நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Pimples Reasons: முகப்பரு வர இதெல்லாம் கூட காரணமாகுமா?

 பெண்களின் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று பருக்களின் பிரச்சனை ஆகும். அதிகப்படியான எண்ணெய், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக, முகப்பரு பிரச்சினை ஏற்படுகின்றது.


Pimples Reasons: பெண்களின் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று பருக்களின் பிரச்சனை ஆகும். அதிகப்படியான எண்ணெய், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக, முகப்பரு பிரச்சினை ஏற்படுகின்றது.

இவற்றைத் தவிர, நமது சில தனிப்பட்ட விஷயங்களும் முகத்தில் முகப்பருவை (Pimples) ஏற்படுத்தும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வெண்டும், ஆனால், இதற்கு நாம் பெரும்பாலும் அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை. முகத்தில் முகப்பருவை ஏற்படுத்தும் சில தனிப்பட்ட பழக்கவழக்கங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

முகப்பருவை ஏற்படுத்தும் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள்

மெத்தை உறை

நீங்கள் பயன்படுத்தும் தலையணையின் உறையும் உங்கள் முகத்தில் முகப்பரு ஏற்பட காரணமாக அமையலாம். தலையணை உறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மென்மையான உறையை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், தலையணை உறையில் இருக்கும் வியர்வை, பொடுகு, நீங்கள் வெளியில் செல்வதால் முகத்தில் (Face) இருக்கும் தூசி-மண் போன்றவற்றுடன் தொடர்பில் வருவதால் முகப்பரு ஏற்பட வாய்ப்புண்டு.

மொபைல் போன்

மொபைல் காரணமாக, பெரும்பாலும் காது மற்றும் அதைச் சுற்றியுள்ள தோல் பகுதியில் பிரச்சினை ஏற்படுகிறது. பெரும்பாலும் முகத்தில் எண்ணெய், வியர்வை, அழுக்கு ஆகியவை இருக்கும்போது, அப்படியேதான் நாம் மொபைலைப் பயன்படுத்துகிறோம். இதன் காரணமாக அழுக்கு, வியர்வை போன்றவை மொபைல் அல்லது அதன் கவரிலும் பட்டுவிடும். நாம் முகத்தை சுத்தம் செய்கிறோம், ஆனால் மொபைலை சுத்தம் செய்வதில்லை. அப்படியே அந்த மொபைலை மீண்டும் பயன்படுத்துகிறோம். காதருகில் அதே மொபைலை வைக்கிறோம். இந்த வகையில், மொபைலில் இருக்கும் தூசும் மாசும் நம் முகத்தில் மீண்டும் பட்டு, முகப்பருக்கள் ஏற்பட காரணமாகின்றன.

துண்டு

முகப்பருவை ஏற்படுத்தும் மூன்றாவது பொருள் நாம் பயன்படுத்தும் துண்டாகும். உங்கள் துண்டு வேறொருவரால் பயன்படுத்தப்பட்டால் அல்லது அவை எப்போதும் அசுத்தமாக இருந்தால், முகத்தில் முகப்பரு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. துண்டை வெயிலில் (Sunlight) போட்டு தினமும் காய வைக்க மறக்காதீர்கள். இதன் காரணமாக ஈரப்பதமும் துர்நாற்றமும் அதில் வராது.

இங்கே வழங்கப்பட்ட தகவல்கள் எந்தவொரு மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்று இல்லை. இது கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.


ALSO READ : COVID Vaccine: குழந்தைகளுக்கான தடுப்பூசி எப்போது? வெளியானது முக்கிய தகவல்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!