நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எலெக்ட்ரானிக் கழிவு... தங்கம்-வெள்ளியாக மாறுகிறது

 எலெக்ட்ரானிக்ஸ் கழிவிலிருந்து தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களைப் பிரித்தெடுக்கும் பணியில் இங்கிலாந்து அரசின் ராயல் மின்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இங்கிலாந்தில் ஆண்டுதோறும் 3 லட்சம் டன் எலெக்ட்ரானிக் கழிவுகள் குப்பையில் வீசப்படுகின்றன. அவ்வாறு வீசப்படும் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இந்தக் கழிவுகளில் இருந்து தங்கத்தை மீட்டு நாணயமாகவும், தங்கக் கட்டிகளாகவும் மாற்றும் பணியை ராயல் மின்ட் நிறுவனம் தொடங்கியிருக்கிறது. இதற்காக தெற்கு வேல்ஸ் பகுதியில் புதிய தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொழிற்சாலை அடுத்த ஆண்டு முதல் லேப்டாப் மற்றும் செல்போன்களின் சர்க்யூட் போர்டுகளில் இருந்து விலை மதிப்புள்ள உலோகங்களைப் பிரித்தெடுக்கும் பணியைத் தொடங்கும் என்று ராயல் மின்ட் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து ராயல் மின்ட் நிறுவனத்தின் சீன் மில்லர்டு கூறுகையில், “இங்கிலாந்தில் வாரந்தோறும் 90 டன் சர்க்யூட் போர்டு கழிவுகள் சேரும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவற்றில் இருந்து பிரித்தெடுக்கப்படும் தங்கத்தை நாணயங்கள், தங்கக்கட்டிகள் மற்றும் மற்ற தயாரிப்புகளுக்கு பயன்படுத்துவோம். தற்போது இங்கிலாந்தில் கழிவுகளாகச் சேரும் 99 சதவிகித சர்க்யூட் போர்டுகளை உயர் வெப்ப நிலையில் உருக்குவதற்காக கடல் கடந்து அனுப்பி வருகிறோம். எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகள் ஆண்டுதோறும் அதிகரித்தால், பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும்” என்றார்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!