நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இரவில் தூக்கம் வர இதனை செய்தால் போதும்....

 தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து காண்போம்.


தூக்கமின்மை என்பது தொடர்ந்தால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் வரக் கூடும். எனவே இந்த பிரச்சனையை சரி செய்வது மிகவும் அவசியம்.

  • முதலில் நம்முடைய சூழலுக்கு ஏற்ப குறிப்பிட்ட நேரத்தை தூங்குவதற்கு என்று தீர்மானிக்க வேண்டும்.
  • அந்த நேரத்தில் படுக்கைக்கு சென்றவுடன் கட்டாயம் விளக்கை அணைத்து விட வேண்டும்.
  • எப்போதும் உறங்க செல்வதற்கு ஒருமணி நேரம் முன்பே எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதே போல் உறங்க செல்வதற்கு ஒருமணி நேரம் முன்பாக மொபைல் போன், டிவி, லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை அணைத்து விட வேண்டும்.
  • சூரிய ஒளி உடலுக்கு மிகவும் நல்லது. ஆகையால் தினமும் காலை குறைந்தபட்சம் 10 மணிக்குள்ளாக வெயிலில் நிற்க வேண்டும். இதன் மூலம் உடலில் மெலடோனின் ஹார்மோன் சுரப்பது சீராகும். எனவே இந்த ஹார்மோன் நன்றாக சுரந்து தூக்கத்தை வர செய்யும்.  




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!