நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பார்வையாளர்கள் முன்னிலையில் ராஜநாகத்தை முத்தமிட்டு கொஞ்சும் மனிதர்! வைரலாகும் வீடியோ........

 பார்வையாளர்கள் முன்னிலையில் ராஜநாகத்தின் தலையில் அவர் முத்தமிடுவது அனைவரையும் பயம் கலந்த ஆச்சரியத்தில் உறைய வைத்தது.


உலகில் உள்ள விஷப்பாம்புகளில் ஒன்றான ராஜநாகம், மனிதனை கடித்த 15 நிமிடங்களில் மனிதனை கொன்றுவிடும். ராஜநாகத்தின் விஷத்தின் ஒரு சிறிய அளவு கூட நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கும் என்பதால், ஒரு நபரை முடக்குவாதத்திற்கு அனுப்பும்.

பிரையன் பார்சிக், என்ற நபர் பாம்புகள் மற்றும் முதலைகளை பிடிப்பதில் கைதேர்ந்தவர். அவர் தனது ஸ்நேக்பைட்ஸ்டிவி என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.  அதில் அவர் ஒரு ராஜநாகத்தை முத்தமிடுகிறார்.

பாம்பு தன்னை கடிக்காதவாறு அதன் பின்பக்க தலையில் முத்தமிடுகிறார்.இந்தோனேஷியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பார்வையாளர்கள் முன்னிலையில் ராஜநாகத்தின் தலையில் அவர் முத்தமிடுவது அனைவரையும் பயம் கலந்த ஆச்சரியத்தில் உறைய வைத்தது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!