நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பாலில் 1 ஸ்பூன் இதை மட்டும் கலந்து குடிங்க! முதுகு வலி ஓடிடும்....

 பொதுவாக பெண்களுக்கு 40 வயதைத் தாண்டும் போடு எலும்புகளின் செயற்திறன் குறைவடையும், இது போன்று ஏற்படும் சிலர் மருத்துவரை நாடுவார்கள் அல்லது நாட்டு வைத்தியம் செய்து சரிச் செய்துக் கொள்வார்கள்.

இவர்கள் மருத்துவரை நாடும் போது இதுக்கான நிரந்தர தீர்வைப் பெற முடியாது. ஏனெனின் சில ஹார்மொன்ஸ் மாற்றங்களினால் இது நடைப் பெறுகிறது.

அந்த வகையில் இது போன்று பிரச்சினை உள்ளவர்களுக்கு சூப்பரான பானம் செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம். இந்த பானத்தை தொடர்ந்து குடித்தால் எலும்பு தொடர்பான பிரச்சினைகள் குணமடையும். 

தேவையான பொருட்கள்

 முளைகட்டிய ராகி மாவு – 1 கப்

 கருப்பு எள்ளு – 1/4 கப் 

 பாதாம் பருப்பு – 15 

சோம்பு – 2 ஸ்பூன் 

தயாரிப்பு முறை 

அடுப்பில் ஒரு கடாயை அதனை இளம் சூட்டில் வைத்து முளைகட்டிய ராகி மாவை இதன் பச்சை வாடை நீங்கும் அளவிற்கு நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். 

பின்னர் அதே கடாயில் கருப்பு எள்ளு போட்டு படபடவென பொறியும் அளவுக்கு வறுத்து எடுக்க வேண்டும். 

இதனைதொடர்ந்து வருத்த இந்த மாவை ஒரு பவுலில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள். இவையனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் வறுத்த கருப்பு எள்ளு, பாதாம் பருப்பு, சோம்பு, இந்த மூன்று பொருட்களையும் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். 

இந்த கலவை ஒரு அகலமான போத்தலில் போட்டு காற்று உட்புகாதவாறு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். 

இதனை தொடர்ந்து தினமும் காலையில் ஒரு டம்ளர் பாலில் 1 ஸ்பூன் சேர்த்து பருக வேண்டும். இவ்வாறு செய்வதால் எலும் தொடர்பான பிரச்சினை ஏற்படுவது குறைவாக இருக்கும். 

குறிப்பு - நாம் வியாபார நிலையங்களில் வாங்கும் பால்மாக்களை விட அதீத சத்துக்கள் நிறைந்தது. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பருகலாம். (ஆண், பெண்)   



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!