Posts

Showing posts from July, 2021

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

‘சுவாரசியம்’ நிறைந்த ‘சாக்கடல்’

Image
டெட் சீ’ என அழைக்கப்படும் ‘சாக்கடல்’ உண்மையில் கடல் அல்ல. மிகப் பெரிய ஏரி. இஸ்ரேல், ஜோர்டான் நாடுகளின் எல்லையில், ஜோர்டான் பகுதியில் அமைந்திருக்கிறது. சுமார் 67 கி.மீ. நீளம், 15 கி.மீ. அகலம், 300 மீட்டர் ஆழம் கொண்டது, சாக்கடல். வழக்கமான கடல் நீரில் உள்ளதைவிட சாக்கடல் நீரில் மிக அதிக அளவில் உப்பு இருக்கிறது. ஒரு லிட்டர் கடல் நீரைக் காய்ச்சினால் 35 கிராம் உப்பு கிடைக்கும். ஆனால், 1 லிட்டர் சாக்கடல் நீரைக் காய்ச்சினால் 340 கிராம் உப்பு கிடைக்கும். அப்படியென்றால் நீரின் தன்மையைப் பார்த்துக்கொள்ளுங்கள். சாக்கடல் நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்டிருக்கிறது. சாக்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகளில் கனிம உப்புகள் அதிகம் உள்ளன. அவை சாக்கடலில் கலக்கும்போது உப்பின் தன்மை அதிகரித்துவிடுகிறது. சாக்கடல் நீர் வேகமாக ஆவியாகிறது. அதே நேரம் மிகக் குறைவாகவே மழை பெய்கிறது. இதனால், நீரில் உள்ள உப்பின் அடர்த்தி அதிகரிக்கிறது. சாக்கடலில் மீன், ஆமை, நண்டு, நத்தை, கடல் தாவரங்கள் போன்ற எந்த உயிரினங்களும் இல்லை. உயிரினங்கள் வசிக்க முடியாத அளவுக்கு நீரில் உப்பு இருப்பதே இதற்குக் கார

தோப்புக்கரணம் போடுவதால் இத்தனை நன்மைகளா?

Image
பல ஆண்டுகளாக நமக்கு தெரியாமலேயே செய்து வரும் யோகாசனம் தான் தோப்புக்கரணம். நாம் மற்ற உடற்பயிற்சிகள் செய்யாவிட்டாலும் இதை மட்டும் தொடர்ந்து செய்து வந்தாலே போதும், நாம் பல நன்மைகளை அடையலாம். பல ஆண்டுகளாக நமக்கு தெரியாமலேயே செய்து வரும் யோகாசனம் தான் தோப்புக்கரணம். நாம் மற்ற உடற்பயிற்சிகள் செய்யாவிட்டாலும் இதை மட்டும் தொடர்ந்து செய்து வந்தாலே போதும், நாம் பல நன்மைகளை அடையலாம். இதை வெளிநாடுகளில் சூப்பர் பிரெயின் யோகா என்று குறிப்பிடுகின்றனர். சரியான முறையில் தோப்புக்கரணம் போடுவது எப்படி? நம்முடைய தோள்பட்டை அகலத்துக்கு கால்களை பிரித்து வைத்து நிற்க வேண்டும். இடது கையை மடக்கி இடது கையின் பெருவிரலால் வலது காது மடலின் நுனியைபிடித்து கொள்ள வேண்டும். வலது கையை மடக்கி வலது கையின் பெருவிரலால் இடது காது மடலின் நுனியை பிடித்து கொள்ள வேண்டும். அப்படி பிடிக்கும் போது கட்டை விரல் காதின் முன் புறமும் ஆள்காட்டி விரல் காதின் பின்புறமும் இருக்க வேண்டும். வலது கையானது இடது கையின் மேல் இருக்க வேண்டும். இரு கால்களையும் மடக்கி முதுகை வளைக்காமல் நேராக உட்காரும் நிலையில் தோப்பு கரணம் போட வேண்டும். உட்

ரஷிய விண்கலம் இணைந்தபோது சர்வதேச விண்வெளி நிலையம் கட்டுப்பாட்டை இழந்தது

Image
சர்வதேச விண்வெளி நிலையம் 45 நிமிடம் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நாசா ஆகஸ்ட் 3 வரை தனது திட்டங்களை ஒத்திவைத்து உள்ளது. வாஷிங்டன் ரஷிய விண்கலம் இணைந்தபோது சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் 45 நிமிடங்களுக்குக் கட்டுப்பாட்டை இழந்ததாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தெரிவித்துள்ளது. வியாழனன்று ரஷியாவின் ஆய்வு விண்கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டது. அப்போது சர்வதேச விண்வெளி நிலையம் 45 நிமிடங்களுக்கு பூமியுடனான கட்டுப்பாட்டை இழந்ததாகவும், அதன்பின் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகவும் நாசாவும், ரஷியச் செய்தி நிறுவனமும் தெரிவித்துள்ளன. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரண்டு ரஷிய விண்வெளி வீரர்கள், மூன்று நாசா விண்வெளி வீரர்கள், ஒரு ஜப்பானிய விண்வெளி வீரர் மற்றும் ஒரு ஐரோப்பிய விண்வெளி வீரர் என மொத்தம் 7 விண்வெளி வீரர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள விண்வெளி வீரர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாசாவை ஆகஸ்ட் 3 வரை தனது திட்டங்களை ஒத்திவைத்து உள்ளது. Also read :  Viral Video: 160 அடி உயரத்தில் டிக்டாக் வீடியோ எட

