நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

'சூரிய ஒளி பட்டால் போதும்.. இந்த பிளாஸ்டிக் கரைந்து போகும்' - சீனாவில் அடடே கண்டுபிடிப்பு!

சீனாவின் ஹுவாஷோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் இந்த பிளாஸ்டிக் கண்டுபிடிக்கபட்டது.
நூறு ஆண்டு காலமாக இந்த பிளாஸ்டிக் மக்காமல் மண்ணில் இருந்து மண்ணை சேதப்படுத்தி கொண்டு இருக்கையில், சீனா ஆராய்ச்சியாளர்கள் புது விதமான பிளாஸ்டிக் ஒன்றை கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த பிளாஸ்டிக் ஆனது ஒரு வாரம் சூரிய வெளிச்சத்தில் இருந்தால் சிதைந்து போகும் தன்மை கொண்டது. 


சீனாவின் ஹுவாஷோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் இந்த பிளாஸ்டிக் கண்டுபிடிக்கபட்டது. இது மேம்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் போலிமர் தயாரிப்பில் வேலை செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் pH அளவை பொறுத்து, அதன் நிறம் மாறுபடுகிறது. இதன் தனித்துவமான மூலப்பொருள் காரணமாக இணைப்பு சங்கிலிகளுடன் பிணைந்து உள்ளது. இந்த பிணைப்பு உடைந்தவுடன் , பொருளானது மறைந்து விடுகிறது.
இதை வைத்து அதன் நிறம் மாறுபடுவதையும், வெயிலில் வைத்தால் முழுவதுமாக சிதைந்து விடுவதையும் கண்டறிந்தனர். இதை கொண்டு இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது பற்றி பல்வேறு முறைகளில் ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது.


சூரிய ஒளி மற்றும் ஆக்ஸிஜன் வெளியில் உட்படும் போது இது முற்றிலும் சிதைந்து விடுகிறது. இந்த வகையான பிளாஸ்டிக் தயாரிக்கும் போது , இதிலிருந்து சக்சினிக் அமிலம் இயற்கையாக வெளிவருகிறது. மேலும் இந்த பிளாஸ்டிக் தயாரிப்பில் பல்வேறு முறைகளில் ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது. இதை வணிக ரீதியாக அனைத்திற்கு பயன்படுத்த முடியுமா என சந்தேகத்தை தொடர்ந்து இது போன்ற ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது.
இது வெயிலில் இருந்தால் சிதைந்து விடுவதால் இதை சோடாபாட்டிலாகவும், பிளாஸ்டிக் பைகளாகவும் தயாரிக்க முடியாது. காற்று புகாத இடங்களில் மட்டும் இது பயன்படுத்தி கொள்ளலாம். இது மிகவும் பாதுகாப்பானது. மாத்திரைகள் தயாரிப்பதில், உணவுகளில் இது பயன்படுத்தி கொள்ளலாம். மொபைல் போன்களில் உள்ளே இருக்கும், காற்று புகாத பாகங்கள் தயாரிக்க இதை பயன்படுத்தி கொள்ளலாம். செல்போனில் உள்ளே இருக்கும் பாகங்கள் பெரும்பாலும் தூக்கி எறியப்பட்டு குப்பைகளாக இருக்கும். இந்த குப்பைகள் குறைப்பதற்கு இந்த புது பிளாஸ்டிக் பயன்படும்


இந்த பிளாஸ்டிக் பல்வேறு வகைகளில் பயன்படுத்துவது பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது. சில மின் சாதன பெட்டிகளில் உள்ளே இருக்கும் பிளாஸ்டிக் பொருள்களை இதை கொண்டு தயாரிப்பதால் மூலம், அவை பயன்படுத்தி முடித்த பிறகு பெரும்பாலும் குப்பைகளாக மாறுவது குறைக்கப்படும். இதன் மூலம் மின் சாதன பிளாஸ்டிக் கழிவுகள் குறைக்கப்படும். எங்கு எல்லாம் காற்று புகாமல் இருக்கிறதோ, பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கிறதோ அங்கு எல்லாம் இந்த வகையான பிளாஸ்டிக் பயன்படுத்துவது பற்றி பல விதங்களில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!