நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சூடான சாதத்திற்கு சூப்பரான செட்டிநாடு மட்டன் உப்பு கறி!

 பொதுவாக தமது வீடுகளில் ஞாயிறு தினங்களில் மதிய உணவிற்கு சாதத்துடன் என்ன சேர்க்கலாம் என சிலர் குழப்பங்கள் இருப்போம்.


இது போன்று குழப்பங்களிலுள்ள போது சூடான சாதத்துடன் சூப்பரான செட்டிநாடு மட்டன் உப்பு கறி சேர்த்துக் கொள்ளலாம். அந்த வகையில் மட்டன் உப்பு கறி எவ்வாறு செய்யலாம் குறித்து தெரிந்துக் கொள்வோம்.

தேவையான பொருட்கள்:


  • எலும்பில்லாத மட்டன் - 300 கிராம்
  • சின்ன வெங்காயம் - 20
  • பூண்டு - 20 பற்கள்
  • இஞ்சி - 1 இன்ச் குண்டு
  • வரமிளகாய் - 10 தக்காளி - 1
  • எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது
  • உப்பு - தேவையான அளவு
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

தயாரிப்பு முறை

முதலில் கறிக்கு தேவையான காய்கறிகளான வெங்காயம், தக்காளி, இஞ்சி போன்றவற்றை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். இதனுடன் பூண்டையும் தட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர், குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம், பாதி மிளகாய் போன்றவற்றை ஒன்றாக சேர்த்து சிறிது நேரம் வதங்க விட வேண்டும்.

பொன்னிறமாக வதங்கிய பிறகு சுத்தபடுத்திய மட்டன் துண்டுகளை அதனுடன் சேர்த்து, அதோடு, தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு தூவி பிரட்டி, மூடி வைக்க வேண்டும் மூடி 4-5 விசில் விட்டு மட்டனின் நிறம் சற்று மாற தொடங்கும் போது, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மீதமுள்ள வரமிளகாயை இரண்டாக உடைத்து சேர்த்து லேசாக வதக்கிய பின் எஞ்சிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொள்ள வேண்டும்.

பிறகு குக்கரை திறந்து, அதனை வாணலியில் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை பிரட்டி இறக்கினால், சுவையான செட்டிநாடு உப்பு கறி தயார்...   



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!