Posts

Showing posts from October, 2022

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஹோட்டல் சுவையில் அட்டகாசமான வடகறி செய்வது எப்படி?

Image
 என்னதான் இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் செய்து சாப்பிட்டாலும் வடகறி என்றால் அலாதி சுவை தான். நறுமண பொருட்களுடன் வடகறியின் மணமும், சுவையும் பலரையும் சுண்டி இழுக்கும், பெரிய பெரிய ஹொட்டல்களை விட தெருவோர தள்ளுவண்டி கடையில் காரசாரமாக இருக்கும். அந்த ஸ்டைலில் வீட்டிலேயே வடகறி செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் வடகறிக்கு கடலைப்பருப்பு - 1 கப் வரமிளகாய்- 3 அல்லது 4 சோம்பு- சிறிதளவு உப்பு - தேவையான அளவு தாளிக்க நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன் லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை - சிறிதளவு வெங்காயம் - 1 இஞ்சி, பூண்டு பேஸ்ட்- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன் தனியா தூள்- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்- 1 டீஸ்பூன் தேங்காய்- அரை கப் முந்திரி- 2 செய்முறை முதலில் கடலை பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து, இதனுடன் வரமிளகாய், சோம்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும், இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்து எடுத்துக் கொள்ளலாம் அல்லது சிறிய சிறிய வடைகளை தட்டி எடுத்து பொரித்தும் எடுத்துக் கொள்ளலாம். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவு

எச்சில் ஊறும் சுவையுடன் கருவாட்டு பிரியாணி! வீட்டிலேயே செய்வது எப்படி?

Image
  பிரியாணி இன்று பலருக்கு மிகவும் பிடித்த உணவாகும்.  அசைவ மற்றும் வைவ விரும்பிகள் ருசிக்க கூடிய வகையில் பிரியாணியில் பல வகை உள்ளது. இன்று நாம் சற்று வித்தியாசமாக கருவாட்டில் பிரியாணி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத  உணவுகளில் கருவாடும் ஒன்று. கருவாட்டு பிரியாணியை அச்சமின்றி அனைவரும் ருசிக்கலாம். தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - அரை கிலோ  கருவாடு - அரை கிலோ  வெங்காயம் - அரை கிலோ  பழுத்த தக்காளி - அரை கிலோ  பழுத்த சிவந்த பச்சை மிளகாய் - ஆறு  சில்லி - இரண்டு தேக்கரண்டி  தயிர் - ஒரு கோப்பை  கொத்துமல்லித்தழை - ஒரு கொத்து  இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி  புதினா - ஒரு கொத்து  பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு  பிரியாணி இலை - இரண்டு  உப்பு தூள் - தேவையான அளவு  எண்ணெய் - 200 மில்லி  நெய் - 50 மில்லி  எலுமிச்சை - அரை பழம்  செய்முறை அரிசியை  முதலில் நீரில் ஊற வைத்து கொள்ளவும். பிறகு கருவாட்டை நன்றாக கழுவி பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும். பிரியாணி செய்ய தக்காளி, வெங்காயத்தை வெட்டிக்கொள்ளவும். பின்னர் பாத்திரத்தை அடுப்பில் கருவாடு பொரித்த எண்ணெ

தினமும் உலர் திராட்சை சாப்பிடலாமா? பயன்கள் என்னென்ன?

Image
 Don't judge a book by its cover என்ற பழமொழி ஆங்கிலத்தில் உண்டு, இதற்கு ஏற்ற ஓர் உதாரணம் தான் உலர் திராட்சை அல்லது ரைசின் (Raisin). உலகின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் உலர் திராட்சையில் நார்ச்சத்து, இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இன்னும் பல உடலுக்கு சத்துக்களை அள்ளிக்கொடுக்ககூடிய விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. ஒருநாளில் எந்த வேளையிலும் இதனை நீங்கள் உட்கொள்ளும்போது அபரிமிதமான பலன்களை பெற முடியும். 165கிராம் உலர் திராட்சையில்,  கலோரிகள்- 508 புரோட்டீன்- 3.0 கிராம் கொழுப்பு- 05.கிராம் கார்போஹைட்ரேட்- 123.1கிராம் நார்ச்சத்து- 11.2கிராம் கால்சியம்- 40.60 கிராம் இரும்புசத்து- 3.76மில்லிகிராம் மெக்னீசியம்- 43.50மில்லிகிராம் பொட்டாசியம்- 1196.25மில்லிகிராம் விட்டமின் சி-7.83மில்லிகிராம் காணப்படுகிறது. பயன்கள் என்னென்ன? செரிமான மண்டலம் செரிமான மண்டலத்தை சரிசெய்வதில் முக்கிய பங்கு உலர்திராட்சைக்கு உண்டு, முதல்நாள் இரவே உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் சாப்பிடும் போது மலச்சிக்கல் போன்ற எந்தவொரு தொந்தரவுகளும் இருக்காது, செரிமானத்தை சர

