நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மெட்ரோ ரெயிலில்... புதிய கின்னஸ் சாதனை

டெல்லி மெட்ரோ ஊழியரான பிரபுல் சிங், 16 மணி நேரத்தில், 348 கி.மீ தொலைவு கொண்ட 254 ரெயில் நிலையங்களுக்கு வேகமாகப் பயணித்து கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார்.
தினமும் பல ஆயிரம் பேர் ரெயில் போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள். சிலர் வருடக்கணக்காக பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் வராத சிந்தனை டெல்லியை சேர்ந்த பிரபுல் சிங்கிற்கு வந்திருக்கிறது. அது என்ன தெரியுமா...? ரெயில் போக்குவரத்தில் புதிய கின்னஸ் சாதனை படைப்பது. ஆம்...! டெல்லி மெட்ரோ ஊழியரான பிரபுல் சிங், 16 மணி நேரத்தில், 348 கி.மீ தொலைவு கொண்ட 254 ரெயில் நிலையங்களுக்கு வேகமாகப் பயணித்து கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார். இது குறித்து பிரபுல்சிங், “பல ஆண்டுகளாகவே நான் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்கள் வழியே பயணித்துக் கொண்டிருக்கிறேன். எதார்த்தமாக, மெட்ரோ ரெயில் நிலையத்திலேயே வேலையும் கிடைத்தது. என் வாழ்க்கையோடு கலந்திருக்கும் மெட்ரோ ரெயில் மூலமாக ஏதாவது ஒரு சாதனை படைக்க திட்டமிட்டேன். அதுதான் இப்போது நிகழ்ந்திருக்கிறது. பழக்கப்பட்ட ரெயில் பாதை என்பதால், இந்த சாதனையைப் படைப்பது எளிதாக இருந்தது.

அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் படேல் சவுக் ரெயில் நிலையம் தான் எனக்குப் பிடிக்கும். ஏனெனில் இது டெல்லியைக் கொண்டாடும் ஒரு சிறிய அருங்காட்சியகத்தையும் இந்தியாவின் முதல் நவீனமயமாக்கப்பட்ட போக்குவரத்து வசதியையும் கொண்டுள்ளது” என்றார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!