நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குண்டை தான் வாங்கி ராணுவ வீரரின் உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட்போன்... முதல் முறை பதிவான அரிய சம்பவம்!

 ராணுவ வீரர் ஒருவரின் உயிரை ஸ்மார்ட்போன் காப்பாற்றிய சம்பவம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

ராணுவ வீரரை நோக்கி வந்த தோட்டா ஒன்று அவரது சட்டைப் பையில் வைத்திருந்த தொலைபேசியை துளைத்துள்ளது.

சட்டைப் பையில் ஸ்மார்ட்போன் இருந்ததால் அந்த குண்டு அதில் பட்டு அந்த வீரர் உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.


வைரலாகும் வீடியோவில் உக்ரைன் இராணுவ வீரர் தனது சக சிப்பாயிடம் தொலைபேசியைக் காட்டி, தொலைபேசியால் தனது உயிர் காப்பாற்றப்பட்டதாகக் கூறுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்மார்ட்போனில் ஓட்டை போடப்பட்டு அதில் தோட்டா சிக்கியிருப்பது வீடியோவில் தெளிவாக தெரிகின்றது.



ALSO READ : இவங்க தான் உலகிலேயே மிக உயரமான குடும்பம்.. கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பேமிலி!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!