Posts

Showing posts from April, 2022

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்த படத்தில் மறைந்துள்ள விலங்கு எதுவென்று கண்டுபிடியுங்க பார்க்கலாம்..

Image
இந்த ஓவியத்தை பிரபல ரஷ்ய கார்ட்டூனிஸ்ட்டான வாலண்டைன் டுபினின் என்பவர் வடிவமைத்தார். இணையத்தில் பல விதமான செய்திகளும், தகவல்களும் உலா வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் சில நமது ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கும். பொதுவாக இணையத்தில் உள்ள புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதற்கு காரணம் அதில் இடம்பெற்றுள்ள தகவல் தான். சிலவற்றில் நம்மை வியக்க வைக்க கூடிய செய்திகள் இடம்பெறும், அதே போன்று சிலவற்றில் வினோதமான தகவல்களும் இடம்பெறும். சில படங்கள் எந்த வித எழுத்துக்களும் இல்லாமலும் வியப்பானதாக இருக்கும். அந்த வகையில் நமது கண்களையும், மூளையையும் ஏமாற்ற கூடிய பல விஷயங்களை சாதாரண புகைப்படங்கள் மூலம் நம்மால் உணர முடியும். குறிப்பாக ஆப்டிகல் இலுஷன் என்கிற முறையை பயன்படுத்தி வரக்கூடிய பல புகைப்படங்கள் மிகவும் புதுமையான வகையில் இருக்கும். ஒளியியல் மாயை என்று சொல்லப்படும் ஆப்டிகல் இலுஷனை உண்மையில் இல்லாத ஒன்றைக் காண நம் கண்களையும் மூளையையும் ஏமாற்றுவதற்கு வடிவமைக்கப்பட்ட முறையாகும். இந்த ஆப்டிகல் இலுஷன் முறை என்பது பல நூற்றாண்டுகளாக பழக்கத்தில் இருந்த பழமையா

கால்மீது பட்டால் மூளையைக் குழப்பி திசைமாறி போகச் செய்யும் செடி; உங்களுக்குத் தெரியுமா?

Image
மனித மூளையின் எல்லைக்கு எட்டாத எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் பல கட்டுக்கதைகளும் மூடநம்பிக்கைகளும் நம்மிடையே உலாவுவது வழக்கம். மனிதனால் முழுமையான புரிதலுக்கு வர முடியாத கடல், ஆகாயம், வனங்கள் உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் பற்றிய கதைகளைக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். அப்படி ஒரு சம்பவம் அண்மையில் தமிழகத்தில் நடந்துள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையின் அருகில் அக்காமலை எஸ்டேட்டில் வேலை செய்து வரும் நடுத்தர வயது பெண், வீட்டில் அடுப்பெரிக்க விறகு தேடி அருகிலுள்ள ஊசிமலை வனப்பகுதிக்குள் சென்றிருக்கிறார். வனத்துக்குள் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. வனத்துறை, காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து அவர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இறுதியாக 3 நாள்களுக்குப் பிறகு, சின்ன கல்லாறு பகுதியில் மிகவும் பலவீனமான நிலையில் அந்தப் பெண்ணை மீட்டனர். மூன்று நாள்களாக எதுவும் சாப்பிடாததால் மிகவும் பலவீனமாக இருந்த அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு, சற்று தேறியவரிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர் தெரிவித்த தகவல் அனைவர

அந்தகாலம்

Image
* அந்தகாலம்*. ஊசி போடாத *Doctor* .. சில்லறை கேட்காத *Conductor* .. சிரிக்கும் *police* ... முறைக்கும் *காதலி* .. உப்பு தொட்ட *மாங்கா* .. மொட்டமாடி *தூக்கம்* .. திருப்தியான ஏப்பம்... Notebookன் *கடைசிப்பக்கம்* ... தூங்க *தோள் கொடுத்த* சக பயணி .... பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய *நண்பன்* .. இப்பவும் டேய் என அழைக்கும் *தோழி* .. இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் *அம்மா* ... கோபம் மறந்த *அப்பா* .. சட்டையை ஆட்டய போடும் *தம்பி* .. அக்கறை காட்டும் *அண்ணன்* .. அதட்டும் *அக்கா* ... மாட்டி விடாத *தங்கை* .. சமையல் பழகும் *மனைவி* ... சேலைக்கு fleets எடுத்துவிடும் *கணவன்* .. வழிவிடும் *ஆட்டோ* காரர்...  *High beam* போடாத லாரி ஓட்டுனர்.. அரை மூடி *தேங்கா* .. 12மணி *குல்பி* .. sunday *சாலை* ... மரத்தடி *அரட்டை* ... தூங்க விடாத *குறட்டை* ... புது நோட் *வாசம்* .. மார்கழி *மாசம்* .. ஜன்னல் *இருக்கை* .. கோவில் *தெப்பகுளம்* .. Exhibition *அப்பளம்* .. முறைப்பெண்ணின் *சீராட்டு* ... எதிரியின் *பாராட்டு* .. தோசைக்கல் *சத்தம்* .. எதிர்பாராத *முத்தம்* ... பிஞ்சு *பாதம்* .. எளிதில் *மணப்

