நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பெண்களிடையே பிரபலமாகி வரும் லைட்-வெயிட் மேக்கப்

ஏராளமான மேக்கப் முறைகள் இருந்தாலும், கண்களை உறுத்தாமல் இயற்கையான அழகை சற்றே மெருகூட்டிக்காட்டும் ‘லைட்-வெயிட்’ மேக்கப் முறை தற்போது பெண்களிடையே பிரபலமாக இருக்கிறது.
பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். வெளியே செல்லும்போதும், விசேஷ நாட்களிலும் இயல்பான அழகை ஒப்பனை மூலம் மேலும் ‘பளிச்’ என்று மாற்றிக் கொள்வதில் பல பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

ஏராளமான மேக்கப் முறைகள் இருந்தாலும், கண்களை உறுத்தாமல் இயற்கையான அழகை சற்றே மெருகூட்டிக்காட்டும் ‘லைட்-வெயிட்’ மேக்கப் முறை தற்போது பெண்களிடையே பிரபலமாக இருக்கிறது. அதைப் பற்றி இங்கே பார்ப்போம். லைட்-வெயிட் மேக்கப்பை பகல், இரவு என எந்த நேரத்திலும் போட்டுக் கொள்ளலாம்.

பவுண்டேஷன்:

அதிக அடர்த்தி இல்லாத, மென்மையான பவுண்டேஷனைத் தேர்வு செய்ய வேண்டும். சருமத்தின் நிறத்துக்கு ஏற்ற பவுண்டேஷனைப் பயன்படுத்தும்போது, மேக்கப் இயற்கையானதாக இருக்கும்.

தரத்துக்கு முக்கியத்துவம்:

அழகு சாதனப் பொருட்கள் தரமற்றதாக இருந்தால் சருமத்தில் பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாக முகப்பொலிவு குறையும். எனவே, தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒவ்வாமை ஏற்படுத்தாத அழகு சாதனப் பொருட்களைத் தேர்வு செய்வது நல்லது.

பயன்படுத்தும் முறை:

பவுடர், கிரீம், லிக்விட் என பல வகைகளில் அழகு சாதனப் பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை நமது சருமத்துக்கு ஏற்ற விதத்தில் உபயோகப்
படுத்துவது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மாய்சுரைசர்:

மேக்கப் போடுவதற்கு முன்பு கைகளை நன்றாகத் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். ஈரமான துணியைக் கொண்டு, முகத்தை துடைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின்பு, மாய்சுரைசர் பூச வேண்டும். இது முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

முக்கியமான பகுதிகள்:

கண்களுக்குக் கீழிருக்கும் கருவளையம், சுருக்கங்கள், கருந்திட்டுக்கள் போன்ற அனைத்தையும் மறைக்கும் வகையில் மேக்கப் போட வேண்டும்.

கன்னம், கண்கள்:

கன்னத்திற்கு மேக்கப் போடும்போது, அதிக இறகுகள் கொண்ட பிரஷ்ஷை பயன்படுத்துவது நல்லது. இதில் குறைந்த அளவில் பவுடரைத் தொட்டு, கன்ன எலும்புகளில் மேல்வாக்கில் தடவ வேண்டும். இதன் மூலம் கன்னங்களை அழகுபடுத்தலாம்.

மேலும் எடுப்பாகக் காட்ட வேண்டுமானால், தங்கம் மற்றும் வெள்ளி நிற பவுடரை லேசாகத் தடவலாம். முகத்துக்கு அழகு சேர்ப்பவை கண்கள். அவற்றை அழகுபடுத்துவதன் மூலம் மேக்கப் முழுமை பெறும். ஐ ஷேடோ, ஐ லைனர், மஸ்காரா போன்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி கண்களின் அழகை அதிகரிக்கலாம்.

உதடுகள்:

வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும் உதடுகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதற்கு லிப்பாம் அல்லது கண்டிஷனர் பூச வேண்டும். பின்பு பிங்க், பிரவுன் போன்ற நிறங்கள் கொண்ட உதட்டுச்சாயங்களைப் பயன்படுத்தலாம்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!