நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வாழ்நாள் முழுவதும் வயிற்று பிரச்சினை வராமல் இருக்கனுமா? பழைய சோறு செய்யும் அதிசயம்....

 பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல் நலத்திற்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டு வந்த பழக்கம், நம் பாரம்பரியத்துக்கு உண்டு.

ஆனால் பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு களால் பழைய சோற்றின் மகத்துவம் இளைய தலைமுறையினருக்கு தெரியாமல் இருந்தது.

ஆனால் சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி, இளைய தலைமுறையினரும் பழைய சோறு உணவை விரும்ப தொடங்கியிருக்கிறார்கள்.


பழைய சோற்றின் மகத்துவம்

பெருங்குடல் அழற்சி, குடற்புண், வயிற்றுப் பொருமல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு பழைய சோறு தீர்வாக இருக்கின்றது.

பழைய சோற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது.

சோற்றை தண்ணீரில் ஊற வைக்கும்போது அது நொதிக்கையில் காற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அவை உள் இழுத்துக் கொள்கின்றன.

முந்தைய நாள் இரவு ஊற வைத்த பழைய சோற்றை தினசரி தொடர்ந்து சாப்பிட்டால் குடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாது. 


ALSO READ : சத்து நிறைந்த நட்ஸ் பாயாசம்.....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!