நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சப்பாத்திக்கு சுவையான மூக்கடலை குருமா செய்ய தெரியுமா..? நொடியில் செய்ய ரெசிபி...

 இந்த ரெசிபியை பின்பற்றி சமையுங்கள். வீட்டில் இருப்போரை ருசியால் அசத்துங்கள்.


இரவு உணவிற்கு சைட் டிஷ் என்ன சமைப்பது என யோசனையாக இருந்தால் உடனே மூக்கடலையை ஊற வையுங்கள். இந்த ரெசிபியை பின்பற்றி சமையுங்கள். வீட்டில் இருப்போரை ருசியால் அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்

வெள்ளை மூக்கடலை - 1/2 கப்

வெங்காயம் - 1

தனியா பொடி - 1/2 tsp

கரம் மசாலா - 1/2 tsp

சீரகப் பொடி - 1/2 tsp

மஞ்சள் பொடி - 1/2 tsp

கடுகு - 1/2 tsp

கருவேப்பிலை -சிறிது

எண்ணெய் - 2 tsp



செய்முறை

இரவு முழுவதும் மூக்கடலையை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

ஊற வைத்த மூக்கடலையை தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் போட்டு 1 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். குழையக் கூடாது

கடாயை தீயில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொறிக்க விடவும்.

அடுத்ததாக வெங்காயம் சேர்த்து அதோடு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் அதோடு தனியா பொடி, சீரகப் பொடி, மஞ்சள் சேர்த்து வதக்கவும்.

பொடிகளின் பச்சை வாசனை போனதும், வேக வைத்த மூக்கடலையைச் சேர்க்கவும். குக்கரில் வேக வைத்த நீர் இருந்தாலும் அதையும் சேர்த்து ஊற்ற வேண்டும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

சுவையான மூக்கடலை குருமா ரெடி. இது சப்பாத்தி , இட்லி, தோசைக்கு சுவையாக இருக்கும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!