நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சுட்ட கத்தரிக்காய் குழம்பு...ஊரே மனக்கும் அளவு இனி செய்து ருசியுங்கள்...

 கத்தரிக்காய் குழம்பில் சுட சுட சாதம் பிசைந்து சாப்பிடுவதே தனி சுவைதான்.

அந்த வகையில் கத்தரிக்காயை சுட்டு குழம்பு வைத்து அதை சாப்பிடுவதில் இருக்கும் சுவை வேறெதிலும் இருக்க முடியாது.

இந்த சுவையை நீங்களும் அனுபவிக்க வேண்டுமெனில் இந்த ரெசிபியை கவனியுங்கள். 

தேவையான பொருட்கள்

  1. கத்தரிக்காய் - 6
  2. காய்ந்த மிளகாய் - 10
  3. நல்லெண்ணெய் - 3 தேகரண்டி
  4. கடுகு - 1 தேகரண்டி
  5. உளுத்தம் பருப்பு - 1 தேகரண்டி
  6. கறிவேப்பிலை - சிறிதளவு
  7. புளி - எலுமிச்சை அளவு
  8. வெல்லம் - சிறு துண்டு
  9. உப்பு - தேவையான அளவு  

செய்முறை

கத்தரிக்காயை முழுசாக சுட வேண்டும் என்பதால் சொத்தை , பூச்சி இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 

பின் அதில் குச்சி சொறுகி ஸ்டவ் நெருப்பில் சுற்றிலும் காட்டி சுட வேண்டும்.

அதன் தோல் கருப்பாகி உதிர்ந்து விழும் வரை சுட வேண்டும்.


சுட்டதும் காய்ந்த மிளகாய்களையும் சுட்டு எடுக்க வேண்டும், பின் கத்தரிக்காய் மற்றும் காய்ந்த மிளகாய்களை மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும்.

இப்போது கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு , உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். இப்போது அரைத்த கத்தரிக்காய் விழுது சேர்த்து புளி கரைத்து ஊற்ற வேண்டும்.

 உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதிக்க வேண்டும். இறக்கும் முன் வெல்லம் சேர்த்து இறக்கிவிடுங்கள். அவ்வளவுதான் சுட்ட கத்தரிக்காய் குழம்பு தயார்.


ALSO READ : தினமும் ஒரு ஸ்பூன் நெய்யை இப்படி எடுத்துக்கோங்க! பல அதிசயங்கள் நிகழுமாம்...

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!