நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தொப்பை குறையவில்லையா? இந்த 3 முக்கிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.......

  தற்போதைய காலகட்ட மக்கள் தொப்பை கொழுப்பால் மிகவும் வருத்தப்படுகிறார்கள்.


  • தொப்பை கொழுப்பை குறைப்பது எப்படி?
  • இந்த 3 முக்கியமான குறிப்புகளைப் பின்பற்றவும்
  • விளைவு சில வாரங்களில் தெரியும்.

இந்தியாவில் எடை அதிகரிப்பு காரணமாக பலர் கவலைப்படுகிறார்கள், கொரோனா லாக்டவுன் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வதால் இந்த பிரச்சனை இன்னும் அதிகரித்துள்ளது. உங்களின் வாழ்க்கை முறையிலும், உணவுப் பழக்க வழக்கங்களிலும் மாற்றங்களைச் செய்வதன் மூலம் இந்தப் பிரச்சனையில் இருந்து தீர்வு காணலாம்.

தொப்பையை குறைக்க குறிப்புகள்

1. ஓமத்தை தண்ணீரில் கலந்து குடிக்கவும்

வயிற்று கொழுப்பைக் குறைக்க ஓமத் தண்ணீர் சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இது எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. ஒரு ஸ்பூன் ஓமத் விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் வைக்கவும். இந்த நீரை காலையில் எழுந்தவுடன் சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் உடலுக்கு பலன் கிடைக்கும்.


2. அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்

சிலருக்கு பசியை விட அதிகமாக சாப்பிடும் கெட்ட பழக்கம் இருக்கும். தேவையான அளவு மட்டும் சாப்பிடுவதே சரியான வழி. ஒரே நேரத்தில் அதிக உணவு உட்கொள்வதால் தொப்பை கொழுப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது. 2 முதல் 3 மணி நேர இடைவெளியில் சாப்பிட்டால், செரிமானமும் சரியாகும். இதனுடன் தொடர்ந்து தண்ணீர் அருந்தவும்.


3. இனிப்பான பொருட்களை குறைவாக உண்ணுங்கள்

நீங்கள் இனிப்புகளை அதிகம் விரும்புகிறீர்கள் என்றால், அது உடல் பருமன் மட்டுமல்ல, நீரிழிவு மற்றும் மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களும் வருவதற்க்கு காரணமாகிவிடும். தினசரி உணவில் இருந்து இனிப்பு உணவின் அளவைக் குறைத்தால், படிப்படியாக தொப்பை குறைய ஆரம்பித்து, அதன் விளைவு சில வாரங்களில் தெரியும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!