கொரோனா தடுப்பூசி போட்டால் ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகை - ஜோ பைடன் அறிவிப்பு

Image
கொரோனா தடுப்பூசி போட்டால் ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகை - ஜோ பைடன் அறிவிப்பு. கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களே வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வாஷிங்டன்,  உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வந்தாலும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு வெகுவாக குறைந்தது. ஆனால் அமெரிக்காவில் தற்போது இந்த டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களே வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்க மக்கள் தொகையில் சரிபாதி பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் தகுதி உடைய அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வைக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு 100 டாலர் (இந்திய மதிப்பில்

Viral Video: தாலி கட்டுவதற்கு முன்னால் மணமகனுக்கு நடந்த விபரீதம்

Image
  இந்தியாவில் திருமணம் நடைபெறும் போது, குறிப்பாக வட இந்தியாவில் மணமகனை குதிரையின் மேல் உட்கார வைத்து மணமேடைக்கு அழைத்து வருவது வழக்கம். திருமண நிகழ்ச்சி போது ஒரு குதிரை மணமகனுடன் நீண்ட தூரம் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பார்த்தால், உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது. இந்த நகைச்சுவையான காட்சியை பார்க்கும் உங்களுக்கு சிரிப்பு வந்தாலும், இதில் சிந்திக்க வேண்டிய விசியமும் உள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் விலங்குகளை தொந்தரவு செய்யாமல், அது பயந்து ஓடும் அளவுக்கு சம்பவங்களை ஏற்படாமல் பாதுகாப்பாக இருப்பது நமது கடமை. திருமண நிகழ்ச்சி கொண்டாட்டம் ஒருபக்கம் இருந்தாலும், மறுபுறம் விலங்குளையும் பாதுகாப்பது நமது கடமையாகும். இந்தியாவில் திருமணம் நடைபெறும் போது, குறிப்பாக வட இந்தியாவில் மணமகனை குதிரையின் மேல் உட்கார வைத்து மணமேடைக்கு அழைத்து வருவது வழக்கம். சமீபத்தில், ராஜஸ்தானின் அஜ்மீரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி போது ஒரு குதிரை (பெயர்: மாரே) மணமகனுடன் நீண்ட தூரம் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாலி கட்டுவதற்கு முன்னால் இப்படி ஒரு அம்பவம் நடை

Viral Video: 160 அடி உயரத்தில் டிக்டாக் வீடியோ எடுத்த பெண் கீழே விழுந்து மரணம்

Image
  டிக்டாக் ஸ்டார் ஒருவர் கிரேன் மேற்பரப்பில் இருந்து வீடியோ பதிவு செய்யும் போது கீழே விழுந்து இறந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீன டிக்டாக் ஸ்டார் சியாவோ கியூமி கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்துவந்தார். கிரேன் கேபினுக்குள் லைவ்ஸ்ட்ரீம் வீடியோவை படமாக்கிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. 23 வயதான சியாவோ கியூமி 160 அடி உயரத்தில் கிரேனில் இருந்தபோது வீடியோ பதிவு செய்துக் கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்து இறந்தார்.  தி சன் (The Sun) பத்திரிகையின் படி, ஜூன் 20 அன்று மாலை 5:40 மணியளவில் கிரேனில் இருந்த சியாவோ கீழே விழுந்தபோதும் தன்னுடைய மொபைல் போனை வைத்திருந்தார் என்று சொல்கிறது. அதாவது அவர் 160 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தபோது கூட தனது மொபைல் போனை கைதவற விடவில்லை. மொபைல் மீதான மோகம் படுத்தும் பாடு, உயிரையே பலி வாங்கிவிட்டது. இந்த விபத்து நடைபெற்றபோது, சியாவோவின் சக ஊழியர்களில் பெரும்பாலோர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். சியாவோவின் குடும்பத்தினர் அவரது மரணத்தை உறுதிப்படுத்தினர்கள். கால் தவறியதால் விழுந்ததாகவும், இணைய ஸ்டண்ட் (internet stunt) கா

Incredible Dress! 100 கிலோ தங்கத்தால் நெய்யப்பட்ட அற்புத திருமண ஆடை; வீடியோ வைரல்

Image
  வைரலாகும்  இந்த வீடியோவில் மணப்பெண்ணின் திருமண ஆடையில் 100 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது... பொன்னை பிடிக்காத பெண்களே இருக்க மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பொன்னாலான ஆடை போடுவது என்பது யாரும் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க மாட்டார்கள். தங்கம் விற்கும் விலைக்கு தங்க நகையே ஆடம்பரம் என்னும் நிலையில், பொன்னாடையை பற்றி யார் தான் நினைத்துப் பார்ப்பார்கள்? வேண்டுமானால் அரசியல்வாதிகள் சால்வையை போற்றி பொன்னாடை என்று சொல்வார்களே அப்படித்தான் பொன்னிற ஆடையை வாங்கி திருப்திபட்டுக் கொள்ளலாம். ஆனால், மாத்தி யோசி என்பதே இன்றைய டிரெண்டாக இருக்கும் காலகட்டம் இது. ஆசையும், பணமும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கான உதாரணமாக இந்த  திருமணம் உள்ளது. மணப்பெண்ணின் திருமண ஆடையில் 100 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்! சிவப்பு நிற திருமண ஆடையில் தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திருமணத்திற்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்துவதையே மறந்து மண ஆடையையே பார்த்து பிரம்மித்து நின்றுவிட்டார்களாம்… சும்மாவா என்ன? 100 கிலோ தங்கத்தை அணிந்திருந்தால் பெண்ணை விட பொன்னுக்கு தானே

Pimples Reasons: முகப்பரு வர இதெல்லாம் கூட காரணமாகுமா?