உங்கள் காதல் எப்படிப்பட்டது..? இந்த ஆப்டிக்கல் இமேஜ் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்!

Image
இந்த புகைப்படத்தை ஒலேக் ஷுப்லைக் என்பவர் வடிவமைத்துள்ளார். பின்வரும் புகைப்படத்தில், மாஸ்க் அணிந்த ஒரு பெண்ணின் முகம், ஒரு காதல் ஜோடி, ஒரு காலியான படகு மற்றும் நகரத்தின் காட்சி.

கொசுக்களை விரட்டும் செடிகள்........

Image
  நறுமணம் பரப்பும் சில செடிகளை வீட்டில் வளர்த்து கொசுக்களை விரட்டலாம். அதிலும் சாமந்திப்பூ, செடியில் இருந்துவரும் தனித்தன்மை கொண்ட வாசனையை பூச்சிகளும், உயிரினங்களும் விரும்புவதில்லை. இச்செடிகளை கடந்து வீட்டுக்குள் செல்ல கொசுக்கள் தயங்குகின்றன. இச்செடியை நிழலில் வைத்தால் வளர்ச்சி தாமதமடையும் என்பதால், வெயிலில் வளர்ப்பது நல்லது. அசுவினி உள்ளிட்ட பூச்சிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது என்பதால், விவசாயத் தோட்டத்திலும் இதை வளர்க்கலாம். ‘சிட்ரோநெல்லா புல்’ என்ற செடியின் இலைகளை கசக்கினால் எலுமிச்சை மணம் தூக்கலாக வீசும். இது, இந்த புல்லின் தனிச்சிறப்பு. இதில் இருந்து எடுக்கப்படும் ‘சிட்ரோ நெல்லா’ எண்ணெய் வாசனை பொருளாகவும், மூலிகைத் திரவமாகவும் பயன்படுகிறது. இந்த எண்ணெயை மெழுகுவர்த்தி, விளக்குகளில் ஊற்றி எரித்தோ, சருமத்தில் தேய்த்துக்கொண்டோ கொசுக்களில் இருந்து காத்துக்கொள்ளலாம். ஒரு வகை புதினா செடியின் (ஹார்ஸ் மின்ட்) மணம் சிட்ரோெநல்லா புல்லைப் போலவே இருக்கும். வெப்பமான இடங்களிலும், மணற்பாங்கான பகுதியிலும்கூட நன்றாக வளரும். பல்லாண்டு தாவரம் என்பதால், ஒரு முறை நட்டுவிட்டால் நான்கைந்து ஆண்டுகளுக்க

குறட்டை சத்தம்

Image
  தூங்கும் போது குறட்டை பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் எடை அதிகரித்தல். பலருக்கு ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் நாளடைவில் குறட்டையும் வந்துவிடுகிறது. ஒருவித ஒவ்வாமையாலும் சைனஸ் பிரச்சினையாலும், மூக்கிலிருக்கும் மெல்லிய தடுப்புச் சுவர் வளைவதாலும், தொண்டையிலும் அடிநாக்கிலும் தசைநார்கள் வலுவிழப்பதாலும், குடிப்பழக்கத்தாலும், தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதாலும், தொண்டையில் உள்ள சதை தடிப்பதாலும், குழந்தைகளுக்கு டான்சில் அல்லது அடினாய்டுகள் ஏற்படுவதாலும், உள்நாக்கு நீண்டு காற்று செல்லும் வழியைத் தடுப்பதாலும் குறட்டை ஏற்படுகிறது. எப்போதாவது குறட்டை விட்டால் பிரச்சினை இல்லை, குறட்டை சத்தம் அந்த அறையில், சில சமயங்களில் அந்த வீட்டில் யாரையும் தூங்கவிடாமல் செய்துவிடும். குறட்டை விடுவதால் அவர்களால் தொடர்ந்து தூங்க முடியாது. அப்படி வரும் தூக்கமும் ஆழ்ந்த தூக்கமாக இருக்காது. தங்களுக்கு தூக்கக் குறைவு ஏற்படுகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்களால் உணரவும் முடியாது. அடுத்த நாள் வேலைக்குச் செல்லும்போது அல்லது வேலையில் இருக்கும்போது கண்ணை செருகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய தசை

ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான வேர்கடலை பொடி

Image
இந்த வேர்க்கடலை பொடியில் நல்லெண்ணையை ஊற்றி இட்லியில் பிரட்டி அப்படியே சாப்பிட்டு தான் பாருங்க அவ்வளவு அருமையா இருக்கும். இன்று வேர்க்கடலை பொடி செய்வது எப்படி பார்க்கலாம். தேவையான பொருட்கள் வேர்க்கடலை – 1 கப்,  வரமிளகாய் – 20, எண்ணெய் - 1 ஸ்பூன் கடலைப்பருப்பு – அரை கப், கறிவேப்பிலை – 2 கொத்து, பூண்டு பல் – 10, உப்பு – தேவையான அளவு செய்முறை அடுப்பில் ஒரு கடாயை எண்ணெய் ஊற்றி சூடானதும் வரமிளகாயை போட்டு வறுத்த பின்னர் வேர்க்கடலை கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். வேர்க்கடலையும் கடலைப்பருப்பும் பொன்னிறமாக வறுபடும் வரை இந்த பொருட்களை எல்லாம் கை விடாமல் வறுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அனைத்தும் நன்றாக வறுபட்டவுடன் ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள். நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு அத்துடன் பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் மணக்க மணக்க காரசாரமான வேர்கடலை பொடி தயார். Also read :  உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் சின்ன வெங்காய புதினா துவையல்

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள்

Image
தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வாய்வழி சுகாதாரத்திற்கு உகந்ததாக இருப்பதால் குழந்தைகளுக்கு பல் சிதைவு ஏற்படும் அபாயம் குறைகிறது. பச்சிளம் குழநதைக்கு தாய்ப்பால் கொடுப்பது அதன் ஆரோக்கியத்திற்க பல்வேறு வகைகளில் நன்மைகள் பயக்கும். குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயம் குறையும். ஒவ்வாமை பிரச்சனையும் எட்டிப்பார்க்காது. உடல் பருமன் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. டைப்-1, டைப்-2, நீரிழிவு நோயும் குழந்தையை நெருங்காது. காதுகாளில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். இரைப்பை குடல் அழற்சி பாதிப்பும் ஏற்படாது. மூளையின் வளர்ச்சி சீராக நடைபெறுவதற்கான சூழல் உண்டாகும். போலியோ, டெட்டனஸ் டிப்தீரியா மற்றும் ஹீமோபிலஸ் இன்ப்ளூபய்ஸா போன்ற தடுப்பூசியின் செயல் பாட்டுக்கு தாய்ப்பால் சிறப்பான பங்களிப்பை வழங்குகிறது. தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வாய்வழி சுகாதாரத்திற்கு உகந்ததாக இருப்பதால் பல் சிதைவு ஏற்படும் அபாயம் குறைகிறது. தாய்ப்பால் தவறாமல் கொடுப்பது அவசியமானது. அது அறிவாற்றல் வளர்ச்சி செயல்திறனுடன் தொடர்புடையது. நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சியால் குழந்தை அவதி

கோடையில் 6 மாதங்களுக்கு மேலான குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்

