நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனா தடுப்பூசி போட்டால் ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகை - ஜோ பைடன் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி போட்டால் ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகை - ஜோ பைடன் அறிவிப்பு.

கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களே வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வாஷிங்டன், 

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வந்தாலும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு வெகுவாக குறைந்தது. ஆனால் அமெரிக்காவில் தற்போது இந்த டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.


கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களே வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்க மக்கள் தொகையில் சரிபாதி பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் தகுதி உடைய அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வைக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு 100 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,000) வழங்க அனைத்து மாகாண அரசுகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!