நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கோமாவில் கடவுளை பார்த்த அமெரிக்க பாட்டி..! கடவுள் என்ன சொன்னார் தெரியுமா?

 தான் கடவுளை நேருக்கு நேர் சந்தித்ததாகவும் தனது குடும்பத்தினர் அனுபவித்த போராட்டங்கள் மற்றும் துயரங்களைப் பற்றி கடவுளிடம் பேசியதாகவும் கூறுகிறார்.


'கடவுளை நேரில் பார்த்தவர் யாருண்டு இந்த உலகில்?' என்ற கேள்விக்கு நான் பார்த்திருக்கிறேன் என்று அவ்வப்போது சிலர் வருவர். அப்படி ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது. யார் அவர்?கடவுளை எப்படி பார்த்தார் தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் கோமா நிலையில் இருந்தபோது கடவுளைக் கண்டதாகக் கூறியுள்ளார். அமெரிக்காவின் கென்டக்கியைச் சேர்ந்த 52 வயதான பென்னி விட்ப்ராட் என்ற செவிலியர், கோமா நிலையில் இருந்தபோது அவரது ஆன்மா தனது உடலை விட்டு வெளியேறியதாகக் கூறுகிறார்.

அவரது உடல் நிலை மோசமாக இருந்ததால் பென்னியின் மகன் அவரை  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். செல்வதற்கு முன்பு, சுவாசம் மற்றும் சாப்பிடுவதில் சிரமம் இருந்துள்ளது. அந்த சமயத்தில் தனது ஆன்மா தனது உடலை விட்டு வெளியேறிச் சென்று ஒரு பிரகாசமான ஒளியைப் பார்த்த பிறகு,  தனது ஆவி திடீரென்று மீண்டும் தனது உடலில் சேர்ந்ததாக அந்த பாட்டி கூறியுள்ளார்.

இது நடந்த போது தான் கடவுளை நேருக்கு நேர் சந்தித்ததாகவும் தனது குடும்பத்தினர் அனுபவித்த போராட்டங்கள் மற்றும் துயரங்களைப் பற்றி கடவுளிடம் பேசியதாகவும் கூறுகிறார். இந்த வாழ்க்கையில் அவர் அனுபவித்த துன்பங்களுக்கு வெகுமதியாக மறுவாழ்வில் அமைதியைக் காண இருப்பதாக  விட்ப்ரோடிடம்  கடவுள் பதில் சொன்னாராம். ''நான் தனியாக இல்லை. என்னுடன் யாரோ இருக்கிறார்கள் என்பதில் நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன், " என்று பாட்டி கூறியுள்ளார்.

நம்பிக்கை அற்றவராக இருந்த விட்ப்ராட் தனது கோமாவிலிருந்து எழுந்த பிறகு உடனடியாக குணமடைந்ததாகக் கூறப்படுகிறது. கோமாவில் அவர் கடவுளைக் கண்டதாக சொல்வது அவரது கற்பனை, பிரம்மை எதுவாக இருந்தாலும் அது அவரது வாழ்க்கையை இட்டுச்செல்லும் நம்பிக்கையை அவருக்கு அளித்துள்ளது. கோமாவில் இருந்து மீண்ட அவர் வாழ்க்கையை பற்றிய புதிய கண்ணோட்டத்துடன் மகிழ்ச்சியாக நாட்களை கடத்தி வருகிறார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!