Image
  பெண்களின் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று பருக்களின் பிரச்சனை ஆகும். அதிகப்படியான எண்ணெய், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக, முகப்பரு பிரச்சினை ஏற்படுகின்றது. Pimples Reasons : பெண்களின் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று பருக்களின் பிரச்சனை ஆகும். அதிகப்படியான எண்ணெய், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக, முகப்பரு பிரச்சினை ஏற்படுகின்றது. இவற்றைத் தவிர, நமது சில தனிப்பட்ட விஷயங்களும் முகத்தில் முகப்பருவை (Pimples) ஏற்படுத்தும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வெண்டும், ஆனால், இதற்கு நாம் பெரும்பாலும் அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை. முகத்தில் முகப்பருவை ஏற்படுத்தும் சில தனிப்பட்ட பழக்கவழக்கங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். முகப்பருவை ஏற்படுத்தும் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் மெத்தை உறை நீங்கள் பயன்படுத்தும் தலையணையின் உறையும் உங்கள் முகத்தில் முகப்பரு ஏற்பட காரணமாக அமையலாம். தலையணை உறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மென்மையான உறையை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், தலையணை உறையில் இருக்கும் வியர்வை, பொடுகு, நீங்கள் வெளியில் செல்வதால் முகத்

COVID Vaccine: குழந்தைகளுக்கான தடுப்பூசி எப்போது? வெளியானது முக்கிய தகவல்

Image
  கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்து கொண்டிருப்பது நிம்மதி அளிக்கும் விஷயம் என்றாலும், மூன்றாவது அலை  குறித்த அச்சம் இன்னும் உள்ளது.  கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்து கொண்டிருப்பது நிம்மதி அளிக்கும் விஷயம் என்றாலும், மூன்றாவது அலை  குறித்த அச்சம் இன்னும் உள்ளது. மேலும் அதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படும் நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. மேலும், மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைய குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் போடுவது மிகவும் இன்றியமையானது ஆகும். இந்நிலையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி கிடைக்கலாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகிறார். பிரதமர் நரேந்திர மோடியிடம் (PM Narendra Modi)  ஜூலை 27 அன்று நடந்த கூட்டத்தில், சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டவியா, இது குறித்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம், எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா 2021 செப்டம்பர் மாதத்தி

ட்விட்டரில் அசத்தும் பிரதமர் மோடி: 70 மில்லியனைத் தாண்டியது ஃபாலோயர்களின் எண்ணிக்கை

Image
  இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று மற்றொரு மைல்கல்லை அடைந்தார். அவரது ட்விட்டர் கணக்கில் அவரை பின்தொடரும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை நேற்று 70 மில்லியனைத் தாண்டியது.  இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று மற்றொரு மைல்கல்லை அடைந்தார். அவரது ட்விட்டர் கணக்கில் அவரை பின்தொடரும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை நேற்று 70 மில்லியனைத் தாண்டியது. இதன் மூலம், சமூக ஊடகத் தளமான ட்விட்டரில் தற்போது பதவியில் உள்ள அரசியல்வாதிகளில் அதிகம் பின்பற்றப்படும் அரசியல்வாதி ஆகியுள்ளார் பிரதமர் மோடி. குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் 2009 ல் பிரதமர் மோடி ட்விட்டரைப் பயன்படுத்தத் தொடங்கினார். 2010 இல், அவருக்கு ஒரு லட்சம் ஃபாலோயர்கள் இருந்தனர். பிரதமர் மோடிக்குப் (PM Modi) பிறகு, அதிக ஃபாலோயர்களைக் கொண்டுள்ள ட்விட்டர் கணக்குகளில் போப் பிரான்சிஸின் ட்விட்டர் பக்கம் 53 மில்லியனுக்கும் அதிகமானஃபாலோயர்களைக் கொண்டுள்ளது. ஜூலை 2020 இல், பிரதமரின் ட்விட்டர் ஃபாலோயர்கள் 60 மில்லியனைத் தாண்டினர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 30.9 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு (Joe Biden) ட்விட்டரில் 30.9 மில்லியன்

விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்

Image
  விண்வெளி ஆய்வுக்கு செல்லும் விண்வெளி வீரர்களின் (Astronauts) வாழ்க்கை வசதியை மேம்படுத்த NASA அவ்வப்போது புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் (NASA) விண்வெளி ஆய்வுக்கு செல்லும் விண்வெளி வீரர்களின் (Astronauts) வாழ்க்கை வசதியை மேம்படுத்த அவ்வப்போது புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்பு விண்வெளி வீரர்களுக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் கழிப்பறைகளை அமைக்க திட்டமிட்டது. விண்வெளியில் வாழ்க்கை மிகவும் கடினமானது விண்வெளியில் வாழ்க்கை மிகவும் கடினம். அங்குள்ள மர்மங்களியும் ரகசியங்களையும் அறிய பல மாதக்கணக்கில் வாழும் விண்வெளி வீரர்கள் மிகவும் வித்தியாசமான வாழ்க்கையை நடத்துகிறார்கள். புவி ஈர்ப்பு இல்லாததால், அவர்கள் சாப்பிடுவது, தூங்குவது முதல் ஒவ்வொரு வேலைகளையும் செய்யும் விதம் வித்தியாசமானதாக இருக்கும். இவற்றில் ஒன்று சலவை செய்வது. துணிகளைக் கழுவுவதற்கு நீர் மிக இன்றியமையாத விஷயம். அது விண்வெளி நிலையங்களில் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால் விண்வெளி வீரர்கள் தங்கள் துணிகளை துவைக்க முடிவதில்லை. விண்வெளியில் வீசப்படும் அழுக்கு துணிகள் சர்வதேச விண்

வேற்று கிரக வாசிகள் பூமியை அப்பளம் போல் அடித்து நொறுக்கி விடுவார்கள்: UFO நிபுணர்

Image
  மேம்பட்ட விண்வெளி ஆயுதங்கள் வைத்திருக்கும் வேற்று கிரக வாசிகள், ஒரு  அப்பளத்தை உடைப்பதை போல பூமியை உடைக்க கூடும் என UFO நிபுணர்  எச்சரிக்கிறார். UFO நிபுணரானன நிக் போப் என்பவர் வேற்று கிரக வாசிகள் குறித்து கூறுகையில், இந்த பிரபஞ்சம் சுமார் 14 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. மனிதகுலத்தைத் தவிர வேறு பல நாகரிகங்களும் இருக்கலாம்.  அவை நம்மை விட பழையவை. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை நாம் முன்னேறிய விதத்தை பார்க்கும் போது, அவை நம்மைவிட எவ்வளவு தூரம் முன்னேறியிருக்க வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள் என்கிறார் அமெரிக்க ஸ்பூக்ஸ் (US spooks) வழங்கியுள்ள அறிக்கை நிக் போப் பாதுகாப்பு அமைச்சகத்திற்கான ஏலியன்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்காக யுஎஃப்ஒக்களை ஆராயும்  பணியை அவர் மேற்கொண்டுள்ளார். இந்த மாத தொடக்கத்தில் யுஎஃப்ஒக்கள் குறித்து அமெரிக்க ஸ்பூக்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் 2004 முதல், அமெரிக்க இராணுவ விமானிகள் அடையாளம் தெரியாத பொருட்களை வான் பரப்பில் 143 முறை பார்த்ததாகக் கூறியுள்ளனர். இது வேற்று கிரக வாசிகளின் படையெடுப்பின் சாத்தியத்தை அதிகரிக்கிறது

திருடப்பட்ட சிற்பங்கள், புகைப்படங்கள் ஆகிய கலைப்படைப்புகளை திரும்ப பெறும் இந்தியா

Image
  சுமார் 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சிற்பங்கள், புகைப்படங்கள் மற்றும் சுருள் உள்ளிட்ட மத மற்றும் கலாச்சார கலைப்பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புகிறது ஆஸ்திரேலியா . இந்தியாவில் இருந்து திருடப்பட்ட கலைப்படைப்புகளை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்புகிறது. சுமார் 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சிற்பங்கள், புகைப்படங்கள் மற்றும் சுருள் உள்ளிட்ட மத மற்றும் கலாச்சார கலைப்பொருட்கள் திருடப்பட்டிருந்தன.   இந்திய கலைப்பொருட்களை திருப்பி தந்துவிடுவதாக ஆஸ்திரேலியாவின் தேசிய கேலரி (National Gallery of Australia)  வியாழக்கிழமையன்று அறிவித்தது அனைவரின் காதிலும் தேன் போல் இனிப்பான செய்தியாக வந்து விழுந்தது.  மொத்தம் சுமார் 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய 14 கலைப்படைப்புகளை இந்தியாவுக்கு திருப்பித் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் குறைந்தது ஆறு திருடப்பட்டதாக அல்லது சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. சிற்பங்கள், புகைப்படங்கள் மற்றும் ஒரு சுருள் ஆகியவை இதில் அடங்கும். சர்வதேச கடத்தல் மோசடியை நடத்தியதான குற்றச்சாட்டில் சிறையில் உள்ள மன்ஹ

