நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தோசை, சப்பாத்திக்கு சூப்பரான காம்பினேஷன் என்ன தெரியுமா? இது உங்களுக்கான டிப்ஸ்....

 பொதுவாக சிக்கன் என்றாலே அனைவராலும் விரும்பி உண்ணும் உணவாகும். இதனை பயன்படுத்தி நிறைய வகையான உணவுகளை செய்யலாம்.

அந்த வகையில் தோசை, சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு தொட்டுக்கொள்ள அருமையான மங்களூர் ஸ்பெஷல் சிக்கன் நெய் ரோஸ்ட் எவ்வாறு செய்வது குறித்து தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சர்க்கரை - 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

சீரகப் பொடி - 2 டீஸ்பூன்

மல்லித் தூள் - 2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

வரமிளகாய் - 2

கெட்டியான புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்

அரைத்த தக்காளி - 1 கப்

நெய் - 7 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்

கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிது


தயாரிப்பு முறை

முதலில் சிக்கன் உட்பட அனைத்தையும் நன்றாக சுத்தம் கொள்வது அவசியமாகும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் நன்றாக சூடாகிய பிறகு அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வரமிளகாய், சீரகப் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளுங்கள்.

தாளிப்புடன் தக்காளி பேஸ்ட், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து, நெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

தாளிப்புக்கு பின் சிக்கன் துண்டுகள், உப்பு, கரம்மசாலா மற்றும் மிளகுத்தூள் அதனுடன் சேர்த்து நன்கு 5-6 நிமிடம் கிளறி விடுங்கள். கிளரிய பின்னர் 1/2 கப் கொத்தமல்லியைத் தூவி, சர்க்கரை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து குறைவான தீயில் 10 நிமிடம் வேக விட வேண்டும். அதனுடன் புளி பேஸ்ட் சேர்த்து, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

தற்போது ஆவலுடன் எதிர்பார்த்த மங்களூர் ஸ்பெஷல் சிக்கன் நெய் ரோஸ்ட் தயார்!   


ALSO READ : சூடான தந்தூரி சிக்கன் பிரியாணி! மிக இலகுவான செய்முறையுடன்....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!