நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உங்கள் முகத்தில் தேவையில்லாத முடி இருக்கிறதா? இதனை எப்படி எளியமுறையில் போக்கலாம்?

 பொதுவாக இன்றைய கால பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடி வளருவது பெரும் பிரச்சினையாக உள்ளது.

இதனால் பல பெண்கள் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க பிளக்கிங், ஷேனிங், வேக்சிங் போன்ற முறைகளையும், முடியினை வேரோடு நீக்க நவீன மருத்துவச் சிகிச்சைகளையும் செய்து வருகின்றனர்.

ஆனால், இதனால் பல்வேறு பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன. எவ்வித பக்கவிளைவுகளுமின்றி ஒரு சில எளிய வழிகள் மூலம் கூட இதனை போக்கலாம். தற்போது அதனை பார்ப்போம்.


முட்டை வெள்ளை கரு மற்றும் சோள மாவு


மஞ்சள் கருவில் இருந்து முட்டையின் வெள்ளைக்கருவை பிரித்தவுடன், ஒரு தேக்கரண்டி சோள மாவு மற்றும் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கவும்.

கெட்டியான பேஸ்டாக மாறும் வரை இந்த பொருட்கள் அனைத்தையும் கலக்கவும். இதை உங்கள் முகத்தில் மெதுவாக தடவவும். உங்கள் தோல் இறுக்கமாக உணர்ந்தவுடன், மாஸ்கை உரிக்கவும்.

நல்ல முடிவுகளைப் பார்க்க, மாஸ்கை உரிப்பதற்கு முன் குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருக்கவும். இப்படி செய்வதால், முடி அகற்றப்படுவது மட்டுமல்லாமல், இறந்த செல்கள் கூட வெளியேறும்.


வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ்


பாதி வாழைப்பழத்தை எடுத்து சரியாக மசிக்கவும். மசித்த வாழைப்பழத்தில், இரண்டு தேக்கரண்டி ஓட்ஸ் சேர்த்து, இவை அனைத்தையும் ஒரு பேஸ்டாக கலக்கவும்.

பேஸ்டை உங்கள் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்து, முடி வளர்ச்சியின் எதிர் திசையில் தடவவும்.

3-4 நிமிடங்கள் ஸ்க்ரப் செய்த பிறகு, பேஸ்டை உங்கள் முகத்தில் அப்படியே விடவும். உங்கள் தோல் இறுக்கமாக உணர்ந்தவுடன், அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.  



ALSO READ : இனி வாழைப்பழத் தோலை தூக்கி எறியாதீங்க.. பளபளப்பான சருமத்துக்கு இப்படி பயன்படுத்துங்க!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!