கொழுப்பை கரைக்கும் வாழைப்பூ துவையல் - 5 நிமிடத்தில் செய்து அசத்தலாம்....

Image
  எடையை குறைக்கும் உணவுகளில் வாழைப்பூ முதலிடத்தில் உள்ளது. வாழைப்பூவில் பல ஆரோக்கியமான உணவுகளை செய்து ருசிக்கலாம். இன்று நாம் வாழைப்பூ துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வாழைப்பூ துவையல் செய்ய தேவையான பொருட்கள் வாழைப்பூ - 1   கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்   புளி - எலுமிச்சை அளவு   காய்ந்த மிளகாய் - 4  துருவிய தேங்காய் - கால் கப்  எண்ணெய் - 3 டீஸ்பூன்   கடுகு - 1 டீஸ்பூன்   கறிவேப்பிலை - சிறிதளவு  உப்பு - தேவையான அளவு   பெருங்காயத்தூள் - சிறிதளவு செய்முறை வாழைப்பூவின் தேவையற்ற காம்புகளை நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.   சமைப்பதற்கு முன் அதை மோரில் ஊற வையுங்கள். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயத்தூள், புளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் அதனை ஆற வையுங்கள்.   அதே கடாயில் வாழைப்பூவையும் வதக்கிக்கொள்ளுங்கள். மிக்சியில் முதலில் ஆற வைத்த கடலைப் பருப்பை அரைத்துக்கொள்ளுங்கள். அடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.  கடைசியாக பின் வாழைப்பூ, சிறிது தண்ணீர், உப

கேரள ஸ்பெஷல் 'இதழ் அப்பம்'....

Image
 3 முதல் 4 நிமிடங்கள் கழித்துத் திறந்தால் மாவு வெந்திருக்கும். அதன் மேல் சிறிதளவு நெய்யை முழுவதுமாக தடவவும். இப்போது ஒரு கரண்டி மாவை ஏற்கனவே வெந்திருக்கும் மாவின் மீது ஊற்றி மூடி வைக்கவும். கேரள மாநிலத்தில் புகழ் பெற்ற காலை உணவாக இருப்பது 'இதழ் அப்பம்' . நமது ஊர் இட்லியைப் போலவே ஆவியில் வேகவைத்து எடுப்பது இதன் சிறப்பு. 'வெள்ளை வெளேர்' என்று மிருதுவாக இருக்கும் இதழ் அப்பத்தை, கோழிக்கறி குழம்பு அல்லது ஆட்டுக்கறி குழம்புடன் சேர்த்து சாப்பிட்டால் தனி ருசியாக இருக்கும். அதன் செய்முறையை இங்கே பார்ப்போம். தேவையான பொருட்கள்:  சீரக சம்பா அரிசி - 1 ½ கப்  தேங்காய் - 1  வடித்த அரிசி சோறு - 3 தேக்கரண்டி  உப்பு - தேவையான அளவு  செய்முறை:  சீரக சம்பா அரிசியை நன்றாகக் கழுவிய பின்பு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.  பிறகு தண்ணீரை வடிகட்டிக்கொள்ள வேண்டும். தேங்காயை அரைத்து பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.  இப்போது மிக்சி ஜாரில் சீரக சம்பா அரிசி, வடித்த சாதம், தேங்காய்ப்பால், தேவையான உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.  அந்த மாவை தோசை மாவு பதத்தைவிட சற்று நீர்ப்பாக வர

மழைக்கால கூந்தல் பராமரிப்பு....