Image
கோடையில் குளிர்ச்சியான உணவுகளை தேர்ந்தெடுப்பது குழந்தையை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும். மேலும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆயுர்வேத மருத்துவத்தின்படி சில உணவுக்கு வெப்பம் அல்லது குளிர்ச்சி தன்மை உ ள்ளது. மேலும் கோடையில் குளிர்ச்சியான உணவுகளை தேர்ந்தெடுப்பது குழந்தையை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும். இந்த உணவுகள் வெப்பநிலையை சீராக்கி நீரிழப்பு உண்டாகாமல் தடுக்கிறது. அப்படியான உணவு பட்டியலை இப்போது பார்க்கலாம். தர்பூசணி பெரியவர்களை போன்றே சிறியவர்களுக்கும் இது சிறந்த உணவு. 92% நீர்ச்சத்து கொண்டவை. இதில் வைட்டமின் எ, பி காம்ப்ளக்ஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளன. இது நச்சுகள் மற்றும் லைகோபீன் அகற்ற உதவுகின்றன. வெள்ளரிக்காய் இதுவும் 90% நீர்ச்சத்து கொண்டவை. இது டையூரிடிக் என்பதால் வெள்ளரிகள் உடலில் இருந்து ந்ச்சுக்களை வெளியேற்றுகிறது. இதில் வைடமின் பி,ஃப்ளவனாய்டுகள், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. செரிமான அமைப்பு சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கலை தடுக்க செய்கிறது. குழந்தைக்கு வெள்ளரிக்காய் ஆறு மாதங்களுக்கு பி றகு கொடுக்கலா

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் சின்ன வெங்காய புதினா துவையல்

Image
தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த குழாயில் அடைக்கும் கொழுப்பை கரைத்து இதய நோய் வராமல் தடுக்கும். தேவையான பொருட்கள்:      சின்ன வெங்காயம் - 50 கிராம்,   கறிவேப்பிலை - ஒரு கொத்து புதினா - ஒரு கைப்பிடி காய்ந்த மிளகாய் - 12,   கல் உப்பு - தேவையான அளவு. செய்முறை:   புதினாவை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து நன்றாகக் கழுவிக்கொள்ளவும். ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைச் சூடாக்கவும். பின்னர் அதில் உரித்த சின்ன வெங்காயம், புதினா, கறிவேப்பலை, காய்ந்த மிளகாய் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். வெங்காயம் லேசாக நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிடவும். வேக வைத்தவற்றை நன்கு ஆறவிடவும். மிச்கியில் கல் உப்பு, வேகவைத்த வெங்காய கலவையை போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதைச் சிறிய கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ளவும். சத்தான சுவையான சின்ன வெங்காய புதினா துவையல் ரெடி. Also read :  தர்பூசணி தரும் நோய் எதிர்ப்பு சக்தி

இதில் மறைந்திருக்கும் குதிரை முகம் தெரிகிறதா? கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் கில்லாடி தான்..

Image
உங்கள் மூளை எப்படி இயங்குகிறது மற்றும் மூளையை எப்படி டிரெயின் செய்யலாம் என்பதையும் ஆப்டிக்கல் இல்யூஷன் சோதனை மூலம் கற்றுக்கொள்ளலாம். நம்முடைய ஆளுமை, குணநலன்கள், பலம் மற்றும் பலவீனங்களை எளிதாகத் தெரிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஆப்டிக்கல் இல்யூஷன். ‘இருக்கு ஆனா இல்ல’ என்று கூறுவது போல, ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும். அதே போல இங்கே ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் (மாயை) புகைப்படம் உள்ளது. அதில் உங்களுக்கு முதலில் தெரிந்தது என்ன? நீங்கள் புகைப்படத்தில் முதலில் எதைப் பார்த்தீர்கள் என்பதன் அடிப்படையில், உங்கள் ஆளுமைப் பண்பைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். கீழே உள்ள புகைப்படத்தின் உங்களுக்கு எந்த விலங்கின் படத்தை முதலில் பார்த்தீர்கள்? சரி, தவறு என்பது ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தில் வேறுபாடும். அதே போல, ஆப்டிக்கல் இல்யூஷன் மூலம் தன்னைப் பற்றி வெவ்வேறு கோணத்தில் தெரிந்து கொள்ள முடியும். ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் வெவ்வேறு விதமாக இருக்கும், உங்கள் பார்வையில் நீங்கள் உலகை, குறிப்பி

