நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இப்படி மாவு அரைத்தால் தோசை, இட்லி, ஆப்பம் மூன்றையும் பஞ்சு போல் சுடலாம்...!

 இட்லி , தோசை , ஆப்பம் என்பது நம் இல்லங்களில் தவிர்க்க முடியாத காலை உணவு.

இந்த உணவுகளுக்கு தனியாக மாவு அரைக்க வேண்டாம். சிம்பிள் ட்ரிக்ஸாக மாவை இப்படி அரைத்துப் பாருங்கள்.

இட்லி சுடுவதில் நீங்கள்தான் கில்லி...!  


தேவையான பொருட்கள்


  1. இட்லி அரிசி - 5 கப்
  2. உளுந்து - 1 கப்
  3. வெள்ளை அவல் - கால் கப்
  4. வெந்தயம் - 1 ஸ்பூன்
  5. உப்பு - 3 ஸ்பூன்
செய்முறை

அரிசி , உளுந்து , அவல் மூன்றையும் ஒரே கப்பில் அளவு எடுக்க வேண்டும்.

அரிசியை தனி பாத்திரத்திலும், அவல், உளுந்து வெந்தயம் மூன்றையும் ஒரு பாத்திரத்திலும் ஊற வைக்க வேண்டும்.

நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் ஜவ்வரிசியும் கலந்துகொள்ளலாம். முதலில் ஊற வைத்த உளுந்துக் கலவையை அரைக்கவும். உளுந்து கெட்டியாக பஞ்சு போல் உப்பி வரும்.

அவ்வாறு வந்தால் அரைத்துவிட்டதென அர்த்தம். அதை தனியாக பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்ததாக அரிசியை கொட்டி அரைக்கவும், அரிசி முற்றிலும் நைஸ் பதத்திற்கு அரைக்கக் கூடாது. சற்று மொறமொறப்பாக அரைக்க வேண்டும்.

அரைக்கும் போதே அதில் மூன்று ஸ்பூன் உப்பு சேர்க்கவும். அதோடு அரைத்த உளுந்தையும் கொட்டி கலந்து அரைத்தால் மிக்ஸிங் செய்யும் வேலை மிச்சமாகும்.


தோசை, இட்லி, ஆப்பம் செய்து ருசியுங்கள்

தற்போது அரைத்த மாவை தனி பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். எட்டு மணி நேரம் வெளியே வைத்தால் மாவு புளித்து உப்பி வரும். பின் அதை இட்லியாகவும், தோசை , ஆப்பம் என விருப்பம் போல் சுட்டு சாப்பிடலாம்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!