நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நீரில் இருந்து உயரும் நிலம்! சும்மா அதிருது…

 இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் திகைத்துப்போனார்கள், இப்படியொரு வினோதமான நிகழ்வு நிகழ பின்னணி என்ன என ஆளுக்கு ஒரு கருத்து சொல்கிறார்கள். அப்படி என்ன தான் நடந்தது?


தற்போது ஒரு விநோதமான வீடியோப் பதிவு இணையத்தில் வைரலாகிறது. பார்ப்பவர்கள் அனைவரும் பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருந்தால், வீடியோவை படமாக்கியவரும் அதே பிரம்மிப்பில் தான் இருக்கிறார். அவர் வீடியோவை பதிவு செய்யும் போது பேசுவதை கேட்டால் தெரிகிறது.


இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் திகைத்துப் போனார்கள், இப்படியொரு வினோதமான நிகழ்வு நிகழ பின்னணி என்ன என ஆளுக்கு ஒரு கருத்து சொல்கிறார்கள். அப்படி என்ன தான் நடந்தது?

 

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இது. திடீரென நிலத்தின் ஒரு பகுதி நதியின் மேல் உயர்கிறது. மழை பெய்த சற்று நேரத்தில் இப்படி அதிசய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. இந்த விசித்திரமான வீடியோ ஹரியானா மாநிலத்தில் எடுக்கப்பட்டது.


யாரும் எதிர்பாராத விதமாக நிலம், ஆற்றில் இருந்து உயர்வதைக் கண்ட ஒருவர், உடனே அதை படமாக்கி, இணையத்தில் பதிவிட்டார். மொபைலில் பதிவு செய்யப்பட்ட வீடியோவின் பின்னணியில் சிலர் பேசிக் கொள்வதும் கேட்கிறது. ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டே வீடியோவை எடுக்கிறார் பதிவு செய்தவர். 


இதைப் பாருங்கள், நிலம் எவ்வாறு உயர்கிறது. புதிய அனுபவம் என்று அவர் ஹிந்தியில் சொல்கிறார். வீடியோவில், நீருக்கடியில் இருக்கும் நிலம் திடீரென தண்ணீருக்கு மேலே சில அடி உயர்ந்து பிறகு இடிந்து நொறுங்கி விழுவதைக் காணலாம்.

முதலில் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை ஆறு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். சுமார் 61 பேர் வீடியோவை லைக் செய்து வைரலாக்கியுள்ளனர். நீங்கல் பார்க்கும்போது பார்த்தவர்களின் எண்ணிக்கை எத்தனை மில்லியன் எகிறியிருக்குமோ தெரியாது.


வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் திகைத்துப்போனார்கள், வினோதமான நிகழ்வு ஏன் நிகழ்ந்திருக்கலாம் என பலரும் பல கருத்துக்களை சொல்கின்றனர்.  


நிலத்தட்டுகள் அசைந்ததால் (tectonic activity) நிலம் உயர்ந்து இருக்கலாம் என்று சில பயனர்கள் தெரிவித்தனர். "உண்மையில் டெக்டோனிக் செயல்பாடு காரணமாக இப்படி ஆகவில்லை., ஆனால் பூமியில் உள்ள மீத்தேன், ஈரமான அடுக்கை ஒரு குமிழாக உருவாக்கி விடுவிக்கிறது, அதுதான் இங்கே நடக்கிறது என்று தோன்றுகிறது" என மற்றொரு பயனர் கூறுகிறார்.



also read :  இறந்த பின் ஐஸ்பெட்டியில் நெடு நேரம் வைக்கப்பட்டவர் ‘குறட்டை’ விட்ட திகில் சம்பவம்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!