Image
 மழைக்காலங்களில் ஹேர் ஸ்ட்ரைட்னிங், ஹேர் கலரிங் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை தலை முடிக்கு சேதம் விளைவிக்கும். கூந்தலுக்கு வண்ணம் பூசுவதற்காக மருதாணி உபயோகிப்பது அதிக குளிர்ச்சியை உண்டாக்கும் என்பதால் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். கோடைகாலத்தில் வறட்சியின் பாதிப்பிற்கு உள்ளாகும் கூந்தல், மழைக்காலத்தில் எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பதால் வலுவிழந்து போகும். ஈரப்பதத்தோடு எண்ணெய்ப் பசை கலக்கும்போது, கூந்தலில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். ஆகவே மழைக்காலத்தில் கூந்தலை அன்றாடம் முறையாகப் பராமரிப்பது முக்கியம்.  மழைக்காலத்தில் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிப்பது அவசியம். அதிகமாக எண்ணெய்ப் பசை கொண்டவர்கள், மென்மையான ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். சீயக்காய், பாசிப்பயறு மாவு, அரப்பு போன்ற இயற்கைப் பொருட்களைக் கொண்டு கூந்தலைப் பராமரிப்பது சிறந்தது. கூந்தலை உலர வைப்பதற்கு அடிக்கடி ஹேர் டிரையரைப் பயன்படுத்தக் கூடாது. இது முடியின் வேர்க்கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தலைமுடி உதிர்வு அதிகமாக ஏற்படும் என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். தேவைப்பட்டால் ச

முடியை கிடுகிடுன்னு வளர வைக்க வேண்டுமா? வெந்தயத்தை இப்படி யூஸ் பண்ணி பாருங்க....

Image
 நாம் அன்றாடம் சமையலுக்கு சேர்க்கப்படும் வெந்தயம் பல நன்மைகளை கொண்டது என்பது அறிந்த தகவலே. குறிப்பாக இது முடி வளர்ச்சிக்க உதவி புரிகின்றது. வெந்தய விதைகளில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே நிறைந்துள்ளது. இந்த சிறிய விதையில் முடிக்கு தேவையான புரதங்கள் மற்றும் ஃபோலிக் அமிலம் அதிக அளவில் உள்ளது இதனை கொண்டு முடி உதிர்வை தடுத்து முடியை அடர்த்தியாக வளர செய்கின்றது. அந்தவகையில் இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். * வெந்தயத்தை பொடியாக அரைத்துக்கொள்ளவும், அதனுடன் பிசைந்த வாழைப்பழம் மற்றும் அரை தேக்கரண்டி தேன் சேர்க்கவும். லேசான ஷாம்பூவுடன் உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு முன் 30 நிமிடங்களுக்கு இந்த ஹேர் மாஸ்க்கை அப்படியே தலையில் வைத்திருங்கள். தேன், வாழைப்பழம் மற்றும் வெந்தயம் ஆகியவை உங்கள் உச்சந்தலையில் இழந்த ஈரப்பதத்தை மீட்டெடுக்கும் மற்றும் வறட்சி மற்றும் கூச்சத்தை எதிர்த்துப் போராட உதவும்.   * வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் கலந்து, அதில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் செம்பருத்திப்பூ தூள் சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் கலந்து உங்கள் உச்சந்தலையில் மச

தோசை, சப்பாத்திக்கு சூப்பரான காம்பினேஷன் என்ன தெரியுமா? இது உங்களுக்கான டிப்ஸ்....

Image
 பொதுவாக சிக்கன் என்றாலே அனைவராலும் விரும்பி உண்ணும் உணவாகும். இதனை பயன்படுத்தி நிறைய வகையான உணவுகளை செய்யலாம். அந்த வகையில் தோசை, சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு தொட்டுக்கொள்ள அருமையான மங்களூர் ஸ்பெஷல் சிக்கன் நெய் ரோஸ்ட் எவ்வாறு செய்வது குறித்து தெரிந்துக்கொள்வோம். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு சர்க்கரை - 1 டீஸ்பூன் மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 2 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 2 கெட்டியான புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன் அரைத்த தக்காளி - 1 கப் நெய் - 7 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன் கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது தயாரிப்பு முறை முதலில் சிக்கன் உட்பட அனைத்தையும் நன்றாக சுத்தம் கொள்வது அவசியமாகும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் நன்றாக சூடாகிய பிறகு அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வரமிளகாய், சீரகப் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளுங்கள். தாளிப்புடன் தக்காளி பேஸ்ட், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்

பாலில் 1 ஸ்பூன் இதை மட்டும் கலந்து குடிங்க! முதுகு வலி ஓடிடும்....

