நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடலில் உள்ள சில நோய்களை எளிதில் நீக்க வேண்டுமா? இதோ பயனுள்ள 10 பாட்டி வைத்தியம்....

 உடலில் உள்ள நோய்களை நீக்க ஒரு சில எளிய பாட்டி வைத்தியங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்..



  • சேம்பு கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து அடிக்கடி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும். குறிப்பு : எந்த நோய்க்கும் அறிகுறிகள் தென்பட்டதும் உடனே மருத்துவரை அணுகுவது தான் சிறந்தது.

  • கசகசாவை தண்ணீரில் ஊர வைத்து அதை நன்றாக அரைத்து வாரத்திற்கு இரண்டு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி கருமையாகும்.

  • புதினா சாறு, துளசி சாறு இரண்டையும் சரிபாதியாக கலந்து தினமும் முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊரவைத்து பின்பு கழுகினால், முகம் பொலிவு பெறும்.

  • வெந்தையத்தை நெயில் வருத்து மோரில் கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து குடித்து வந்தால் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் குணமடையும்.

  • சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலைக்காய் இவற்றை பொடியாக்கி தேனுடன் கலந்து காலை மற்றும் மாலை சாப்பிட தொண்டை கரகரப்பு முற்றிலுமாக விடுபடும்.   

  • சிறிய வெங்காயத்தின் காய்ந்தத் தோடுகளைச் சுத்தமாகச் சேகரித்து தலையணையாக்கி, தூங்கும்போது பயன்படுத்தினால் சைனஸ் தீரும்.

  • ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

  • சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

  • வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.   



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!