நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரே சமயத்தில் இரண்டு ஐபோன்களை சார்ஜ் செய்யும் வசதி! ஆப்பிளின் அதிரடி தயாரிப்பு

 ஆப்பிள் நிறுவனம் ஒரே சமயத்தில் இரண்டு ஐபோன்களை சார்ஜ் செய்யும் வசதியுடைய நவீன சார்ஜரை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



தற்போது வரை ஆப்பிள் நிறுவனம் 20 வாட் திறன் கொண்ட சார்ஜர்களை மட்டுமே வழங்கி வருகிறது. ஆனால் சீன நிறுவனங்கள் 80 வாட் வரை fast charging வசதி உடைய சார்ஜர்களை வழங்குகின்றன.

Smart watch, Smartphone என அனைத்திலும் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி வரும் ஆப்பிள் நிறுவனம், நவீன சார்ஜரை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சார்ஜர் 35 வாட் திறன் கொண்ட type c சார்ஜர் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சார்ஜரைக் கொண்டு ஒரே சமயத்தில் இரண்டு ஐபோன்களை சார்ஜ் செய்ய முடியும்.

அத்துடன் ஒரு ஐபோன், ஒரு ஸ்மார்ட் வாட்ச் என இரண்டையும் ஒரே நேரத்தில் இந்த சார்ஜர் மூலம் charge செய்யலாம் எனவும் இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 



ALSO READ : மெட்ரோ ரெயிலில்... புதிய கின்னஸ் சாதனை

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!