Image
 பொதுவாக பெண்களுக்கு 40 வயதைத் தாண்டும் போடு எலும்புகளின் செயற்திறன் குறைவடையும், இது போன்று ஏற்படும் சிலர் மருத்துவரை நாடுவார்கள் அல்லது நாட்டு வைத்தியம் செய்து சரிச் செய்துக் கொள்வார்கள். இவர்கள் மருத்துவரை நாடும் போது இதுக்கான நிரந்தர தீர்வைப் பெற முடியாது. ஏனெனின் சில ஹார்மொன்ஸ் மாற்றங்களினால் இது நடைப் பெறுகிறது. அந்த வகையில் இது போன்று பிரச்சினை உள்ளவர்களுக்கு சூப்பரான பானம் செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம். இந்த பானத்தை தொடர்ந்து குடித்தால் எலும்பு தொடர்பான பிரச்சினைகள் குணமடையும்.  தேவையான பொருட்கள்   முளைகட்டிய ராகி மாவு – 1 கப்  கருப்பு எள்ளு – 1/4 கப்   பாதாம் பருப்பு – 15  சோம்பு – 2 ஸ்பூன்  தயாரிப்பு முறை  அடுப்பில் ஒரு கடாயை அதனை இளம் சூட்டில் வைத்து முளைகட்டிய ராகி மாவை இதன் பச்சை வாடை நீங்கும் அளவிற்கு நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.  பின்னர் அதே கடாயில் கருப்பு எள்ளு போட்டு படபடவென பொறியும் அளவுக்கு வறுத்து எடுக்க வேண்டும்.  இதனைதொடர்ந்து வருத்த இந்த மாவை ஒரு பவுலில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள். இவையனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் வறுத்த கருப்பு எள்ளு, பா

சூடான தந்தூரி சிக்கன் பிரியாணி! மிக இலகுவான செய்முறையுடன்....

Image
  பொதுவாக பிரியாணி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உணவாகும். அந்த வகையில் மதிய உணவிற்கு சூப்பரான தந்தூரி சிக்கன் பிரியாணி எவ்வாறு செய்வது தொடர்பில் விரிவாக பார்க்கலாம். தேவையான பொருட்கள் தயிர் - ஒரு கப் பூண்டு - ஒன்று இஞ்சி - ஒரு துண்டு கொத்தமல்லி - ஒரு கைப்பிடி கறிவேப்பிலை - சிறிது பச்சைமிளகாய் - 2 லவங்கம் - 4 எலுமிச்சை - பாதி மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி கரம் மசாலா - அரை தேக்கரண்டி மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு முக்கிய பொருட்கள் அரிசி - அரை கிலோ சிக்கன் லெக்பீஸ் - 6 வெங்காயம் - 3 தக்காளி - 3 இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி பிரியாணியின் தாளிப்புப் பொருட்கள் பட்டை பிரிஞ்சு இலை இலவங்கம் ஏலக்காய் அன்னாசிப்பூ - தலா2 தயாரிப்பு முறை முதலில் பிரியாணிக்கு தேவையான சிக்கன், காய்கறிகள், பாத்திரங்கள் அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டும்.பின்னர் வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி ஆகியவற்றை பொடியாக ந

மணக்க மணக்க தேங்காய் லட்டு செய்வது எப்படி தெரியுமா?

