நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முடி கருப்பாக மாற்ற வேண்டுமா? இந்த ஒரு இலை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்...

 இன்றைய காலக்கட்டத்தில், சிறு வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் 25 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றார்கள்.

முடியை கருமையாக்க விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை, இயற்கையான முறையில் வெள்ளை முடியை மீண்டும் கருமையாக்கலாம்.

அதற்கு கறிவேப்பிலை உதவுகின்றது. இதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கே பார்ப்போம்.  


தேவையானவை


 தேங்காய் எண்ணெய் -  2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - 10 முதல் 12


செய்வது எப்படி


முதலில் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளவும். இப்போது அதை அடுப்பில் வைத்து அதை சூடாக்கவும்.

இதற்குப் பிறகு, கடாயில் 10 முதல் 12 கறிவேப்பிலையைப் போட்டு 3-4 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

இப்போது அடுப்பை அணைத்து, சுமார் 20 நிமிடங்கள் குளிர்விக்க விடவும்.

தற்போது ஹேர் மாஸ்க் தயார். இரண்டு கைகளிலும் ஹேர் மாஸ்க்கை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது முடியின் வேர்களில் நன்றாக மசாஜ் செய்யவும்.

இதற்குப் பிறகு, நீங்கள் முடி முழுவதும் ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். இப்போது சுமார் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.  ஊற வைத்தப் பின் சுத்தமான தண்ணீரில் கழுவவும்.

தொடர்ந்து பயன்படுத்தினால், முடி மென்மையாகவும், பட்டுப் போலவும் தோற்றமளிக்கும். இதனுடன் முடிக்கு நல்ல ஊட்டச்சத்தும் கிடைக்கும்.



ALSO READ : உடலில் உள்ள சில நோய்களை எளிதில் நீக்க வேண்டுமா? இதோ பயனுள்ள 10 பாட்டி வைத்தியம்....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!