நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

 பாகிஸ்தானின் இந்த சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், ஒருபோதும் நோய்வாய்ப்படுவதில்லை.


  • 120 வயது வாழும் மக்கள்
  • இது பாகிஸ்தான் மக்களின் ஆரோக்கிய கதை
  • 90 வயதிலும் குழந்தை பெறும் பெண்கள்.

ஒரு கிராமத்தில் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், அவர்களுக்கு நோய் ஏற்படுவதில்லை என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இது உண்மை தான். அதுவும், பிரச்சனைகள் அதிகம் இருக்கும் பாகிஸ்தானில்தான் அப்படியொரு ஊர் இருக்கிறது.

வட பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தின் மக்கள் மீது பல வகையான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

பாகிஸ்தான், தற்போது அரசியல் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காரணமாக அண்மை நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. 

இதுதவிர மற்றொரு சிறப்பு விஷயம் குறித்தும் பாகிஸ்தானின் பெயர் உலக அளவில் அடிபடுகிறது.. அதுதான் இங்கு குடியேறிய ஹன்சா சமூகத்தின் ஆரோக்கியம் அளிக்கும் ஆச்சரியமே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

ஹன்சா சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கின்றனர்

இன்று உலகம் முழுவதும் மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. மக்கள் மிக இளம் வயதிலேயே பெரிய நோய்களுக்கு ஆளாகிறார்கள். ஒரு பக்கம் இத்தனை பிரச்சனைகள் இருந்தால், மறுபுறம் நோயே இல்லாத உலகின் ஒரு மூலை இருப்பது ஆச்சரியமாகத் தானே இருக்கும்?

இங்குள்ள மக்கள் உடல் தகுதி மட்டுமின்றி 120 ஆண்டுகள் வரை வாழ்கின்றனர். உலகின் இந்த மூலை பாகிஸ்தானில் (Pakistan) உள்ளது.

வட பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தின் மக்கள் மீது பல வகையான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகளின்படி, இந்த பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் எந்த நோயும் அவர்களைத் அண்டாத அளவுக்கு உடல் வலிமையுடன் உள்ளனர்.


அவர்கள் உலகில் நீண்ட காலம் வாழும், மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான மக்களில் கணக்கிடப்படுகிறார்கள். அவர்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 120 ஆண்டுகள் ஆகும், இது உலகின் எந்த நாட்டிலும் உள்ள எந்த சமூகத்தையும் விட அதிகம்.

ஹன்சா பள்ளத்தாக்கு (Pakistan Valley) ஒரு மலையில் அமைந்துள்ளது. இந்த மலையில் அமைந்துள்ள பல கிராமங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. பல கிராமங்கள் நூறு அல்லது இருநூறு ஆண்டுகள் பழமையானவை.

ஹன்சா சமூகத்தின் வாழ்க்கை முறை தொடர்பான தனித்துவமான வழிகள் காரணமாக பல புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளன. திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஜேம்ஸ் ஹில்டனின் லாஸ்ட் ஹொரைசன் நாவலிலும் ஹன்ஸா பள்ளத்தாக்கு மக்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். பின்னர் ஃபிராங்க் காப்ராவின் படமும் இந்தப் புத்தகத்தில் வந்தது.

புற்றுநோய் இல்லா ஊர்

இங்குள்ள பெண்கள் 60 வயதில் மட்டுமல்ல, சிலர் 90 வயது வரை குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி உடையவர்களாய் இருக்கிறார்கள். இந்த சமூகத்தின் பெண்களின் கர்ப்பம் தரிக்கும் திறன் மிகவும் அதிகமாக உள்ளதாக நோமேடிக் இணையதளம் (Nomadic website) தெரிவித்துள்ளது.

பல மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த சமூகத்துடன் தங்கி, இந்த சமூகத்தினரின் வாழ்க்கை தொடர்பான பிற விஷயங்களைப் பற்றிய தகவல்களை சேகரித்தனர்.

விஞ்ஞானி டாக்டர் ராபர்ட் மெக்ரிசன், பல ஆண்டுகளாக இந்த சமூகத்தினருடன் தங்கி இருந்தார். புற்று நோய், அல்சர், நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கூட காணமுடியவிலை என்று அவர் கூறுகிறார்.

இங்குள்ள மண் வளமானதாக இருப்பதால் இங்கு நல்ல விவசாயம் செய்வது கடினம் அல்ல. அவர்களின் உணவில் சுத்தமான கரிம காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது. இது அவர்களுக்கு அதிக ஆற்றலை அளிக்கிறது. இங்குள்ள தண்ணீரும் மிகவும் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்கிறது என பல ஆரோக்கிய விஷயங்களை அவர் அங்கு தங்கியிருந்த காலத்தில் கண்டறிந்தார்..

நோய் எதிர்ப்பு அமைப்பு

இங்குள்ளவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது மட்டுமின்றி, முதுமையிலும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அபாரமானது என்று விஞ்ஞானிகளே அதிசயப்படுகின்றனர்.

இந்த மக்கள் தாவரங்களில் இருந்து வரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே சாப்பிடுகிறார்கள். இங்கு பயிரிடப்படும் முக்கிய பயிர்கள் திராட்சை, பிளம்ஸ், செர்ரி மற்றும் பீச். இது தவிர, கோதுமை, ஜோவர் மற்றும் பருப்பு வகைகளையும் பயிரிடுகின்றனர்.


ALSO READ : நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்ன..? 122 வயது மூதாட்டி தினமும் உட்கொள்ளும் 3 உணவுகள் இதோ!


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!