புலியுடன் போராடி உயிர் தப்பித்த வீரர்; குலை நடுங்க வைக்கும் சம்பவங்கள்

Image
  புலி என்ற பெயரைக் கேட்டாலே படையும் நடுங்கும் இருப்பினும், புலியுடன் போராடி உயிர் பிழைத்த வெற்றிக் கதைகளும் உண்டு. புலி என்ற பெயரைக் கேட்டாலே படையும் நடுங்கும் இருப்பினும், புலியுடன் போராடி உயிர் பிழைத்த வெற்றிக் கதைகளும் உண்டு. குலை நடுங்க வைக்கும் சில சம்பவங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். பங்களாதேஷில் வசிக்கும் ஹஷ்மோத் அலி, 2016 ஆகஸ்டில் புலியால் தாக்கப்பட்டார், இதனால் அவரது முகம் முற்றிலுமாக  சிதைந்து போனது. காட்டிற்குள் பயணம் மேற்கொண்ட போது,  ஹஷ்மோத் அலி தனது படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​புலி வந்த அதன் நகங்களால் தாக்கியது. ஒரு பக்கம் முகத்தில் பாதியை கடித்து குதறி விட்டது. ஹஷ்மோத்தின் அலறல் சத்தம் கேட்டு, சுற்றியுள்ள மக்கள் வந்த பின் புலி தப்பி ஓடியது. காட்டில் இருந்து மருத்துவமனைக்கு ஹாஷ்மோத்தை அழைத்துச் செல்ல சுமார் ஆறு மணி நேரம் ஆனது, மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்றினாலும், முகத்தை குணப்படுத்த முடியவில்லை.  2014 ஆம் ஆண்டில், பிரேசிலிய மிருகக்காட்சிசாலையில் 11 வயது சிறுவன் ஒரு தடைசெய்யப்பட்ட பகுதிக்குச் சென்றபோது புலியால் தாக்கப்பட்டான். புலி அவரைத் தாக்கியதில் சிறு

சத்துக்களின் குவியல் ‘குடை மிளகாய்’

Image
குடைமிளகாயில் அதிகளவில் ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. மற்ற காய்கறிகளைவிட குடைமிளகாயை சமையலில் குறைவாகவோ, எப்போதாவதோ தான் சேர்க்கும் வழக்கம் இருக்கிறது. ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான சத்துணவு சாப்பிட விரும்புபவர்கள் குடைமிளகாயை தவறாமல் சேர்த்துக்கொள்வது நல்லது. குடைமிளகாயின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம். வைட்டமின்-தாதுக்கள்: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் குடைமிளகாயை தாராளமாக சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். இது அதிக நார்ச்சத்து கொண்டது. வயிற்றுக்கும் இதமளிக்கும். மேலும் இதில் அதிக அளவில் வைட்டமின் சி சத்தும் உள்ளது. இந்த ஊட்டச்சத்து உடலின் பெரும்பாலான உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானது. அதுபோல் வைட்டமின் ஏ சத்தும் குடைமிளகாயில் அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும், இனப்பெருக்க அமைப்பையும் ஒழுங்குபடுத்த உதவும். குடைமிளகாயில் கொழுப்பு குறைவாக இருப்பது கவனிக்கத்தக்க அம்சமாகும். ஆன்டி ஆக்சிடென்டுகள் : உடலில் உள்ள செல்கள் சேதமடையாமல் தடுப்பதில் ஆன்டி ஆக்சிடென்டுகளின் பங்களிப்பு இன்றியமையாதது. குடைமிளகாயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் செல்கள் 

ஸ்புட்னிக் தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது

Image
கொரோனாவுக்கு எதிரான ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது என தெரியவந்துள்ளது. ஆனாலும் அதன் தரவுகள் பற்றிய கேள்விகள் தொடர்கின்றன. ரஷிய தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ரஷியாவில்தான் முதன் முதலாக தடுப்பூசி உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், ரஷியாவின் கமலேயா தேசிய தொற்று நோயியல், நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம்தான் இந்த தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசி ரஷியாவில் மட்டுமல்லாது தென்கொரியா, அர்ஜென்டினா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 69 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் கூட்டாக உருவாக்கி உள்ள தடுப்பூசியைப் போலவே இந்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பாதிப்பு ஏற்படுத்தாததும், ஜலதோஷத்தை ஏற்படுத்தக்கூடியதுமான அடினோ வைரசை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த தடுப்பூசியின் முதல் டோசுக்கும், இரண்டாவது டோசுக்கும் வெவ்வேறு வகை அடினோ வைரஸ் பயன்படுத்தப்படுகிறது. 3 வார இடைவெளியில் 2 டோஸ்களையும் போட்டுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. 91.6 சதவீதம் செயல்திறன் இந்த தடுப்பூசியின் முதல் 2 க

துருக்கியில் உள்ள ‘மர்ம’ கிரேக்க கோவில்; இங்கே போனவர் யாரும் திரும்பியதில்லை..!!

Image
  விந்தைகள் நிறைந்த உலகத்தில், நாம் கூர்ந்து கவனைத்தால், பல ஆச்சரியமான மர்மமான இடங்கள், நிகழ்வுகள் நடப்பதைக் காணலாம், அவை ஏதோ ஒரு காரணத்திற்காக மர்மமான இடங்களாக இருக்கின்றன.  விந்தைகள் நிறைந்த உலகத்தில், நாம் கூர்ந்து கவனித்தால், பல ஆச்சரியமான மர்மமான இடங்கள், நிகழ்வுகள் நடப்பதைக் காணலாம், அவை ஏதோ ஒரு காரணத்திற்காக மர்மமான இடங்களாக இருக்கின்றன. அத்தகைய ஒரு இடம் துருக்கியின் பண்டைய நகரமான ஹீரபோலிஸில் உள்ளது. அங்கு மிகவும் பழமையான கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் ஒரு 'நரகத்தின் நுழைவாயில்' இருப்பதாகக் கூறப்படுகிறது, அதற்குள் அருகில் சென்ற ஒருவர் கூட திரும்பி வந்ததில்லை என கூறப்படுகிறது இந்த கோயிலுக்குள் செல்லும் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள் மற்றும் பறவைகள் கூட இறக்கின்றன என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த இடம் மர்மமாகவே இருந்தது, இங்கு வந்தவர்கள் கிரேக்க கடவுளின் விஷ காற்றின் சுவாசத்தால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று மக்கள் நம்பினர். இங்கு தொடர்ந்து இறப்பு நடப்பதால், மக்கள் இந்த கோவிலின் கதவை 'நரகத்தின் நுழைவாயில்' என்று அழைக்கிறார்கள். கிரேக்க, ரோமானிய காலங்கள