பால் குளியல் தரும் நன்மைகள்

Image
குறிப்பிட்ட கால இடைவெளியில் பால் குளியல் போடுவது கரும்புள்ளிகள் மற்றும் சூரிய வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை மேம்படுத்த உதவும் என்ற கருத்து நிலவுகிறது. சருமம் உரிதல்: பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. உடலில் இருந்து இறந்த செல்களை நீக்குவதற்கு பாலில் இருந்து தயாரிக்கப்படும் மோரை அதிகம் பயன்படுத்தலாம். அத்தகைய ஈரப்பதத் துடன் இறந்த செல்களை நீக்குவதால் சருமத்தில் பளபளப்பை தக்கவைத்துக்கொள்ளலாம். பாலை பருகுவதோடு சரும அழகை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். பாலில் உள்ள கொழுப்புகள் சருமத்தில் படர்ந்திருக்கும் எண்ணெய் தன்மையை கட்டுப்படுத்தி சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு உதவும். அதில் காணப்படும் லாக்டிக் அமிலம் இறந்த சரும செல்களை அகற்றுவதற்கு துணைபுரியும். பால் குளியல் உடலையும், மனதையும் தளர்வாக்கும். சருமத்தை புத்துணர்ச்சி அடையச்செய்யும். பல்வேறு உளவியல் நன்மைகளையும் வழங்கும். அழற்சி: பால் குளியலானது சரும வறட்சி, தோல் தடிப்பு, தோல் அழற்சி, அரிப்பு போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும் என்று நம்பப் படுகிறது. இருப்பினும் அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் உறுதி செய்யப்படவில்லை. ஆகையா

தொப்புள் வைத்தியம்

Image
நம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்துள்ள அற்புத பரிசு. 62 வயது முதியவர் ஒருவருக்கு இடது கண் பார்வை மிக மோசமாக இருந்தது.   இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டார். கண் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு அவரது கண்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும் ஆனால் கண்களுக்கு இரத்தம் கொண்டு வரும் நரம்புகள் வறண்டுவிட்டதால் மீண்டும் பார்வை ஒருபோதும் வராது என்றும் கூறிவிட்டார்.... அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான். தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது.  நமது தொப்புள் உண்மையிலே ஆச்சரியப்படும் ஒன்று தான். அறிவியல் படி, ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம்.   காரணம் ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும்.  முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் ஆகின்றன. நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். தொப்புளே நமது உடம்பின் குவ

1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்… கோடையை சமாளிக்க இந்த சர்பத்தை ட்ரை பண்ணுங்க!

Image
  ஏலக்காய் சர்பத்; கோடையை சமாளிக்க வீட்டிலேயே செய்யலாம்; செய்முறை இங்கே கோடைக்காலம் வந்துவிட்டாலே எல்லாரும் வெயிலை சமாளிக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்கிறோம். அதிக தண்ணீர் அருந்துவது, குளிர்ச்சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது என ஓவ்வொருவரும் பல்வேறு வழிகளை பின்பற்றி வருகின்றனர். வெளியில் வேலை பார்ப்பவர்கள் அல்லது அடிக்கடி வெளியில் செல்பவர்கள், கடைகளில் ஜூஸ், இளநீர், வெள்ளரிக்காய் என ஏதோ ஒன்றின் மூலம் தங்கள் தாகத்தையும் கோடையின் தாக்கத்தையும் சமாளித்துக் கொள்கின்றனர். ஆனால், வீட்டில் உள்ளவர்கள், வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள், பள்ளி குழந்தைகளுக்கு இது சற்று சிரமமான விஷயம். ஆனால் இதற்கு எளிய தீர்வு உண்டு. வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிமையான சர்பத் செய்வதன் மூலம் நீங்கள் இந்தக் கோடையை சமாளிக்கலாம். ஆமாம் சில ஏலக்காய்கள் போதும் உங்கள் கோடை வறட்சி தீர்ந்துபோகும். ஏலக்காய் கொண்டு சர்பத் தயாரிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். ஏலக்காய் இல்லாமல் சமையலறையில் உள்ள மசாலாப் பொருட்கள் முழுமையடையாது. ஏலக்காய் இனிப்புகள் முதல் காய்கறிகள் மற்றும் அசைவ உணவுகள் வரை பல்வேறு உணவுகளில் பயன்

டீடாக்ஸ் உங்கள் உடலுக்கு மட்டுமல்ல.. தலைமுடிக்கும் தான்.. எப்படி செய்றதுனு பாருங்க!