Image
 தேங்காய் லட்டு செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.  தேவையான பொருட்கள் 2 கப் துருவிய தேங்காய் பால் - 1/2 லிட்டர் ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன் செய்முறை அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும்.  தேங்காய் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் பால் சேர்த்து நன்கு கிளறவும்.   20 நிமிடங்கள் கொதிக்கவைத்து பின்னர் சர்க்கரை சேர்த்து வாணலியை ஒரு மூடியால் மூடி வைக்கவும்.  பின்னர் ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைத்து ஆற விடவும்.  இப்போது உங்கள் கைகளில் சிறிது நெய் தடவி, கலவையிலிருந்து சிறிய உருண்டைகளை எடுத்து உருட்டவும். ஐஸ்கிரீம் ஸ்கூப்பரைப் பயன்படுத்தி சம அளவிலான லட்டுகளை உருவாக்கலாம்.  அனைத்து கலவையையும் பயன்படுத்தி இதுபோன்ற லட்டுகளை உருவாக்கவும்.   லட்டுகளுக்கு கூடுதல் அமைப்பை சேர்க்க அவற்றை எடுத்து தேங்காய் துருவலில் லேசாக உருட்டலாம். இனி ருசியுங்கள். also read :   வீட்டிலேயே தீபாவளி லேகியம் செய்வது எப்படி?

வீட்டிலேயே தீபாவளி லேகியம் செய்வது எப்படி?

Image
 தீபாவளி என்றாலே பல கொண்டாட்டங்களுக்கு மத்தியில் அசைவ உணவுகள், பலகாரம் என ஒரு பிடி பிடித்துவிடுவார்கள் இதனால் பலரும் செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், இதற்கு தீர்வாகிறது தீபாவளி லேகியம். எண்ணெய் தேய்த்து குளிப்பது, காரசார உணவுக்கு பின் தீபாவளி லேகியம் சாப்பிடுவது என தொடர்ந்து பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களில் ஒன்று. தேவையான பொருட்கள் நல்லெண்ணெய் - 25 கிராம் மல்லி - 50 கிராம் மிளகு4, சீரகம், ஓமம் - 25 கிராம்(ஒவ்வொன்றும் தனித்தனியாக) சுக்கு - ஒரு துண்டு பனை வெல்லம் - 500 கிராம் அதிமதுரம் - ஒரு துண்டு சித்தரத்தை - ஒரு துண்டு  கண்டந்திப்பிலி - ஒரு டேபிள்ஸ்பூன் அரிசித்திப்பிலி - ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை முதலில் அதிமதுரம், சுக்கு, மஞ்சள், சித்தரத்தை, கண்டந்திப்பிலி, அரிசித்திப்பிலி இவற்றை வெயிலில் காயவைத்து நசுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மல்லி, சீரகம், ஓமம், மிளகு போன்வற்றை லேசாக வறுத்துவிட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அடுத்ததாக பனைவெல்லத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சிய பின், நல்லெண்ணைய் ஊற்றி ஏற்கனவே பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கட்டி படாமல்

தீபாவளி ஸ்பெஷல்: சுட சுட நாட்டுக்கோழி பிரியாணி ருசிக்கலாம்....

Image
  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் ஒன்று பிரியாணி. அந்த வகையில் அனைவருக்கும் விருப்பமான சுட சுட நாட்டுக்கோழி பிரியாணி செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம். தேவையான பொருட்கள் நாட்டுக்கோழி - முக்கால் கிலோ சீரகச்சம்பா அரிசி - அரை கிலோ பெரிய வெங்காயம் - 200 கிராம் சின்ன வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 200 கிராம் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு - 4 பற்கள் பச்சை மிளகாய் - 5 கொத்தமல்லித் தழை -  2 கைப்பிடி புதினா -  ஒரு கைப்பிடி கெட்டித் தயிர் - கால் கப் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி பிரியாணி மசாலா- 2 தேக்கரண்டி எலுமிச்சை - கால் மூடி ப்ரிஞ்சி இலை - 3 எண்ணெய் - 4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தயாரிப்புமுறை முதலில் நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கிக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம், இஞ்சி, வெள்ளைப்பூண்டு அனைத்தையும் நன்றாக அரைத்து பேஸ்ட் மாதிரி ஆக்கிக்கொள்ளுங்கள். அடி கனமான பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ப்ரிஞ்சி இலை, பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Image
  அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💐🎉

தீபாவளிக்கு முறுக்கு சுட போறீங்களா..? அப்போ இப்படி செய்து பாருங்க! சூப்பராக இருக்கும்....

