நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சரும அழகை மேம்படுத்தும் வைட்டமின் இ

சரும அழகை மேம்படுத்துவதற்கு வைட்டமின் இ அவசியமானதாக இருக்கிறது. அதனை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம்.
உடலின் சீரான இயக்கத்திற்கு வைட்டமின்களின் பங்களிப்பு முக்கியமானது. உடல் உள் உறுப்புகள் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின்கள் உறுதுணையாக இருக்கின்றன. சரும அழகை மேம்படுத்துவதற்கு வைட்டமின் இ அவசியமானதாக இருக்கிறது. வைட்டமின் இ மாத்திரைகளை பயன்படுத்தி சருமத்தை மெருகேற்றலாம். அதனை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம்.

* சூரிய வெப்பத்தாக்கத்தை பிரதிபலிக்கும் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்தை காப்பதற்கு வைட்டமின் இ உதவுகிறது. சரும சுருக்கத்திற்கும் நிவாரணம் அளிக்கிறது. இரண்டு வைட்டமின் இ மாத்திரைகளுடன் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சருமத்தில் தடவிக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

* பிரசவத்தின்போது வயிற்றில் உருவாகும் கோடுகளை வைட்டமின் இ மாத்திரையால் போக்கலாம். ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை எடுத்து லேசாக சூடுபடுத்தி அதனுடன் வைட்டமின் இ மாத்திரையை சேர்த்து குழப்பி தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்துவிட வேண்டும். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் தழும்புகள் மறைய தொடங்கும்.

* சிறிதளவு எலுமிச்சை சாறுடன் ஐந்து வைட்டமின் இ மாத்திரைகளை சேர்த்து குழைத்தும் தழும்புகளில் தடவி மசாஜ் செய்யலாம். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெ துப்பான நீரில் கழுவ வேண்டும்.

* வெது வெதுப்பான நீரில் 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு தேன் மற்றும் வைட்டமின் இ மாத்திரையை கலந்துகொள்ள வேண்டும். அந்த நீரில் கை, கால்களை 15 நிமிடம் முக்கி வைக்க வேண்டும். பின்னர் விரும்பிய மாய்ச்சரைசரை தடவிக்கொள்ளலாம். தினமும் அவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!