்­களை அடை­யா­ளம் கண்டு, பணிப்பு­களை (orders) முன்­வைக்­க­வும் தள­வா­டப் பணி­களை மேற்­கொள்­ள­வும் தரச் சோத­னை­க­ளைச் செய்­ய­வும் இறு­தி­நிலை வரை விநி­யோ­கப் பணி­களை ஒழுங்­கு­ப­டுத்­த­வும் தனது தொண்­டூ­ழிய ஆத­ர­வுக் குழு, பல நாடு­க­ளி­லும் உள்ள ஐஐ­எம் முன்­னாள் மாண­வர் சங்­கங்­க­ளு­டன் தனது தொண்­டூ­ழிய ஆத­ர­வுக் குழு இணைந்து செயல்­பட்­ட­தாக ‘பிஐ­எம்­எம்ஏ’ கூறி­யது.

சிங்­கப்­பூ­ரி­லும் மலே­சியா, சீனா, தைவான், துருக்கி போன்ற நாடு­களி­லும் விநி­யோக நிறு­வ­னங்­களை அந்த மாண­வர் சங்­கக் கட்­ட­மைப்பு ஏற்­பாடு செய்­தது.

“பண­மா­க­வும் கட்­ட­மைப்பு வழி­யா­க­வும் உதவி செய்­த­து­டன், இந்த இக்­கட்­டான சூழ­லில் தங்­க­ளது விலை­ம­திக்க முடி­யாத நேரத்­தை­யும் ‘பிஐ­ஐ­எம்ஏ சிங்­கப்­பூர்’ உறுப்­பி­னர்­கள் செல­விட்­ட­னர்,” என்­றார் சங்­கத்­தின் தலை­வர் திரு சுரேஷ் சங்­கர்.

இந்­தி­யா­விற்­காக நிதி திரட்ட வேறு பல நிறு­வ­னங்­களும் உத­வி­ இ­ருக்­கின்­றன.

‘இண்­டஸ் ஆன்ட்­ர­பி­ர­னர்ஸ் (டிஐஇ) சிங்­கப்­பூர்’ அமைப்பு 2.2 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலரை (S$2.93 மி.) திரட்டியுள்ளது. சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக, தொழிற்­சபை­யும் (சிக்கி) லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டை­மைச் சங்­க­மும் (லிஷா) முன்­னெ­டுத்த நிதித்­தி­ரட்டு நட­வ­டிக்­கைக்கு சிங்­கப்­பூர் சீன வர்த்­தக, தொழிற்­சபை $50,000 நன்­கொடை வழங்­கி­யி­ருக்­கிறது.

‘பிஐஐஎம்ஏ’ நிதித்திரட்டு நடவடிக்கை அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை நீடிக்கும். விருப்பம் உள்ளோர் https://www.giving.sg/campaigns/piima_breathe_life_into_india எனும் இணையப்பக்கம் வழியாக நன்கொடை தரலாம்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!