நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இப்படியொரு திறமையா! - பயோடேட்டாவை பார்த்து வியந்து நேர்காணலுக்கு அழைத்த நிறுவனம்

 வழக்கமாக வேலைக்காக ஒரு நிறுவனத்தை அணுகும் போது ஒவ்வொருவரும் அவர்களது கல்வி, பணி அனுபவம், திறன்கள் மாதிரியான சுய விவரங்கள் அடங்கிய பயோடேட்டாவை சமர்பிப்பது வழக்கம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அதனை மின்னஞ்சல் மூலம் சமர்பித்து வருகிறோம். எழுத்துகளை கடந்து வீடியோ வடிவிலான பயோடேட்டா குறித்து கூட பலர் முயற்சி செய்து பார்த்திருக்கலாம். 


இருப்பினும் ஒவ்வொரு நிறுவனத்திலும் குவிக்கின்ற பல்லாயிரக்கணக்கான பயோடேட்டாக்களில் சில நூறு மட்டுமே வடிகட்டப்பட்ட நேர்காணல் செய்யப்படுகிறது. அதில் சில பேருக்குதான் வேலையும் கிடைக்கிறது.  

இந்நிலையில் அயல்நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் வேலைக்காக தனது பயோடேட்டாவை ஒரு நிறுவனத்தில் சமர்பித்துள்ளார். அதை படித்து பார்த்த அந்நிறுவனத்தின் அதிகாரிகள் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு திறனுக்காக அவரை நேர்காணலுக்கு அழைத்துள்ளனர். 


அப்படி என்ன எழுதினார்?

அந்த நபர் தனது தனித்திறன்களில் ஒன்றாக ‘GOOGLING’ என குறிப்பிட்டுள்ளார். அதனால் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் ஈர்க்கப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதனை அந்த நிறுவனத்தை சேர்ந்த Cat McGee என்ற சாப்ட்வேர் டெவலெப்பர் ட்விட்டர் தளத்தில் ட்வீட்டாக பகிர்ந்துள்ளார். 


அதற்கு நெட்டிசன்கள் பலர் பயோடேட்டா எழுதியவரை கொண்டாடி வருகின்றனர். அதனால் அந்த ட்வீட் வைரலாகியும் உள்ளது.  ‘சிலருக்கு கூகுளில் முறையாக தகவல்களை திரட்டுவது எப்படி என்று கூட தெரியவில்லை’ என்பது மாதிரியான கமெண்டுகளும் பறக்கின்றன. 

இதுவரை அந்த ட்வீட் 13200 பேர் ரீட்வீட் செய்துள்ளனர். 2557 கமெண்டுகளும், 1,84,000 லைக்குகளையும் பெற்றுள்ளது. 



ALSO READ : இந்தியாவை வல்லரசு நாடுகளுக்கு இணையாக உயர்த்தியவர் அப்துல்கலாம்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!