Astonishing Astronomer: நாசாவுக்காக 7 சிறுகோள்களை கண்டுபிடித்த 7 வயது இளம் வானியலாளர்

Image
  ஏழு சிறுகோள்களைக் கண்டுபிடித்த ஏழு வயது சிறுமி நிக்கோல் ஒலிவேரா, உலகின் இளைய வானியலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏழு சிறுகோள்களைக் கண்டுபிடித்த ஏழு வயது சிறுமி நிக்கோல் ஒலிவேரா (Nicole Oliviera), உலகின் இளைய வானியலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.விண்வெளி மற்றும் வானியல் மீதான விருப்பம் நிக்கோல் இரண்டு வயதாக இருந்தபோது வெளிப்பட்டது. சர்வதேச வானியல் தேடல் (International Astronomical Search Collaboration) மற்றும் நாசா இணைந்து நடத்தும் ‘சிறுகோள் வேட்டை’ குடிமக்கள் அறிவியல் திட்டத்தில் (citizen science programme) நிக்கோல் ஒலிவேரா பங்கேற்றார். இரண்டு வயதாக இருக்கும்போது நட்சத்திரத்தை வாங்கித் தருமாறு தன் அம்மாவிடம் கேட்டார். அப்போதுதான் அவரது அறிவியல் ஆர்வம் வெளிப்படத் தொடங்கியது. அப்போது மகளுக்கு பொம்மை நட்சத்திரம் ஒன்றை வாங்கித் தந்தாலும், குழந்தைக்கு உண்மையில் என்ன தேவை என்பதை அம்மா கண்டுபிடித்தார். அதன் பிறகு, ஒலிவேராவின் அறிவியல் வேட்கைக்கு தீனி கிடைக்கத் தொடங்கிவிட்டது. சமீபத்தில் பிரேசிலிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் வானியல் மற்றும் வானியல் தொடர்பான முதலாவது சர்வதே

இயற்கையை ரசிக்க சென்ற இடத்தில் விபரீதம்.. மரணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் பெண் மருத்துவர் வெளியிட்ட பதிவு வைரல்..

Image
  இயற்கையுடன் தனது பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் வந்திருந்த பெண் மருத்துவர் கற்பாறைகளுக்கு பலியாகியுள்ளார். மலையில் இருந்து உருண்டோடிய பாறைகள் சுற்றுலா வாகனத்தில் விழுந்ததில் பெண் மருத்துவர் உட்பட  9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹிமாச்சல் பிரதேசம் கின்னார் மாவட்டத்தின் சங்கலா பள்ளத்தாக்கில் நேற்று மதியம் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக பெரிய அளவிலான பாறைகள் சாலையில் சென்ற சுற்றுலா வாகனங்களின் மீது விழுந்தது. இந்தக்காட்சியை அங்கு சுற்றுலாவுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். திடீரென மலையின் மீதிருந்து சத்தம் கேட்கிறது. சிறிது நேரத்தில் மலையில் இருந்து பாறைகள் உருண்டோடி வருகின்றன. ஆபத்தை உணராமல் ஹோட்டல் மாடியில் இருந்து வீடியோ எடுக்கும் சிலர் நெருங்கி வரும் ஆபத்தை உணர்ந்து கூச்சலிடுகின்றனர். WATCH VIDEO நிலச்சரிவின் காரணமாக பாறைகள் உருண்டோடியது. அப்போது சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீதும் ராட்சத பாறைகள் விழுந்தது. இதில் சில வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. ராட்சத பாறைகள் சுற்றுலா வாகனத்தின் மீது விழுந்த விபத்தில் 9 சுற்றுலா  பயணிகள் உயிரிழந்தனர். இந்

வியாழன் துணைக்கோளில் ’நீராவி’- நாசா கண்டுபிடிப்பு

Image
  வளிமண்டலத்தில் இருக்கும் கோள்களில் வியாழனின் துணைக்கோளான கேனிமீட் (Ganymede) மிகப்பெரியது. இந்த துணைக்கோளில் பூமியில் இருக்கும் பெருங்கடல்களின் நீரை விட அதிகமாக இருக்கிறது. வியாழனின் துணைக்கோளான கேனிமீட் சந்திரனில் நீர் ஆவியாதலை ஹப்பிள் தொலைநோக்கி மூலம் கண்டறிந்து நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். வளிமண்டலத்தில் இருக்கும் கோள்களில் வியாழனின் துணைக்கோளான கேனிமீட் (Ganymede) மிகப்பெரியது. இந்த துணைக்கோளில் பூமியில் இருக்கும் பெருங்கடல்களின் நீரை விட அதிகமாக இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால், பூமியில் இருக்கும் பெருங்கடல்களின் நீரை விட அதிகமான நீர் கேனிமீட் துணைக்கோளில் இருப்பதை கண்டுபிடித்திருக்கின்றனர். மேற்பரப்பில் திடமான பனிக்கட்டிகளாக இருக்கும் நீர், சுமார் 160 கிலோ மீட்டர் ஆழத்தில் திரவ நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பான்மையான பகுதிகள் பனிக்கட்டிகளாக இருப்பதால், ஆவியாதல் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என விஞ்ஞானிகள் கருதிய நிலையில், தற்போது கேனிமீட் துணைக்கோளில் உள்ள நீர் ஆவியாவதை உறுதி செய்துள்ளனர். இதற்காக, 1998 ஆம் ஆண்டு முதன்முதலாக ஹப்பிள் தொலைநோக்கி கேன

