நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒடிசா: ஐஸ்கிரீம் குச்சிகளை கொண்டு ஒலிம்பிக் மைதானம் உருவாக்கிய சிறுமி

ஒடிசாவில் ஐஸ்கிரீம் குச்சிகளை கொண்டு மினி டோக்கியோ ஒலிம்பிக் மைதானம் ஒன்றை சிறுமி ஒருவர் உருவாக்கி உள்ளார்.
ஒடிசாவில் பூரி நகரை சேர்ந்த சிறுமி நந்தினி பட்னாயக் (வயது 14). இவர், ஐஸ்கிரீம் குச்சிகளை கொண்டு மினி டோக்கியோ ஒலிம்பிக் மைதானம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ள இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ப்பணிக்கும் நோக்கில் இதனை அவர் தயாரித்து உள்ளார்.

இதுபற்றி சிறுமி நந்தினி பட்னாயக் கூறும்போது, ஏறக்குறைய 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஐஸ்கிரீம் குச்சிகள் எனக்கு தேவைப்பட்டது. அவற்றை கொண்டு மினி ஒலிம்பிக் ஸ்டேடியம் ஒன்றை உருவாக்கி உள்ளேன். நம்முடைய விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை சேர்க்கும் வகையில் இதனை அமைத்திருக்கிறேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!