நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

8 கால்கள், 2 இடுப்புகளுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...!

ஒரு உயிரினத்தில் ஏற்படும் பிறழ்வு என்பது அதன் டி.என்.ஏ வரிசையில் உண்டாகும் மாற்றத்தைக் குறிப்பதாகும்.
மேற்கு வங்க மாநிலம், பங்கான் மாவட்டத்தில் இரண்டு இடுப்புகள் மற்றும் 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி, பிறந்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டது. ஒரு உயிரினத்தில் ஏற்படும் பிறழ்வு என்பது அதன் டி.என்.ஏ வரிசையில் உண்டாகும் மாற்றத்தைக் குறிப்பதாகும். இது, மனிதர்கள், விலங்குகள் அல்லது வேறு எந்த உயிரினத்திலும் ஏற்படலாம்.

மேற்கு வங்கத்தில், கடந்த வியாழக்கிழமை அன்று இதுபோன்ற பிறழ்வின் வெளிப்பாடாக ஒரு அசாதாரண நிகழ்வு ஏற்பட்டது. மேற்கு வங்காளத்தின் மாவட்டமான பங்கானில், வடக்கு 24 பர்கானாவில் இரண்டு இடுப்பு மற்றும் எட்டு கால்கள் கொண்ட ஒரு ஆடு பிறந்தது.

கல்மேகா பகுதியில், இந்த சம்பவம் ஜூலை 16 ஆம் தேதி நடந்தது. அந்தப் பகுதியில் வசிக்கும் சரஸ்வதி மொண்டல் என்பவர், ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். வியாழக்கிழமை அன்று, அவர் வளர்த்து வரும் ஆடுகளில் ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்றது. பிறந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளில் ஒரு குட்டி சாதாரண உருவத்தில், ஆரோக்கியமாக இருந்தது. மற்றொரு குட்டி, இரண்டு இடுப்பு மற்றும் 8 கால்களுடன் பிறந்தது. விநோதமாகக் காணப்பட்ட இந்த ஆட்டுக்குட்டி, பிறந்த சில நொடிகளிலேயே இறந்தது மிகவும் பரிதாபகரமானது.
இந்த ஆட்டுக்குட்டி பற்றிய செய்தி கிராமம் முழுவதும் பரவியது. கிராம மக்கள் அனைவரும் வினோதமான அந்த ஆட்டுக்குட்டியைப் பார்ப்பதற்காக உடனேயே சரஸ்வதியின் வீட்டுக்கு விரைந்தனர். இதுபோன்ற ஒரு ஆட்டுக்குட்டியை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று சரஸ்வதி கூறியதாக செய்திகள் தெரிவித்தன.

ஆட்டுக்குட்டியின் மரணம் குறித்த தகவல்களையும் வழங்கினார். தாய் ஆடும், மற்றொரு குட்டியும் முற்றிலும் நலமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மரபணு பிறழ்வால் ஏற்படும் வித்தியாசமான பிறப்புகள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன.


இதேபோன்ற ஒரு விநோதமாக பிறப்பு, சில மாதங்களுக்கு முன்பு குஜராத்திலும் பதிவு செய்யப்பட்டது. ஏப்ரல் மாதத்தில், மனிதனைப் போன்ற முகத்துடன் ஒரு ஆடு பிறந்தது. அந்தப்பகுதி மக்கள் அதை அடக்கம் செய்வதற்கு முன்பு அதை வணங்கினர். இது தங்கள் முன்னோர்களின் மறுபிறவி என்று கிராமவாசிகள் உறுதியாக நம்பினார்கள்.

குஜராத், சோங்காத் தாலுகாவில் தபதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள செல்டிபாடா என்ற கிராமம் தான், மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட அந்த ஆடு பிறந்த இடம். அந்த ஆட்டுக்குட்டி மிகவும் விநோதமாகக் காணப்பட்டது.

அந்த ஆட்டுக்குட்டி, சாதாரண ஆடுகளுக்கு இருப்பது போன்ற காதுகள் மற்றும் நான்கு கால்களுடன் பிறந்தது. ஆனால், அதன் உடல், கண்கள், வாயின் மேற்பகுதி மற்றும் சில பகுதிகள் மனிதர்களைப் போன்ற இருந்தது. மனிதனைப் போல காணப்பட்ட ஆட்டுக்குட்டியும் 10 நிமிடங்களுக்குள் இறந்து விட்டது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!