Image
 தீபாவளியை முன்னிட்டு அனைவரது வீட்டில் பலகாரங்கள், முறுக்கு போன்றவை செய்வது வழக்கம்.  அதிலும் சுவையான முறுக்கு அது நம் உடல் நலனுக்கு உகந்த ஸ்நாக்ஸ் ஆகும். ஏனென்றால், இவை பெரும்பாலும் சத்தான தானியங்கள் மற்றும் நன்மை தரும் மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மாலை வேளையில் டீ அல்லது காஃபி உடன் சேர்த்து சாப்பிடுவதற்கு மிக பொருத்தமாக இருக்கும். தற்போது முறுக்கு எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.    தேவையான பொருட்கள் முறுக்கு அரிசி மாவு - 1 கப் உளுந்தம் பருப்பு - 3 டீ ஸ்பூன் அளவு வெள்ளை எள் - 1 டீ ஸ்பூன் அளவு நெய் - 2 டீ ஸ்பூன் மிளகாய் தூள் - ¼ டீ ஸ்பூன் பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை எண்ணெய் - ½ லிட்டர் உப்பு - தேவையன அளவு செய்முறை முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, இளம் சூட்டில் சூடேற்றவும். இதில் உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்கவும். ஆறிய பின்னர் அரைத்து வைத்துக் கொள்ளவும். இப்போது உளுந்து மாவு, மிளகாய் பொடி, பெருங்காயம், சீரகம், அரிசி மாவு, நெய் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து கலக்கி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசையவும். மாவு பிசுபிசுப்பாக இருக்க வே

ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆக அதிகநேரம் எடுத்துக் கொண்டால் இதுதான் காரணம்! எச்சரிக்கை அவசியம்...

Image
 ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது என்றால், நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.    மொபைல் சார்ஜிங் குறித்த அடிப்படை விஷயங்கள் சீக்கிரம் பேட்டரி குறைவது இந்த காரணங்களால் தான் நீங்கள் கவனமாகவும் முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது என்றால், முன்னச்சரிக்கையாக நீங்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.  இணைய பாதுகாப்பு  சார்ஜ் சீக்கிரம் தீர்ந்தால், ஸ்மார்ட்போனில் இணைய பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம். வைரஸ், ஹேக்கர்கள் ஊடுருவல் இருந்தால் பேட்டரி சீக்கிரம் காலியாகிவிடும். அதற்கேற்ற தரமான சாப்ட்வேர்களையும் நீங்கள் கட்டாயம் இன்ஸ்டால் செய்து இணைய திருட்டில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்.  பழைய சார்ஜர்  பழைய சார்ஜரை தூக்கி போட்டுவிட்டு 20-வாட் பவர் அடாப்டர் கொண்ட சார்ஜரை பயன்படுத்துங்கள். ஐபோன் 8 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு உங்களிடம் இருந்தால், 30 நிமிடங்களில் உங்கள் மொபைலை டெட் பேக்கிலிருந்து 50% பேட்டரி வரை வேகமாக சார்ஜ் செய்யலாம். உங்களுக்கு ஒரு மணிநேரம் இருந்தால், அதை முழுமையாக சார்ஜ்

கொசுவுக்கு உங்களை ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா? அட ‘இது’ தான் காரணமா?

Image
 Mosquito Magnets: கொசுக்கடிக்கு காரணம் இதுதானா? இனிமேல் கொசு உங்களை கடித்தால், அதற்கான காரணம் கொசுவுக்கு உங்களை அதிகம் பிடித்தது தான் என்று சொல்ல வேண்டாம்...   கொசுக்கடி தாங்கலை என அலறும் நபரா நீங்கள்? கொசுவுக்கு உங்களை பிடிக்க காரணம் இதுதான் சருமத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் கொசுத்தொல்லை அதிகம்  கொசுக்கடி என்பது எரிச்சல் ஊட்டுவது மட்டுமல்ல, பல நோய்களுக்குக் காரணம் ஆகும் தொல்லை ஆகும். சிலரை கொசு மிகவும் அதிகமாக கடிக்கும், ஆனால், சிலரை கொசு அதிகமாக கடிக்காது. இதை, ‘கொசுவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்’ என்று சிலர் வருத்தத்துடன் சொல்வதுண்டு. கொசு தொடர்பான ஆராய்ச்சி ஒன்று, கொசு ஒருவரை அதிகமாக கடிக்க காரணம் என்ன என்று கண்டறிந்துள்ளது. அதன்படி, கொசுவை ஈர்க்கும் ‘உடல் வாசனை’ இருப்பவர்களை கொசு மிகவும் காதலிக்கிறதாம்!! காந்தம் போல ஈர்க்கும் இந்த வாசனையானது, பிறரைவிட 100 மடங்கு அதிகமாக கொசுவை ஒருவரிடம் ஈர்க்குமாம். அது என்ன வாசனை?  இரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளின்படி, அதிக அளவு கார்பாக்சிலிக் அமிலங்களை உற்பத்தி செய்யும் நபர்களை கொசுக்கள் அதிகம் கடிக்கிறது. "

