நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சுற்றுலா பயணிகளை ஈர்க்க கடலுக்கு அடியில் அமைந்துள்ள அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு.. எங்கு தெரியுமா?

 கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதை தொடர்ந்து ஸ்கூபா டைவர்ஸை ஈர்க்கும் வகையில் கிரேக்க தீவான அலோனிசோஸின் கரையோரத்தில் ஏஜியன் கடல?


கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் இருந்து மீண்டு வந்து சில உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. தொற்று காரணமாக பல நாடுகளின் பொருளாதாரம் சரிந்த நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு தங்கள் நாட்டின் பொருளாதரத்தை மேம்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. சுற்றுலாவை பெரிதும் சார்ந்திருக்கும் நாடுகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வேலைகளில் மீண்டும் ஈடுபட துவங்கி உள்ளன.

அந்த வகையில் கிரீஸ் நாடு தனது சுற்றுலாத்துறையை மீண்டும் திறந்துள்ளது. கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதை தொடர்ந்து ஸ்கூபா டைவர்ஸை ஈர்க்கும் வகையில் கிரேக்க தீவான அலோனிசோஸின் கரையோரத்தில் ஏஜியன் கடலில் நீருக்கடியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை கிரீஸ் மீண்டும் திறந்துள்ளது.


கடலில் நீருக்கடியில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் சுமார் 2,500 ஆண்டு பழமைவாய்ந்த மதுப்பானைகள், 5-ஆம் நூற்றாண்டில் ஒரு பண்டைய கப்பல் விபத்துக்குள்ளான இடத்தை குறிக்கிறது.

கடலுக்கடியில் திறக்கப்பட்டுள்ள கிரீஸின் முதல் அன்டர் வாட்டர் மியூசியம் இதுவாகும். நீருக்கடியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மியூசியத்தை பார்வையிட வந்த ஸ்கூபா டைவர்ஸ் சிலர் கூறுகையில், இது டைவிங் மற்றும் தொல்பொருள் டைவிங் ஆகிய இரண்டின் கலவை. எனவே இந்த டைவிங் எங்களுக்கு சிறப்பு மற்றும் தனித்துவமானது என உற்சாகம் தெரிவித்தனர். இந்த அருங்காட்சியகம் கடந்த 2020-ஆம் ஆண்டில் அலோனிஸ்ஸோஸ் தீவில் இருந்து ஒரு பாறைகள் நிறைந்த பெரிஸ்டெரா என்ற தீவுக்கு அப்பால் கடலுக்கு அடியில் திறக்கப்பட்டது.

எனினும் கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக இந்த சுற்றுலா தளத்திற்கான பார்வையாளர்கள் வருகை மந்தமாகவே காணப்பட்டது. கடும் தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளதை அடுத்து தனது சுற்றுலாத் துறையை கிரீஸ் மீண்டும் திறந்துள்ள இந்த நேரத்தில் இந்த அன்டர் வாட்டர் மியூசியத்திற்கு ஸ்கூபா டைவர்ஸின் வருகை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. ஒரு வழக்கமான பொழுது போக்கு ஸ்கூபா பயணத்தின் விலையை விட 50 சதவீதம் அதிகமாக இந்த அன்டர் வாட்டர் மியூசியத்தை பார்வையிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஒரு முறைக்கு சுமார் 110 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இதுவரை சுமார்300-க்கும் மேற்பட்ட கைதேர்ந்த ஸ்கூபா டைவர்ஸ் கடலுக்கடியில் இருக்கும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளனர். கடலுக்கடியில் அதிக ஆழத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருப்பதால் அனைவராலும் இதை பார்வையிட முடியாது.

ஏனென்றால் அவ்வளவு ஆழத்திற்குச் செல்வது சிரமம் என்பதே இதற்கு காரணம். எனவே தேர்ச்சி பெற்ற ஸ்கூபா டைவர்ஸ்களுக்கு மட்டுமே அன்டர் வாட்டர் மியூசியத்தை நேரில் சென்று பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஃபெர்ச்சர் மற்றும் Danish wine-cellar தயாரிப்பாளரான லிசெட் ஃபிரடெலண்ட் போன்ற டைவர்ஸ் இந்த அருங்காட்சியகத்தை ஸ்கூபா டைவிங் செய்து பார்வையிட்டனர்.

தன் அனுபவம் பற்றி கூறிய ஃபிரடெலண்ட், ஆச்சரியமான ஒரு டைவாக இது எனக்கு இருந்தது. நாங்கள் நீருக்கடியில் மியூசியத்தில் அங்கே இருந்த போது, ​​மதுவை ஏற்றிச் செல்லும் ஒரு கப்பலில் இருப்பது எப்படி என்று கற்பனை செய்ய முயன்றேன்" என்று குறிப்பிட்டார்.

ஆண்டு முழுவதும் மக்களை ஈர்க்கும் ஒரு வகை சுற்றுலா என்று குறிப்பிட்டுள்ள கிரீஸ் அதிகாரிகள், இது சிறப்பு பார்வையாளர்களை டைவ் செய்வதற்கு தாராளமாக அனுமதிக்கிறது என்று தெரிவித்து உள்ளனர்.


ALSO READ : நடுக்கடலில் மீனவர் வலையில் சிக்கிய ஏலியன் மீன் - உறைந்து போன மீனவர்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!