58 லட்சத்துக்கு ஏலம் போன உலகின் மிகப் பழமையான ஃபுட்பால் ரூல் புத்தகம்!

Image
  ரேவ் க்ரேவில் ஜான் செஸ்டர், என்ற மதகுரு ஒருவர் தொகுத்த விக்டோரியன் ஸ்கரப்புக் ஒன்று சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த பிரசுரத்தில் வில்லியம் பேக்கர் பென்சிலால் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த சோதேபிஸ் என்பவர் பழமையான கலைப்பொருட்கள் சேகரிப்பாளர். சமீபத்தில், இவர் உலகின் மிகவும் பழமையான கால்பந்து விதி புத்தகம் ஒன்றை, 57,000 பவுண்டுக்கு ஏலத்தில் விடுத்தார். இந்திய ரூபாயின் மதிப்பில் இதன் விலை கிட்டத்தட்ட 58 லட்ச ரூபாய். இந்த ஏலம், சோதேபிஸின் இணையதளத்தின் வழியே நடத்தப்பட்டது. இந்த பழமையான புத்தகத்தின் மதிப்பு அதன் வரலாற்று முக்கியத்துவத்தின் அடிப்படையிலும், விளையாட்டின் வளர்சிக்கு எப்படி பங்களித்துள்ளது என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரேவ் க்ரேவில் ஜான் செஸ்டர், என்ற மதகுரு ஒருவர் தொகுத்த விக்டோரியன் ஸ்கரப்புக் ஒன்று சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த பிரசுரத்தில் வில்லியம் பேக்கர் பென்சிலால் கையெழுத்திட்டுள்ளார். கமிட்டியின் ஒரு உறுப்பினராக இருந்த இவர், அக்டோபர் 21, 1858 ஆம் ஆண்டு, இந்த விதிகளுக்கு ஒப்புதலளித்து கையெழுத்திட்டார். ஷெஃபீல்ட் கால்பந்து கிளப் நடத்திய தொ

சுகர் 200-ஐ தாண்டி விட்டதா..? உடனே குறைக்கும் இந்த 5 ஆயுர்வேத மூலிகைகளை எப்போதும் கையில் வைத்திருங்கள்

Image
  இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது உண்டாக்கும் இந்த நீரிழிவு நோய்க்கு ஒரே தீர்வு சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதுதான். சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோயானது அதிகரித்து வரும் பெருத்த ஆபத்தாக இருக்கிறது. மோசமான வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களால் உருவாகும் இந்த பிரச்னையை அனுபவிக்கும்போதுதான் உணர்கிறோம். ஆனால் அவ்வாறு நீரிழ்வு நோய் வந்த பிறகு தினசரி மாத்திரைகளை உட்கொள்வதை தவிர கவலைப் படுவதில் பிரயோஜனமில்லை. இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது உண்டாக்கும் இந்த நீரிழிவு நோய்க்கு ஒரே தீர்வு சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதுதான். அப்படி சில நேரங்களில் மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் தவிர்க்கும்போது, மன அழுத்தம் , சாப்பிட்ட உணவு இப்படி பல காரணங்களால் திடீரென சர்க்கரை அளவு அதிகரிக்கும். அந்த நேரத்தில் சில ஆயுர்வேத மூலிகை மருந்துகள் நமக்கு கைக்கொடுக்கின்றன. இவற்றை நீங்கள் சாப்பிட நினைத்தால் முதலில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். அவர் எந்த பக்க்விளைவுகளையும் ஏற்படுத்தாது, சாப்பிடலாம் என்று கூறினால் இவற்றை சாப்பிடுங்கள். அமிர்தவல்லி இலை :  இந்த இலை நோய் எதிர்ப்பு சக்திய

62 வயது மல்டி மில்லியனரை மணந்தார் இளவரசி டயானாவின் 30 வயது மருமகள்

Image
மறைந்த இளவரசி டயானாவின் 30 வயது மருமகள், 62 வயது மல்டி மில்லியனரை மணந்தார். மறைந்த இளவரசி டயானாவின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்சரின் 30 வயதான மகள் லேடி கிட்டி ஸ்பென்சர், 62 வயதான மல்டி மில்லியனர் மைக்கேல் லூயிஸை திருமணம் செய்து கொண்டார். ரோமில் உள்ள ஃப்ராஸ்காட்டியில் சனிக்கிழமை திருமண விழா நடைபெற்றது. அதன்பின்னர் அவர் தனது திருமண நாளில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் மற்றொரு படத்தைப் பகிர்ந்த அவர், " என் பயங்கர கனவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு கவுனை உருவாக்கியதற்கு..நன்றி" என்று எழுதியுள்ளார். Also read :  உலகின் மிக ஆழமான நீச்சல் குளம்: துபாயில், இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

