நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சுகர் 200-ஐ தாண்டி விட்டதா..? உடனே குறைக்கும் இந்த 5 ஆயுர்வேத மூலிகைகளை எப்போதும் கையில் வைத்திருங்கள்

 இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது உண்டாக்கும் இந்த நீரிழிவு நோய்க்கு ஒரே தீர்வு சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதுதான்.


சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோயானது அதிகரித்து வரும் பெருத்த ஆபத்தாக இருக்கிறது. மோசமான வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களால் உருவாகும் இந்த பிரச்னையை அனுபவிக்கும்போதுதான் உணர்கிறோம். ஆனால் அவ்வாறு நீரிழ்வு நோய் வந்த பிறகு தினசரி மாத்திரைகளை உட்கொள்வதை தவிர கவலைப் படுவதில் பிரயோஜனமில்லை.



இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது உண்டாக்கும் இந்த நீரிழிவு நோய்க்கு ஒரே தீர்வு சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதுதான். அப்படி சில நேரங்களில் மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் தவிர்க்கும்போது, மன அழுத்தம் , சாப்பிட்ட உணவு இப்படி பல காரணங்களால் திடீரென சர்க்கரை அளவு அதிகரிக்கும். அந்த நேரத்தில் சில ஆயுர்வேத மூலிகை மருந்துகள் நமக்கு கைக்கொடுக்கின்றன. இவற்றை நீங்கள் சாப்பிட நினைத்தால் முதலில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். அவர் எந்த பக்க்விளைவுகளையும் ஏற்படுத்தாது, சாப்பிடலாம் என்று கூறினால் இவற்றை சாப்பிடுங்கள்.



அமிர்தவல்லி இலை :
 இந்த இலை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அமிர்தவல்லி இலை பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலந்து இரவு தூங்கும் முன் ஊற வைத்து பின் காலை எழுந்ததும் குடியுங்கள். இதனால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.



நித்திய கல்யாணி : 
இது இந்தியாவில் பரவலாகக் காணப்படும் செடியாகும். ஆனால் இதன் மருத்துவ குணங்கள் எத்தனைப் பேருக்கு தெரியும்..? இது மலேரியா, தொண்டைப் புண், நீரிழிவு நோய் இப்படி பல பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கிறது. இரத்ததில் சர்க்கரை அளவை சமநிலை செய்வதிலும் முகிய பங்கு வகிக்கிறது. இதன் இலைகளை கழுவி அப்படியே மென்றூ சாப்பிடலாம் அல்லது இரண்டு இலைகளை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். இதனால் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.



வேங்கை மரம் :
 வேங்கை இலை பொடி அல்லது வேங்கை இலை கிடைத்தால் அதை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். இவ்வாறு குடிப்பதால் நீங்கள் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதுமட்டுமன்றி அடிக்கடி சிறுநீர் கழிப்பதையும் அடிக்கடி பசி எடுப்பதையும் கட்டுப்படுத்தலாம். இந்த மூலிகையில் ஆண்டி ஹைப்பர் லிப்டெமிக் பண்புகள் இருக்கின்றன. இது கொழுப்பை கரைக்கவும் உதவும்.



நாவல் பழம் : 
நாவல் பழம் நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாவல் விதை பொடியை தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் நோரிழிவு நோயாளிகளுக்கு பல வகைகளில் நன்மை கிடைக்கும். இது சிறுநீரகம் செயலிழப்பையும் தவிர்க்க உதவுகிறது.



சிறுகுறிஞ்சான் : 
இது ஒவ்வமை, இறுமல், சளி, மலச்சிக்கல் போன்ற பல உடல் நல பாதிப்புகளுக்கு உதவுகிறது. இந்த தாவரத்தில் ஃபிலவனோல்ஸ் இருப்பதுதான் முக்கிய காரணியாக உள்ளது. எனவே இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க சாப்பிடுவதற்கு முன் ஒரு ஸ்பூன் சிறுகுறிஞ்சான் பொடியை ஒரு கிளாஸ் தண்ணீர் கலந்து குடித்தால் சீராக இருக்கும். இந்த பொடி நாட்டு மருந்து கடைகளில் கேட்கலாம்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!