Belly Fat: தொப்பை வெண்ணெய் போல் கரைய ‘3’ எளிய பயிற்சிகள்!...

Image
 நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் மிகவும் பயன்படும். ஆரோக்கியமான உணவு மற்றும் சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். தொப்பையை குறைக்க மூன்று சிறந்த பயிற்சிகள்: 1. இரு கால்களையும் நீட்டி செய்யும் பயிற்சி முதலில், சா

எளிய முறையில் வீட்டிலேயே பாதங்களுக்கு பெடிக்யூர் செய்யலாம்....

Image
 வாரம் ஒருமுறை வீட்டிலேயே பாதங்களை சுத்தம் செய்யலாம்.வீட்டிலேயே பாதங்களுக்கு பெடிக்யூரை எப்படி செய்வதென்று பார்ப்போம். வாரத்திற்கு ஒரு முறை பாதத்தை சுத்தம் செய்யும் செயலான பெடிக்யூரை செய்து வந்தால், பாதங்களில் உள்ள அழுக்குகள் சேர்வது மற்றும் தொற்றுகள் ஏற்படுவது போன்றவை தடுக்கப்படும். நம் வீட்டிலேயே பாதங்களை சுத்தம் செய்யும் முறையைப் பின்பற்றுங்கள். அதுவே சிறந்த பெடிக்யூர் சிகிச்சையாக விளங்கும். சரி, இப்போது வீட்டிலேயே பாதங்களுக்கு பெடிக்யூரை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்:   பால் 4 கப்  பேக்கிங் சோடா 3 டேபிள் ஸ்பூன். முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வெதுவெதுப்பான நிலையில் சூடேற்றிக் கொள்ள வேண்டும். பாதங்களையும் வைக்கக்கூடிய அளவில் ஒரு டப் எடுத்துக்கொள்ளவும். கணுக்கால் வரை மூழ்கும் அளவுக்கு அதில் வெதுவெதுப்பான தண்ணீர் நிரப்பவும். அதில் சிறிது குளியல் உப்பு சேர்க்கவும். நீங்கள் விரும்பும் எசன்ஷியல் ஆயில் சில துளிகள் சேர்க்கலாம். பாதங்களை இந்த தண்ணீரில் 15-20 நிமிடங்கள் வரை ஊறவைத்து நன்கு கழுவ வேண்டும். பின்பு ஒரு அகன்ற பாத்திரம் அல்லது பாதங்களை ஊற வைக்கும் வகையிலான

மொறு மொறு நெய் பொடி தோசை....

Image
 வித்தியாசமான சுவையான இந்த தோசை அனைவருக்கும் பிடிக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள சைடிஷ் தேவையில்லை. தேவையான பொருட்கள்   தோசை மாவு - 1 கப்  இட்லி பொடி - தேவைக்கேற்ப  நெய் - விருப்பத்திற்கேற்ப  செய்முறை  தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெலிதாக ஊற்றி சுற்றி நெய் விடவும்.  பின்னர் அதன் மேல் இட்லி பொடியை பரவலாக தூவி தோசை மொறு மொறு என்று வந்ததும் இரண்டாக மடித்து எடுத்து பரிமாறவும்.  இந்த தோசையை திருப்பி போடக்கூடாது. இப்போது அருமையான மொறு மொறு நெய் பொடி தோசை ரெடி. ALSO READ :  தீபாவளி ஸ்பெஷல்: ஈசி சிக்கன் பிரியாணி.....

தீபாவளி ஸ்பெஷல்: ஈசி சிக்கன் பிரியாணி.....