Image
  உங்கள் தலைமுடிக்கு புதிய வாழ்க்கையை வழங்குவதற்கான வழிகளைத் தேடுகிறீர்களானால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில எளிய குறிப்புகள் இங்கே உள்ளன. உடல் மற்றும் அதன் உள் அமைப்புகளைப் போலவே, முடிக்கும் அவ்வப்போது ஒரு டீடாக்ஸ் தேவைப்படுகிறது. அதிகப்படியான அழுக்கு, மாசு, சூரிய ஒளி மற்றும் தூசி ஆகியவற்றை நாம் வெளிப்படுத்தும்போது, ​​முடி அதன் இயற்கையான பிரகாசத்தை இழக்கத் தொடங்குகிறது. அழுக்கைப் போக்க நீங்கள் உச்சந்தலையில் சேர்க்கும் அனைத்து இரசாயனப் பொருட்களும் அதன் தரத்தை மோசமாக்கும். இதனால்தான் தாய்மார்களும் பாட்டிகளும் கூந்தல் பராமரிப்புக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்துவதை எப்போதும் வலியுறுத்துகின்றனர். உங்கள் தலைமுடிக்கு புதிய வாழ்க்கையை வழங்குவதற்கான வழிகளைத் தேடுகிறீர்களானால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில எளிய குறிப்புகள் இங்கே உள்ளன. தேன் ஷாம்பு ஆம், நீங்கள் படித்தது சரிதான். நீங்கள் வீட்டிலேயே தேன் ஷாம்பூவை உருவாக்கலாம், இது உங்கள் தலைமுடியை நச்சுத்தன்மை நீக்க ஒரு சிறந்த வழியாகும். இதற்கு, உங்களுக்கு ஒரு தேக்கரண்டி தேன், மூன்று தேக்கரண்டி ஃபில்ட்டர் ந

இவை தான் முடி கொட்டுவதற்கான முக்கிய காரணங்கள்...

Image
உங்களுக்கு எதனால் முடி கொட்டுகிறது என்கிற காரணத்தை முதலில் தெரிந்து கொண்டு அதற்கேற்ப நம் உணவிலும் பண்புகளிலும் சிறுசிறு மாற்றங்கள் செய்தால், முடி கொட்டுதலுக்கு முடிவு கட்டிவிடலாம். இன்று மனிதர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்சனைகள் அதிகம் இருக்கின்றன. அவற்றில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது, தலைமுடி உதிர்வதும், வழுக்கை விழுவதும்! இன்று ஆண்களுக்கு மட்டுமல்ல…. பெண்களுக்கும் முடி உதிர்வு அதிகமாகி, வழுக்கை விழுவது அதிகமாகி வருகிறது. உங்களுக்கு எதனால் முடி கொட்டுகிறது என்கிற காரணத்தை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதிலிருந்து விடுபட அதற்கேற்ப நம் உணவிலும் பண்புகளிலும் சிறுசிறு மாற்றங்கள் செய்தால், முடி கொட்டுதலுக்கு முடிவு கட்டிவிடலாம். முடி உதிர்வுக்கான காரணங்கள்….. பரம்பரையாக முடி கொட்டுதல் என்பது ஒரு காரணம் என்றாலும், நாம் நமது பண்புகளை மாற்றிக் கொள்வதன் மூலம் நிச்சயமாக இதை ஜெயிக்க முடியும். ஆம், பரம்பரையாக செய்த சில தவறுகளை முத்திரைகள் மூலமே சரி செய்ய முடியும். உடல் சூடு உடலில் அதிகமான உஷ்ணம் காரணமாக பிட்யூட்டரி, பீனியல் சுரப்பி ஒழுங்க

ஹேக்கிங் கலை - நல்லதும் செய்யும், கெட்டதும் செய்யும்...

Image
கூகுள் தேடுதளத்தில் ஹேக்கிங் பயிற்சி என தேடினால், ஆன்லைன் வகுப்பு விவரங்கள் ஏராளமாக வந்து குவியும். இப்படி ஹேக்கிங் கலையை கற்க ஏராளமான வழிகள் இருக்கின்றன. ஆன்லைன் தளங்களை முடக்குவதும், அதிலிருக்கும் தகவல்களை அவர்கள் அனுமதியின்றி புரட்டி பார்ப்பதும் ஹேக்கர்களின் வேலை. ஆனால் அத்தகைய ஹேக்கர்களின் பட்டியலில் வரும் ஆனந்த் பிரகாஷ் வித்தியாசமானவர். இவர் என்ன செய்கிறார் என்பதை அவரிடமே கேட்கலாம். ‘‘ஹேக்கிங் பொருத்தமட்டில் இருவகை உண்டு. ஒன்று பிளாக் ஹேட் ஹேக்கர். அதாவது சமூக வலைத்தளம், இணையதளத்திற்குள் புகுந்து, அங்கிருக்கும் தகவல்களையும், டிஜிட்டல் பணத்தையும் திருடக்கூடியவர்கள். மற்றொன்று ‘ஒயிட் ஹேட் ஹேக்கர்'. இதுவும் அப்படிதான். பிரபல நிறுவனங்களின் இணையதளத்திற்குள் புகுந்து, அங்கிருக்கும் வலைதள கட்டமைப்புகளை ஆராய்வோம். அதில் ஏதாவது தொழில்நுட்ப ஓட்டைகள் இருக்கிறதா?, தகவல்களை திருட முகாந்தரம் இருக்கிறதா? என்பதை ஆராய்ந்து, அதை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். இவர்களைதான், ஒயிட் ஹேட் ஹேக்கர் என்கிறோம். நானும் இந்த ரகம்தான்’’ என்றவரிடம் ஹேக்கிங் பணியில் ஆர்வம

