நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வீட்டிலேயே மொறு மொறுன்னு மிக்சர் தயார் செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து அசத்துங்கள்...

 ஒரு பாக்கெட் சேமியாவை வைத்து மொறு மொறுன்னு மிக்சர் செய்து அசத்தலாம்.


அவை எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்


  1. சேமியா -1 கப் அளவு
  2. உப்பு - 1/2 ஸ்பூன்
  3. எண்ணெய் - 1 ஸ்பூன்
  4. அரிசி மாவு – 1/4 கப்
  5. கான்பிளவர் மாவு – 1/4 கப்
  6. கோதுமை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
  8.  பூண்டு பல் – 10
  9. கடலைப்பருப்பு – 2
  10. டேபிள் ஸ்பூன்
  11. வேர்கடலை – 3 டேபிள்ஸ்பூன்
  12. முந்திரி பருப்பு – 10
  13. கருவேப்பிலை – 2 கொத்து
செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 5 கப் அளவு தண்ணீரை ஊற்றி, உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள்.

பாயாசம் செய்யக்கூடிய தடிமனான சேமியாவை 1 கப் அளவு எடுத்து 90 சதவீகிதம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

சேமியா வெந்தவுடன் அதை அப்படியே ஒரு சல்லடையில் ஊற்றி, வடிகட்டி விடுங்கள். சேமியா குழையாது உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.

பிறகு, ஒரு அகலமான பவுலில், அரிசி மாவு, கான் பிளவர் மாவு, கோதுமை மாவு, மிளகாய்த்தூள் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.


இதில், வேகவைத்த ஆற வைத்திருக்கும் சேமியாவை தண்ணீர் இல்லாமல் கொட்டி உங்கள் கையை கொண்டு உதிரி உதிரியாக பிசைந்து விட வேண்டும்.

சேமியாவில் இந்த மாவு ஒட்டி சேமியா உதிரி உதிரியாக நமக்கு கிடைத்திருக்கும்.  

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய், இடித்த பூண்டு பல், கடலைப்பருப்பு, வேர்கடலை, முந்திரி பருப்பு, பொட்டுக்கடலை, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பொருட்கள் எல்லாம் வறுபட்டு வந்த உடன் இதில் மிளகாய் தூள், உப்பு, பெருங்காய தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.  

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய், இடித்த பூண்டு பல், கடலைப்பருப்பு, வேர்கடலை, முந்திரி பருப்பு, பொட்டுக்கடலை, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பொருட்கள் எல்லாம் வறுபட்டு வந்த உடன் இதில் மிளகாய் தூள், உப்பு, பெருங்காய தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.  



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!