நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பாம்புக்கே தண்ணி காட்டறதுன்னா இது தானா ... !!!

பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. 


 பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. 

திடீரென்று ஒரு பாம்பை, அதுவும் கருநாக பாம்பை பார்த்தால் என்ன நடக்கும்? நம்மைக்  காப்பாற்றிக் கொள்ள அலறி அடித்துக் கொண்டு ஓடுவோம். ஆனால்,  சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவில், ஒரு நபர் ஒரு கண்ணாடியில் குவளையில். விஷம் நிறைந்த கரு நாகப்பாம்புக்கு  தண்ணீர் கொடுப்பதைக் காணலாம். இந்த காணொளியை பார்த்தவர்கள் பயத்தில் உறைந்து போவது உறுதி.

வைரலான வீடியோவில், ஒரு நபர் தனது கையில் ஒரு கிளாஸ் தண்ணீர் வைத்திருப்பதை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், அவருக்கு மிக அருகில் ஒரு கருப்பு நாகத்தையும் காணலாம். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ சிலருக்கு ஆச்சர்யத்தை அளிக்கும் அதே வேளையில் சிலர் அந்த நபருக்கு பயத்தியம் பிடித்துள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளனர். வீடியோவில் பாம்பு எவ்வளவு பயங்கரமாக தோன்றுகிறது என்பதை பார்க்கலாம். எனினும், தண்ணீர் குடிக்கும் போது, ​​அந்த நபரை எந்த விதத்திலும் தாக்கவில்லை என்பதும் ஆச்சர்யத்தை அளிக்கிறது.

பாம்பின் இந்த சுவாரஸ்யமான வீடியோ royal_pythons_ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. பயனர் வீடியோவை பகிர்ந்து கொண்டு, 'இது ஒரு அற்புதமான காட்சி. தாகத்தில் தவித்த கரு நாகப்பாம்பு தண்ணீர் குடிக்கிறது' என்று 6 நாட்களுக்கு முன்பு பதிவேற்றிய இந்த வீடியோ 1 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களை பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வீடியோவை  மக்கள் மிகவும் விரும்பி பார்க்கின்றனர். 

தண்ணீரை கொடுக்கும் நபர் கையுறையை அணிந்திருந்தாலும்,  இது மிகவும் விஷ நிறைந்த பாம்பு என்பதால், பாம்பு கடித்தால்  விஷம்  உடலில் பரவுதை கையுறை தடுக்காது என இதற்கு கருத்து தெரிவித்த ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர் இந்த விஷப்பாம்பு தண்ணீர் குடிக்கும்போது எவ்வளவு அமைதியாகவும் அழகாகவும் இருக்கிறது என்று எழுதியுள்ளார். மொத்தத்தில், இந்த வீடியோவை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.


also read : பாம்பு மசாஜ் செய்யும் திக் திக் வீடியோ: தைரியம் இருந்தா மட்டும் பாருங்க!!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!