முடி கருப்பாக மாற்ற வேண்டுமா? இந்த ஒரு இலை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்...
- Get link
- X
- Other Apps
இன்றைய காலக்கட்டத்தில், சிறு வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் 25 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றார்கள்.
முடியை கருமையாக்க விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை, இயற்கையான முறையில் வெள்ளை முடியை மீண்டும் கருமையாக்கலாம்.
அதற்கு கறிவேப்பிலை உதவுகின்றது. இதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
தேவையானவை
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 10 முதல் 12
செய்வது எப்படி
முதலில் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளவும். இப்போது அதை அடுப்பில் வைத்து அதை சூடாக்கவும்.
இதற்குப் பிறகு, கடாயில் 10 முதல் 12 கறிவேப்பிலையைப் போட்டு 3-4 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இப்போது அடுப்பை அணைத்து, சுமார் 20 நிமிடங்கள் குளிர்விக்க விடவும்.
தற்போது ஹேர் மாஸ்க் தயார். இரண்டு கைகளிலும் ஹேர் மாஸ்க்கை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது முடியின் வேர்களில் நன்றாக மசாஜ் செய்யவும்.
இதற்குப் பிறகு, நீங்கள் முடி முழுவதும் ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். இப்போது சுமார் 1 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்தப் பின் சுத்தமான தண்ணீரில் கழுவவும்.
தொடர்ந்து பயன்படுத்தினால், முடி மென்மையாகவும், பட்டுப் போலவும் தோற்றமளிக்கும். இதனுடன் முடிக்கு நல்ல ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
ALSO READ : உடலில் உள்ள சில நோய்களை எளிதில் நீக்க வேண்டுமா? இதோ பயனுள்ள 10 பாட்டி வைத்தியம்....
- Get link
- X
- Other Apps


Comments
Post a Comment