தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
ஆழ்கடலில் இரையை தேடிவந்த இராட்சத ஸ்க்விட்... முதன்முதலில் பதிவுசெய்யப்பட்ட வைரல் காட்சிகள் வெளியீடு!
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
-
20 அடி உயரம் கொண்ட இந்த உயிரினம் விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்ட ஒரு போலி ஜெல்லிமீனை வேட்டையாடுவதைக் வீடியோவில் காணலாம்.
கடல் பாலூட்டிகள் இரைக்காக பதுங்கியிருந்து தாக்குதலைக் நடத்தும் என்று விஞ்ஞானிகள் முன்னர் வெளியிட்டிருந்த கருத்துக்களுக்கு முரணாக, இரையை கொல்ல செல்வதற்கு முன்னர் ஒரு மாபெரும் ஸ்க்விட் தனக்கான இரையைத் தேடுவதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
உண்மையில் ஸ்க்விட் தனது இரைக்காக வேட்டையாடும் காட்சிகள் கேமராவில் பதிவு செய்யப்பட்டன. 20 அடி உயரம் கொண்ட இந்த உயிரினம் விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்ட ஒரு போலி ஜெல்லிமீனை வேட்டையாடுவதைக் வீடியோவில் காணலாம். இது மெக்ஸிகோ வளைகுடாவில் 2,500 அடி ஆழ்கடலில் நிகழ்ந்ததாக மெயில் ஆன்லைன் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆச்சர்யமாக, ஆர்க்கிடூதிஸ் டக்ஸின் வேட்டை திறன்களை சித்தரிக்கும் இந்த வீடியோ விஞ்ஞானிகளால் முதன் முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏனெனில் இந்த உயிரினங்கள் கடலுக்கு கீழே ஆயிரக்கணக்கான அடி ஆழத்தில் இருப்பதால் இதனை புகைப்படம் எடுப்பது மிகக்கடினம். மேலும் அவை வாழும் இடம் பொதுவாக இருட்டாக இருக்கும் மற்றும் நீரின் தீவிர அழுத்தத்தை கண்காணிக்க சிறப்பு உபகரணங்கள் தேவைப்படும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடல் ஆராய்ச்சிக்காக உயிரியலாளர்கள் மெக்ஸிகோ வளைகுடாவின் கீழ் 2,500 அடி ஆழத்தில் ஒரு உள்ளமைக்கப்பட்ட கேமராவுடன் ஒரு சிறப்பு கூண்டை அனுப்பியுள்ளனர். அதன் மேல் ஈ-ஜெல்லி எனப்படும் போலி ஜெல்லிமீன்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும் அந்த போலி ஜெல்லி மீன்கள் பயோலுமினசென்ட்டை வெளியிட்டது. பயோலுமினென்சென்ஸ் என்பது ஒரு உயிரினத்தால் வெளியிடப்படும் ஒளியின் உற்பத்தி மற்றும் உமிழ்வு ஆகும். இது கெமிலுமுமின்சென்ஸின் ஒரு வடிவம் என்று கூறப்படுகிறது. பொதுவாக துன்பத்தில் இருக்கும் ஒரு ஜெல்லிமீன் இதனை வெளியிடுமாம்.
இந்த காட்சிகள் 2019ல் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அண்மையில் ஆராய்ச்சியாளர்களால் ஸ்க்விட்களின் தாக்குதல் முறையை மதிப்பிட்ட பின்னர் இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த மாபெரும் கடல் பாலூட்டி தனது இரையை வெளிப்படையாகப் பின்தொடர்வதையும், அதன்பிறகு இறுதித் தாக்குதலுக்குச் செல்வத்தையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.
ஆழ்கடலில் வசிக்கும் மாபெரும் ஸ்க்விட் தனது வாழ்விடங்களில் தாக்குதல் திறன்களை வெளிப்படுத்திய முதல் வீடியோ இதுவாகும். மற்றவை பல இறந்த ஸ்க்விட் உயிரினங்கள் கரையை வந்தடையும் போது எடுக்கப்பட்டதாகவே இருந்தது. இதற்கு முன்னதாக, 2004ம் ஆண்டு ஒரு உயிருள்ள ராட்சத ஸ்க்விட்டின் முதல் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் அந்த வீடியோ கூட 2012ம் ஆண்டில் தான் வெளியிடப்பட்டது.
இந்த உண்மைகள் அனைத்தும் மாபெரும் ஸ்க்விட்களைப் பற்றிய அறியப்படாத ரகசியங்களை ஆராய்வதற்கான பரந்த சாத்தியக்கூறுகளை ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்குகின்றன. இந்த கடல் ராட்சதர்களைப் பற்றி விஞ்ஞானிகள் அறிந்திருப்பது அவற்றின் வளரக்கூடிய திறனை பற்றித்தான். இந்த மழுப்பலான உயிரினங்கள் 40 அடிக்கு மேல் வளரக்கூடியவை. மேலும் கூடைப்பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் பந்தை போல பெரிய கண்கள் இவற்றிற்கு உள்ளன.
மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும் என்றார் அமெரிக்க நாடடு அதிபர் ஜான்கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழ வேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும். முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோரு
ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் ஆகியவை செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகின்றன. ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு எரிதல், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்றுவலி, புளிப்பு ஏப்பம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தவறான உணவுப் பழக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம். அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட உணவு பழக்கங்களில் சில மாற்றுதல்கள் செய்வது நல்ல பலன தரும் என்கின்றனர் மருத்துவர்கள். அசிடிட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருப்பது அசிடிட்டிக்கு முக்கிய காரணம். ஜீரணிக்க எதுவும் இல்லாத போது, வயிற்றின் அமிலம் வயிற்றின் உட்புறப் சுவர்களை தாக்கி அதனை மெலியச் செய்கிறது. மேலும் சாப்பிட்ட பிறகு தூங்கவோ, படுக்கவோ கூடாது. சூடான காரமான உணவுகள், வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட், மது,
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, இன்று(மார்ச் 31) வெளியாக உள்ளது. தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச், 25ல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. புத்தாண்டில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். எனினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அரசு அறிவித்த ஊரடங்கு, இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகிறது.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம் துவக்கத்தில் இருந்து, கொரோனா நோய் பரவல், மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் விதிக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர். தேர்தல் முடிந்தபின் கட்டுப்பாடுக
Comments
Post a Comment