தர்பூசணி தரும் நோய் எதிர்ப்பு சக்தி

Image
அதிகமான உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இந்த தர்பூசணியை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து அவற்றை வெளியேற்றுகிறது. தர்பூசணி புத்துணர்ச்சியூட்டும் குறைந்த கலோரி கொண்ட கோடை கால பழமாகும். இதில் அதிகமான நீர் சத்து மற்றும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தர்பூசணி 90 சதவீதம் தண்ணீரை கொண்டது. இது கோடையில் ஏழை எளிய மக்களுக்கு தாகம் தீர்க்கும் சிறந்த பழமாக இருக்கிறது. இந்த பழம் இயற்கையாகவே நீர் மற்றும் இனிப்பை கொண்டது. தர்பூசணியில் ஆன்டிஆக்சிடன்ட்கள் உள்ளன. தர்பூசணியில் இரும்புச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இது நம் உடலுக்கு அதிக நன்மையை கொடுக்கிறது. தர்பூசணி நவம்பர் மாதத்தில் சாகுபடி செய்து ஜனவரி மாதத்தில் சந்தைக்கு வருகிறது. ஜனவரி முதல் கோடை காலம் முடிந்து ஜூன் மாதம் வரை சந்தையில் விற்கப்படுகிறது. தர்பூசணியின் சாகுபடி காலம் 90 நாட்கள் ஆகும். தர்பூசணியின் எடையானது குறைந்தது 8 முதல் 12 கிலோ வரை இருக்கும். தர்பூசணியில் ஏராளமான சத்துக்கள் உள்ளது.தர்பூசணி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது மற்றும் உயர்

வாய் துர்நாற்றமா? கவலையை விடுங்க.. அதனை போக்க உதவும் சில எளிய குறிப்புகள் இதோ.........

Image
 பொதுவாக சில பேருக்கு தினசரி பல் துலக்கி பற்களை பராமரித்து வந்தால் கூட வாய் துர்நாற்றம் என்பது சரி செய்ய முடியாத பிரச்சினையாக இருக்கும். இதனால் அவர்கள் பொது இடங்களில் நிறைய சங்கடத்திற்கு உள்ளாவார்கள். மற்றவர்களின் கேளிக்கைக்கு ஆளாவார்கள். வாய் துர்நாற்ற பிரச்சினை பல காரணங்களால் உண்டாகிறது. குறிப்பாக ஈறு கோளாறுகள், தவறான பற்களின் சுகாதாரம் மற்றும் மாவுப் பொருட்களால் பூசப்பட்ட நாக்கு இவற்றால் ஏற்படுகிறது என்கிறார் பல் மருத்துவர். எனவே இவற்றை நீக்க ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம். தினமும் இரண்டு முறை காலை மற்றும் இரவு தூங்கும்முன் பல் துலக்குவது பல் இடுக்குகளில் தங்கியிருக்கும் உணவுகளையும், அழுக்குகளையும் பொருள்களை சுத்தப்படுத்த உதவும். இதனால் நாற்றம் ஏற்ப்படாது. கிராம்பு அல்லது சீரகம் மென்று வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்ளலாம். எலுமிச்சை சாறுடன் நீர், சிறிது உப்பு கலந்து குடித்து வரலாம். இதில், வாய்கொப்புளித்தாலும் நாற்றம் நீங்கும். குடலில் ஏற்படும் பிரச்சனையால்தான் வாயில் நாற்றம் ஏற்படுகிறது. அதற்கு, தினமும் காலையில் 4 டம்ளர் தண்ணீர் வெறும் வயிற்றில் குடித்து வர வயி

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!