நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மணக்க மணக்க தேங்காய் லட்டு செய்வது எப்படி தெரியுமா?

 தேங்காய் லட்டு செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம். 



தேவையான பொருட்கள்


2 கப் துருவிய தேங்காய்

பால் - 1/2 லிட்டர்

ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்


செய்முறை

அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். 

தேங்காய் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் பால் சேர்த்து நன்கு கிளறவும். 

 20 நிமிடங்கள் கொதிக்கவைத்து பின்னர் சர்க்கரை சேர்த்து வாணலியை ஒரு மூடியால் மூடி வைக்கவும். 

பின்னர் ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைத்து ஆற விடவும். 


இப்போது உங்கள் கைகளில் சிறிது நெய் தடவி, கலவையிலிருந்து சிறிய உருண்டைகளை எடுத்து உருட்டவும்.

ஐஸ்கிரீம் ஸ்கூப்பரைப் பயன்படுத்தி சம அளவிலான லட்டுகளை உருவாக்கலாம். 

அனைத்து கலவையையும் பயன்படுத்தி இதுபோன்ற லட்டுகளை உருவாக்கவும். 

 லட்டுகளுக்கு கூடுதல் அமைப்பை சேர்க்க அவற்றை எடுத்து தேங்காய் துருவலில் லேசாக உருட்டலாம். இனி ருசியுங்கள்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!