உலகின் மிக ஆழமான நீச்சல் குளம்: துபாயில், இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

Image
உலகின் மிக ஆழமான நீச்சல் குளம்: துபாயில், இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு. துபாயில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் இன்று (புதன்கிழமை) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது. நீச்சல் குளம் துபாயில் நாத் அல் செபா பகுதி அருகே உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் கட்டமைக்கப்பட்டுள்ளது. டீப் டைவ் என்ற நிறுவனம் இந்த நீச்சல் குளத்தை அமைத்துள்ளது. இந்த நீச்சல் குளம் மொத்தம் 197 அடி (60 மீட்டர்) ஆழம் கொண்டது ஆகும்.இதில் மொத்த தண்ணீர் கொள்ளளவு 1 கோடியே 40 லட்சம் லிட்டர் ஆகும். அதாவது கிட்டத்தட்ட 6 ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் அளவாகும். இந்த ஆழமான நீச்சல் குளத்தில் ைஹப்பர் பேரிக் என்ற பகுதி உள்ளது. இதில் ஒரு நகரம் தண்ணீரில் மூழ்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் இந்த நீச்சல் குளத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களுடன் பழைய பணிமனை போன்ற அமைப்பு பார்வையாளர்களை வெகுவாக கவருவதாக உள்ளது. ஸ்கூபா டைவ் எனப்படும் நீர்மூழ்கி வீரர்கள் பயிற்சி பெறுவதற்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளம் 20 அடி மற்றும் 69 அடி ஆழத்தில் 2 பகுதிக

இதை நைட் 12 மணிக்கு பார்த்தா என்னாகும்?- வைரல் வீடியோ!

Image
  காகங்களை விரட்டுவதற்காக செய்யப்பட்ட பொம்மையின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில நேரங்களில் மக்கள் வழக்கமான விஷயங்களில் எளிமையான மாற்றங்களைச் செய்து அவற்றை இன்னும் சிறப்பாக செய்து பலரையும் வியக்க வைக்கின்றனர். அந்த வகையில் தற்போது புதுமையான ஸ்கேர்குரோ(scarecrow) ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மிகவும் வேடிக்கையான இந்த ஸ்கேர்குரோவின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது, மேலும் இது முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் உட்பட பலரையும் கவர்ந்துள்ளது. ட்விட்டரில் வெளியான இந்த வீடியோவில், கீழே ஒரு சுருள் கம்பியுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு குச்சியில் ஸ்கேர்குரோ பொருத்தப்பட்டுள்ளது. அதன் மேற்புறத்தில் சைக்கிளில் உள்ளது போன்ற ஒரு சுழற்சி கைப்பிடி உள்ளது மற்றும் ஸ்கேர்குரோ உருவம் அதை தனது இரண்டு கைகளால் பிடித்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், காற்று அந்த முழு உருவத்தையும் நகர வைக்கிறது. அதாவது காற்று வீசும் திசையை பொறுத்து அந்த உருவம் அசைகிறது. ஸ்கேர்குரோ என்றால் பறவைகளை வ

கரடியுடன் இளம்பெண் பிரன்ஷிப்... வைரலாகும் புகைப்படங்கள்!

Image
  ரஷ்யாவைச் சேர்ந்த வெரோனிகா டிச்ச்கா என்பவர் வழக்கத்திற்கு மாறாக, ஒரு காட்டு கரடியுடன் பிரன்ஷிப் வைத்துள்ளார். சிலருக்கு செல்லப்பிராணிகள் என்றாலே மிகவும் பிடிக்கும். விலங்குகள், பறவைகள் என பல்வேறு வகையான செல்லப்பிராணிகளை மக்கள் நேசிப்பதோடு அதனை வளர்க்கவும் செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக பலர் நாய்களை வீட்டில் வளர்த்து வருகிறார்கள். சிலர் பூனைகளை வளர்த்து வருகிறார்கள். அவற்றை செல்லப்பிராணி என்று சொல்வதைவிட வீட்டில் இருக்கும் மற்றொரு குடும்ப உறுப்பினர் என்று சொல்வதையே அனைத்து உரிமையாளர்களும் விரும்புவார்கள். ஏனெனில், அவற்றோடு அந்த அளவுக்கு நட்புறவாடுவார்கள். அதே அளவு பாசத்தை செல்லப்பிராணிகளும் தங்களது உரிமையாளருக்கு கொடுக்கும். ஆனால், ரஷ்யாவை சேர்ந்த ஒரு பெண் நட்பு கொள்ளும் ஒரு செல்ல பிராணி யார் என்பது தெரிந்தால் நீங்கள் கட்டாயம் ஆச்சரியப்படுவீர்கள். ரஷ்யாவைச் சேர்ந்த வெரோனிகா டிச்ச்கா என்பவர் வழக்கத்திற்கு மாறாக, ஒரு காட்டு கரடியுடன் பிரன்ஷிப் வைத்துள்ளார். ரஷ்ய பெண்ணின் அந்த மாபெரும் நண்பர் அனைவரின் இதயத்திலும் ஒருவித பய உணர்வையே ஏற்படுத்துகிறது. ஆனால் வெரோனிகா தனது நண்பனை மிகவும் நே

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!