Image
 பல்வேறு வகையான பிரியாணிகள் உள்ளது. இன்று ஈசியான முறையில் சிக்கன் பிரியாணி செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்   சிக்கன் - 1/2 கிலோ  பிரியாணி அரிசி - 3 கால் படி  பெரிய வெங்காயம் - 1 / 2  தக்காளி - 1 / 2  பூண்டு - 8 பல்  இஞ்சி - 2 அங்குலம் புதினா - ஒரு கை நிறைய  கொத்தமல்லித்தழை - ஒரு கை நிறைய  சோம்பு - 1 / 2 டீஸ்பூன்  பட்டை - 1 கிராம்பு - 2  பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப சின்ன வெங்காயம் - 50 கிராம்  எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்  உப்பு, நெய், எண்ணெய் - தேவையான அளவு  செய்முறை  சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும். பெரிய வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.  பூண்டு, இஞ்சி, புதினா, கொத்தமல்லித்தழை, சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.  குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை 1 போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம், நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் 2, சேர்த்து வதக்கவும்.  பின்னர் கழுவிய சிக்கன் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இதில் அரைத்த விழுதை சேர்த்து 8 நிமிடங்கள் வதக்கவும்.

மழையில் குளிப்பது சருமத்திற்கு நல்லதா?

Image
 பொதுவாக மழை காலம் வந்துவிட்டாலே மழையின் அழகை ரசிப்பதோடு நின்றுவிடாமல் அதில் நனைந்து ஆனந்த குளியல் போடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி மழையில் குளிப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லதா? என்ற கேள்வி பலருக்கு சந்தேகம் இருக்கும். ஏனெனில் மழையில் நனைந்து உடல் நல பாதிப்புகளை எதிர்கொள்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்.   தற்போது மழையில் குளிப்பது நல்லதா? இல்லையா என்பதை பார்ப்போம். மழை பெய்யும் போது நனைவது, உளவியல் ரீதியாக நிம்மதியாக இருப்பது போன்ற உணர்வை தரும். இருப்பினும் காற்று மாசுபாடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற நச்சு ரசாயனங்கள், வாகன உமிழ்வுகள், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மழை குளியல் உகந்ததல்ல.   ஏனெனில் மழைத்துளிகள் காற்றில் கலந்திருக்கும் ரசாயனங்கள், நச்சுக்களுடன் கலந்து சருமத்தை சேதப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. மழைநீரில் அமிலத்தன்மை, அழுக்கு சேர்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது. மழை நீரில் பி.எச் அளவும் அதிகமாக இருப்பதால் சருமம் கடினத்தன்மை கொண்டதாக மாறக்கூடும். கூந்தலும் உலர்வடையக்கூடும். மழை நீரால் தக்கவைக்கப்படும் அதிக ஈரப்பதம் காரணமாக தலைமுடியில் பேன்

நீல நிறத்தில் கூட அரிசி உண்டா..? இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Image
 Blue Rice | சங்குப்பூவை வைத்து செய்யப்படும் நீல அரிசி சாதம் சாப்பிடுபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய் பிரச்சனை, செரிமானப்பிரச்சனைகள் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இன்றைக்கு சுவையுடன் வயிறு நிரம்ப சாப்பிட வேண்டும் என்பதற்காக விதவிதமான டிஸ்களை மக்கள் வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் அரிசியில் செய்யப்படும் சாப்பாட்டைத் தொடர்ந்து சாப்பிடும் போது, கார்போஹைட்ரேட் அதிகளவில் சேர்த்துக்கொள்ள நேரிடும். இதனால் பல உடல் நலப்பிரச்சனைகளோடு உடல் பருமன் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இதனால் தான் அரிசியை வைத்து சமைக்கும் போது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் வகையில் ஊட்டச்சத்துள்ள காய்கறிகள், பூக்களைப் பயன்படுத்தி விதவிதமாக ரெசிபிகளை செய்கின்றனர். அந்த ரெசிபிகளும் இணையத்தில் வைரலாவதும் வழக்கமாகிவிட்டது. இந்த வரிசையில் நீல அரிசி சாதம் (ப்ளு ரைஸ்) தற்போது பிரபலமாகியுள்ளது. அது என்ன நீல அரிசி சாதம்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம். நீல அரிசி சாதம் என்றால் என்ன? நீல அரிசி என்ற எந்த அரிசி வகைகளும்

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!