நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

துருக்கியில் உள்ள ‘மர்ம’ கிரேக்க கோவில்; இங்கே போனவர் யாரும் திரும்பியதில்லை..!!

 விந்தைகள் நிறைந்த உலகத்தில், நாம் கூர்ந்து கவனைத்தால், பல ஆச்சரியமான மர்மமான இடங்கள், நிகழ்வுகள் நடப்பதைக் காணலாம், அவை ஏதோ ஒரு காரணத்திற்காக மர்மமான இடங்களாக இருக்கின்றன. 


விந்தைகள் நிறைந்த உலகத்தில், நாம் கூர்ந்து கவனித்தால், பல ஆச்சரியமான மர்மமான இடங்கள், நிகழ்வுகள் நடப்பதைக் காணலாம், அவை ஏதோ ஒரு காரணத்திற்காக மர்மமான இடங்களாக இருக்கின்றன.

அத்தகைய ஒரு இடம் துருக்கியின் பண்டைய நகரமான ஹீரபோலிஸில் உள்ளது. அங்கு மிகவும் பழமையான கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் ஒரு 'நரகத்தின் நுழைவாயில்' இருப்பதாகக் கூறப்படுகிறது, அதற்குள் அருகில் சென்ற ஒருவர் கூட திரும்பி வந்ததில்லை என கூறப்படுகிறது

இந்த கோயிலுக்குள் செல்லும் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள் மற்றும் பறவைகள் கூட இறக்கின்றன என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த இடம் மர்மமாகவே இருந்தது, இங்கு வந்தவர்கள் கிரேக்க கடவுளின் விஷ காற்றின் சுவாசத்தால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று மக்கள் நம்பினர். இங்கு தொடர்ந்து இறப்பு நடப்பதால், மக்கள் இந்த கோவிலின் கதவை 'நரகத்தின் நுழைவாயில்' என்று அழைக்கிறார்கள். கிரேக்க, ரோமானிய காலங்களில் கூட, மரண பயம் காரணமாக இங்கு செல்ல மக்கள் பயந்தார்கள் என கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த மர்மம் தொடர்பாக விஞ்ஞானிகள் கூறுவது வேறு விதமாக உள்ளது. கோயிலுக்கு அடியில் இருந்து விஷ கார்பன் டை ஆக்சைடு வாயு தொடர்ந்து வெளியேறி வருவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர், இதன் காரணமாக மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் இந்த கோவிலுக்கு செல்வதால் இறக்கின்றனர் எனக் கூறுகிறார்கள்.

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில், கோயிலின் கீழ் கட்டப்பட்ட குகையில் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 10 சதவிகிதம் கார்பன் டை ஆக்சைடு இருந்தால் ஒரு நபர் வெறும் 30 நிமிடங்களில் இறக்கலாம், இங்குள்ள குகைக்குள் இருக்கும் இந்த விஷ வாயுவின் அளவு 91 சதவீதம்.

ஆச்சரியம் என்னவென்றால், குகைக்குள் இருந்து வெளியே வரும் நீராவியினால், இங்கு வரும் பூச்சிகள், விலங்குகள் மற்றும் பறவைகள் கொல்லப்படுகின்றன.

இந்த இடம் முற்றிலும் நீராவியால் நிரம்பியிருப்பதால் புலப்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது எனவும் கூறுப்படுகிறது.  இதன் காரணமாக இங்கு நிலம் அரிதாகவே தெரியும்.



ALSO READ : Astonishing Astronomer: நாசாவுக்காக 7 சிறுகோள்களை கண்டுபிடித்த 7 வயது இளம் வானியலாளர்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!